விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சியில் சுடுமண்ணால் ஆன குந்தளம் என்ற சிகை அலங்காரத்துடன் பாவையின் தலைப்பகுதி கண்டறியப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Continues below advertisement

2024 தொல்லியல் பணி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 18-ம் தேதி தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் 2024-ஆம் ஆண்டிற்கான அகழாய்வுப் பணிகளின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வுகளின் அறிவியல் அடிப்படையிலான பகுப்பாய்வு முடிவுகள் மூலம் தமிழ்நாட்டின் வரலாற்றில் புதிய வெளிச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழ்ச் சமூகமானது, கி.மு. ஆறாம் நூற்றாண்டில் படிப்பறிவும் எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக விளங்கியதை கரிமப் பகுப்பாய்வுகளின் முடிவுகள் வாயிலாக உறுதியாக நிலைநிறுத்தியுள்ளது. 
 

தமிழக அரசு அகழாய்வு

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சென்ற ஆண்டில் எட்டு இடங்களில் அகழாய்வு செய்ததைப் போன்று இவ்வாண்டியிலும் எட்டு இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படவுள்ளது சிறப்பாகும். அதன்படி,
 
1. கீழடி மற்றும் அதன் அருகிலுள்ள தொல்லியல் தளமான கொந்தகை, சிவகங்கை மாவட்டம் - பத்தாம் கட்டம்
2. வெம்பக்கோட்டை, விருதுநகர் மாவட்டம் மூன்றாம் கட்டம்
3. கீழ்நமண்டி, திருவண்ணாமலை மாவட்டம் இரண்டாம் கட்டம்
4. பொற்பனைக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் இரண்டாம் கட்டம்
5. திருமலாபுரம், தென்காசி மாவட்டம் - முதல் கட்டம்
6. சென்னானூர், கிருஷ்ணகிரி மாவட்டம் - முதல் கட்டம்
7. கொங்கல்நகரம், திருப்பூர் மாவட்டம் முதல் கட்டம்
8. மருங்கூர், கடலூர் மாவட்டம் - முதல் கட்டம்
 

விருதுநகர் வெம்பக்கோட்டை அகழாய்வு

வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டு நுண் கற்காலத்தை அறியும் வகையில் வைப்பாற்றின் வடகரையில் 3ம் கட்ட அகழாய்வு பணி கடந்த 18ம் தேதி முதல் துவங்கி நடைபெறுகிறது. முன்னதாக கண்ணாடி மணிகள், கல்மணிகள் மற்றும் பழங்கால செங்கற்கள் உள்ளிட்ட தொன்மையான பொருட்கள் கிடைக்கப்பெற்றது. இந்த சூழலில் 30.7 மி. மீ உயரமும் 25.6 மி. மீ அகலம் கொண்ட சுடுமண்ணால் ஆன குந்தளம் என்ற சிகை அலங்காரத்துடன் பாவையின் தலைப்பகுதி கண்டறியப்பட்டுள்ளது, ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக நடைபெற்ற இரண்டாம் கட்ட அகழாய்விலும்  இதே போன்ற சுடுமண் பொம்மை கண்டறியப்பட்ட நிலையில், முன்னோர்கள் கலைநயத்துடன் சிகைக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளதும் அழகிய வேலைப்பாடுகளுடன் சுடுமண் பொம்மை கலைநயத்துடன் தயாரித்துள்ளதும், இதன் மூலம் தெரிய வருவதாக தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - keezhadi Excavation: கீழடி 10ம் கட்ட அகழாய்வில் பாசிகள், கண்ணாடி மணிகள் கண்டெடுப்பு ; தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி !

Continues below advertisement

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு