தேனி மாவட்டத்தில் இருந்து தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் நாள்தோறும் திருப்பதிக்கு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.


உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ஆந்திரா , தெலங்கானா மாநிலங்கள் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா என பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.


புது சகாப்தம்! முதன்முறையாக தெ.ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்ற ஆப்கானிஸ்தான்!




பக்தர்களின் வசதிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ரயில் சேவை, பேருந்து சேவை மற்றும் விமான சேவைகள் திருப்பதிக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் அண்டை மாநிலமான தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திருப்பதிக்கு அரசு பேருந்து பேருந்து சேவை இயக்கப்பட்டு வருகிறது.


Rana Daggubati : அவர்கூட பேசின பிறகு என் வாழ்க்கையே மாறிடுச்சு..மருத்துவமனையில் ரஜினியை சந்தித்த அனுபவத்தை பகிர்ந்த ரானா டகுபதி


தற்போது தேனியில் இருந்தும் திருப்பதிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து மதுரை, திருச்சி, சென்னை, தென்காசி, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் திருப்பதிக்கு மட்டும் நேரடியாக பேருந்து சேவை இயக்கப்படாமல் இருந்தது. இதனால் கம்பம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அங்கிருந்து பேருந்து மூலம் திருப்பதிக்கு சென்று வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனை தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து திருப்பதிக்கு நேரடி பேருந்து சேவை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.




இந்நிலையில் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து திருப்பதிக்கு பேருந்து சேவையை தொடங்கியுள்ளது. இந்த பேருந்து கம்பத்தில் இருந்து நாள்தோறும் மாலை 6 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 8 மணிக்கு திருப்பதியை சென்றடையும். அதேபோல் திருப்பதியில் இருந்து தினமும் மாலை 5 மணிக்கு புறப்படும் பேருந்து மறுநாள் காலை 8 மணிக்கு தேனி மாவட்டம் கம்பம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Rasi Palan Today, Sept 21:சிம்மத்துக்கு பாராட்டு நிறைந்த நாள், கன்னிக்கு நிதானம் வேண்டிய நாள்: உங்கள் ராசிக்கான பலன்


கம்பத்திலிருந்து திருப்பதிக்கு ஒரு நபருக்கு 700 ரூபாய் டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த பேருந்தில் மொத்தம் 40 இருக்கைகள் உள்ளன. அரசின் ஆன்லைன் TNSTC இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய செய்து கொள்ளலாம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதே போல் இந்த பேருந்தில் சிறுவர்களுக்கு டிக்கெட் கட்டணமாக 350 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் என்பதால் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய விரும்பும் தேனி மாவட்ட மக்கள் தமிழக அரசின் இந்த பேருந்து போக்குவரத்து சேவையை பயன்படுத்தி கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தற்போது புரட்டாசி மாதம் என்பதால் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.