தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வராக பணியாற்றிவர் டாக்டர் மீனாட்சிசுந்தரம். இவர் மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் கேன்டீன்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக, கடை உரிமையாளரிடம் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதுகுறித்து அரசு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மீனாட்சிசுந்தரம் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது.


கேண்டீன் நடத்த ரூ. 16 லட்சம் லஞ்சம்; தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம் - அமைச்சர் உத்தரவு



இதையடுத்து அவரை பணி இடைநீக்கம் செய்து சுகாதாரத்துறை  உத்தரவிட்டது. இந்தநிலையில் மீனாட்சிசுந்தரம் லஞ்சம் வாங்கிய விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவக்கல்வி இயக்குனரகத்திற்கு  சுகாதாரத்துறை உத்தரவிட்டது. அதன்பேரில் மருத்துவக்கல்வி இயக்குனரகம் சார்பில் தனிக்குழு அமைத்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


Manipur Violence: மணிப்பூர் வன்முறை: 6,532 எஃப்ஐஆர் பதிவு...இதுவரை என்ன செய்தீர்கள்? - உச்சநீதிமன்றம் கேள்வி



OPS: ’சந்தர்ப்பவதாத அரசியல் செய்கிறார் ஓபிஎஸ்’ .. கொடநாடு ஆர்ப்பாட்டத்தை விமர்சித்த ஜெயக்குமார்..!


இந்த குழு இன்னும் ஓரிரு நாட்களில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வந்து விசாரணை தொடங்க உள்ளது. தேனி அரசு மருத்துவ கல்லூரி முதல்வராக பணியாற்றிய மீனாட்சிசுந்தரம் ஏற்கனவே மருத்துவக்கல்வி இயக்குனராக பதவி உயர்வு பெற்று பணியாற்று வந்தார். மேலும் இவர் வருகிற 31-ந்தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தேனி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் பணிஓய்வு பெற 30 நாட்களே உள்ள நிலையில் அவர் லஞ்ச புகாரில் சிக்கி பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண