தமிழகம், கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசனம் மற்றும் நீர் ஆதாரமாக இந்த அணை விளங்குகிறது. 152 அடி உயரம் கொண்ட முல்லைப்பெரியாறு அணையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 142 அடி வரை தண்ணீரை தேக்கி கொள்ளலாம். இந்நிலையில், தேனி மாவட்டத்தில் மட்டுமல்லாமல் முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. போதிய மழையின்மையாலும் அணையில் நீர் இருப்பும் நீர் வரத்தும் குறைந்து கொண்டே உள்ளது.


Sela Tunnel: உலகின் நீளமான இருவழி சுரங்கப்பாதையை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி; சிறப்பம்சங்கள் என்ன?



அதேபோல, தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதன் காரணமாக ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. இதற்கிடையே 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து கடந்த சில மாதங்களாக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளது. தற்போது முல்லை பெரியாறு அணையில் நீர் இருப்பு மற்றும் நீர் திறப்பும் குறைந்துள்ளதால் வைகை அணைக்கு வரும் நீர் வரத்தானதும் குறைந்துள்ளது.


Test Cricket Incentive: அடேங்கப்பா..! ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ.45 லட்சம் ஊக்கத்தொகை - கொட்டிக் கொடுக்கும் பிசிசிஐ


இன்றைய நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 121.50 அடியாக இருந்தது. மழையின்மையால் அணையின் நீர்மட்டம் உயரவில்லை. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 கன அடியாக இருந்தது. நீர் வெளியேற்றம் வினாடிக்கு 1222 கன அடியாக உள்ளது.


தேனி மாவட்டத்தில் மற்ற அணைகளின் இன்றைய நிலவரம்.


வைகை அணை


நிலை- 65.06  (71)அடி
கொள்ளளவு:4644Mcft
நீர்வரத்து: 121கனஅடி
வெளியேற்றம் : 72குசெக்வெசிட்டி:2511 Mcft


மஞ்சலார் அணை:
நிலை- 43(57) அடி
கொள்ளளவு:226.05Mcft
வரத்து: 7 கனஅடி
வெளியேற்றம்: 65 கியூசெக்


சோத்துப்பாறை அணை:


நிலை- 114.80 (126.28) அடி
கொள்ளளவு: 81.41Mcft
நீர்வரத்து: 12.90கனஅடி
வெளியேற்றம்: 25கனஅடி


சண்முகநதி அணை:


நிலை-32 (52.55)அடி
கொள்ளளவு:27.07 Mcft
வரத்து: 0 கனஅடி
வெளியேற்றம்: 14.47கியூசெக்.