உத்தமபாளைம் அருகே சாலை விபத்தில் மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி கண்முன்னே மைத்துனர் இறந்த துக்கம் தாங்க முடியாமல்  மின்கம்பம் மீது ஏறி உயர் அழுத்த மின் வயரினை (HD) பிடித்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


TN Rains: மதியம் 1 மணி வரை! 7 மாவட்ட மக்கள் குடையுடன் வெளியில் போங்க - உங்க ஊருல எப்படி?




தேனி மாவட்டம் உத்தமபாளையம்  பாறை மேட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் சார்பு ஆய்வாளரான இவருக்கு இரண்டு மகன்களான ஷாம் நிஜாந்த் மற்றும் ஷாம் வேதன் உள்ளனர். இவர்கள் இருவரும் அதே பகுதியில் வசிக்கும்  தங்களது மாமா நாகராஜ் என்பவரின் மகன் ஆனந்தராஜ் ஆகிய மூன்று பேரும் இரண்டு இரு சக்கர வாகனத்தில் கோம்பையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.அவர்களது உறவினரை பார்த்து விட்டு கோம்பையில் இருந்து உத்தமபாளையத்திற்கு வரும் மாநில நெடுஞ்சாலையில் மூன்று பேரும் இரண்டு இரு சக்கர வாகனத்தில் முன் பின்னாக வந்துள்ளனர்.


LIVE | Kerala Lottery Result Today (11.09.2024): கேரளா லாட்டரி Fifty Fifty FF 110.. 1 கோடி பம்பர் முதல் பரிசு! வெல்லப்போகும் அதிர்ஷ்டசாலி யார்?




அப்போது கருக்கோடை எனும் இடத்தில் வரும்பொழுது ஷாம் நிஜாந்த் ஓட்டி வந்த இருசக்கர வாகனம்  சாலையின் ஓரம் இருந்த புளிய மரத்தில் எதிர்பாராமல் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஷாம் நிஷாந்த் உயிர் இழந்துள்ளார். பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த அவரது மாமா ஆனந்தராஜ் மற்றும் அவரது தம்பி ஷாம் நிவேதன் ஆகியோர் விபத்து குறித்து உறவினர்களுக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற உறவினர்களும் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.


தங்கச்சி கல்யாணத்திற்காக கஞ்சா கடத்திய அண்ணன்! போலீசில் சிக்கியது எப்படி?




இந்நிலையில் சம்பவ இடத்தில் பெரும் சோகத்தில் அமர்ந்து இருந்த ஆனந்தராஜ் தனது கண்முன்னே இருசக்கர வாகன விபத்தில் மைத்துனர் உயிர் இழந்த துக்கம் தாங்க முடியாமல் அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது ஏறி உயர் மின் அழுத்த வயரினை கையில் பிடித்துள்ளார். அப்போது அவரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியதில் சம்பவ இடத்திலேயே அவரும் உயிரிழந்துள்ளார்.


அதிமுகவை தொடர்ந்து விஜய்க்கும் அழைப்பு விடுத்த திருமாவளவன் - தமிழக அரசியலில் நடப்பது என்ன?


இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அவரது பிரேதத்தையும் உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் தனது கண்முன்னே வந்த மைத்துனர் விபத்தில் உயிர் இழந்த சோகம் தாங்க முடியாமல் வாலிபர் மின்கம்பம் மீது ஏறி மின்சார வயரை பிடித்து உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Suicidal Trigger Warning..


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்க்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி


எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)