7 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்து தீ வைத்து எரித்துக் கொலை செய்த குற்றத்திற்காக இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


கடந்த 2022 ஆம் ஆண்டு தேனி மாவட்டம் சின்னமனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எரசக்கநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் உள்ள அங்கன்வாடி மையத்தின் எதிரே காலி இடத்தில் விளையாடிய 7 வயது சிறுமியை அதே ஊரைச் சேர்ந்த விஜயகுமார் (22) என்ற இளைஞர் பாலியல் சீண்டல் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த சிறுமி நடந்ததை அவரின் பெற்றோரிடம் தெரிவிக்க போவதாக கூறியதை தொடர்ந்து இளைஞர் விஜயகுமார் சிறுமியின் ஆடையில்  தீ வைத்து  கொளுத்தியுள்ளார். 


Cyclone Dana: தீவிர புயலாக மாறிய டாணா; 200 ரயில்கள் ரத்து! மூடப்படும் கொல்கத்தா விமான நிலையம்




சிறுமியின் ஆடையில் தீ பற்றி எரியவே சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் வந்து பார்த்த பொழுது  சிறுமிக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.  இதனைத் தொடர்ந்து தீக்காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள சிறுமியை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் தீக்காயம் அதிக அளவில் இருந்ததால் சிறுமியை மேலும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


இந்தியாவுக்கு வழிகாட்டும் தென்னிந்தியா.. நாளை, ஏபிபி நெட்வொர்க்கின் ‘தி சதர்ன் ரைசிங் மாநாடு 2024’




இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில்  சின்னமனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு  வழக்கு விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று வழக்கு விசாரணை முடிவுற்று சாட்சியங்கள் மற்றும் சிறுமியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில்  இளைஞர் விஜயகுமார் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டது.


Rasipalan Today Oct 24:மேஷத்துக்கு அனுசரிப்பு தேவை; ரிஷபத்திற்கு தன்னம்பிக்கை - உங்கள் ராசிக்கான பலன்?




7 வயது சிறுயை பாலியல் சீண்டல் செய்த குற்றத்திற்காக குற்றவாளி விஜயகுமாருக்கு 2012 குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பு சட்ட பிரிவு 9(M) மற்றும் 10ன் கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால்  மேலும் ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்ததோடு, சிறுமியை தீ வைத்து எரித்த குற்றத்திற்காக இந்திய தண்டனைச் சட்டம் 302ன் கீழ் ஆயுள் தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால்  மேலும் இரண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை என இரு தீர்ப்புகளை நீதிபதி கணேசன் வழங்கினார்.


TN Rains: 10 மணி வரை 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்! மழை பெய்யப்போகும் 12 மாவட்டங்கள் எது?


மேலும் சிறுமியை இழந்து பாதிப்புக்கு உள்ளான  குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாய்  நிதி உதவி வழங்க தமிழ்நாடு அரசுக்கு ஆணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இத்திற்பனை தொடர்ந்து குற்றவாளியை சிறையில் அடைக்க காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.