வேங்கன் பெரிய உடையாத் தேவரின் கல்வெட்டு

 

சிவகங்கை தொல்நடைக் குழுவினர் சில நாள்களுக்கு முன்னர் பழச்சாறு கடைக்கு முன்பகுதியில் இருந்து 224 ஆண்டு பழமையான 1800 ஆம் ஆண்டு சிவகங்கை ஐந்தாவது மன்னரான வேங்கன் பெரிய உடையாத் தேவரின் கல்வெட்டு ஒன்றை கண்டெடுத்து அடையாளப்படுத்தினர். கல்வெட்டை முறையாக சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தனர். சிவகங்கையில் உலக மரபு நாளாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சிவகங்கை தொல்நடைக் குழுவினர் இந்நாளை கல்லூரி, பள்ளிகளில் கருத்தரங்கு நடத்தி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இவ்வாண்டு மாநில அளவில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்தி அதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு முதல் பரிசாக 2000 ரூபாயும் இரண்டாம் பரிசாக 1500 ரூபாயும் மூன்றாம் பரிசாக ஆயிரம் ரூபாயும் வழங்கினர். 

 


 

தொல்நடைபயண கையேடு


 

பள்ளியளவில் மூன்றாம் இடத்தை பிடித்த இருவருக்கு தனித்தனியே ஆயிரம் ரூபாய் மூன்றாம் பரிசாக வழங்கப்பட்டது. சிவகங்கை தொல்நடைக் குழுவில் பயணிக்கும் சிவகங்கை தொல்நடைக் குழுவின் துணைத் தலைவர் மாநில நல்லாசிரியர் ம.முனீஸ்வரன் அவர்கள் பணி நிறைவு பெற்றதை ஒட்டியும் சிவகங்கை தொல்நடை பயணத்தில் தொல்நடைப் பயண கையேடு வெளியிடுவதில் சிறந்த பங்காற்றிவருவதற்கும் அவரைப் பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு சிவகங்கை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் தி. பக்கிரி சாமி  வரவேற்புரை உரைத்தார், சிவகங்கை தொல்நடைக் குழுத்தலைவர் நா. சுந்தரராஜன் தலைமை வகிதார், சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா முன்னிலை வகித்தார், சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானம் மேதகு ராணி  மதுராந்தகி நாச்சியார் அவர்களும் மதுரை மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் முனைவர் மீ.மருது பாண்டியன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

 

பலரும் பங்கேற்பு


 

சிவகங்கை மன்னர் பள்ளி குழும செயலர் குமரகுரு, சிவகங்கை அணு இதழ் ஓவியர் முத்துக்கிருஷ்ணன், சிவகங்கை தொல்நடைக் குழு செயற்குழு உறுப்பினர் வித்தியா கணபதி, பணி நிறைவு பெற்ற தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பா. இளங்கோவன் ஆகியோர் வாழ்த்துரைத்தனர், நிகழ்வின் இறுதியில் சிவகங்கை தொல்நடைக் குழு பொருளாளர் ம.பிரபாகரன் நன்றி உரைத்தார். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை சிவகங்கை தொல்நடைக் குழு செயலர் இரா.நரசிம்மன், செய்திருந்தார். இதில் சிவகங்கை தேவஸ்தான மேலாளர் பா. இளங்கோ, பள்ளி கல்லூரி மாணவர்கள்,சிவகங்கை தொல்நடைக் குழுவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஆறுமுகம், ஆசிரியர்கள் முத்துக்குமரன், பாலமுருகன், சார்பு ஆய்வாளர் காளீஸ்வரன், இலக்கிய வடிவு, அந்தோணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.