Just In

கட்ட பொம்மனுக்கு எட்டயபுரம் அரசர் துரோகம் செய்தாரா? தவறான தகவலை நீக்க வலியுறுத்தல்

ஆராய்ச்சியில் அசத்திய புதுச்சேரி மாணவி.. ஜெர்மனிக்கு சென்று படிக்க கிடைத்த வாய்ப்பு.. வாவ்

மனித கழிவை மனிதர்களே அள்ளும் அவலம்.. திருப்பூர் சம்பவத்தை கையில் எடுத்த NHRC

Deputy Tahsildar Job: 30 துணை தாசில்தார் காலி பணியிடங்கள்... முழு விவரம் உள்ளே !

இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
மூதாட்டிகளை குறி வைத்துக் கொள்ளை... துப்பாக்கியால் சுட்டுபிடிக்கப்பட்ட கொள்ளையனின் தாய், மனைவி
மாணவியிடம் நிர்வாண வீடியோ கால்: கொதித்தெழுந்த மாணவிகள்! பாஜக தாளாளர் கைது
நர்சிங் மாணவிக்கு வீடியோ காலில் செக்ஸ் டார்ச்சர்: உறவினர்கள் போராட்டத்தால் கல்லூரி தாளாளர் கைது!
Continues below advertisement

அருப்புகோட்டை
அருப்புக்கோட்டையில் தனியார் நர்சிங் மற்றும் கேட்டரிங் கல்லூரி சேர்மன் கல்லூரி மாணவியிடம் வீடியோ காலில் நிர்வாணமாக பேசியதாக பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். பழைய பேருந்து நிலையம் சாலையில் அமர்ந்து மாணவிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் தனியார் எலக்ட்ரோ ஹோமியோபதி மற்றும் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த கல்லூரியின் சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ் (முன்னாள் பா.ஜ.க சிறுபாண்மை பிரிவு மாவட்ட தலைவர்) கடந்த 6 மாதத்திற்கு முன் அதே கல்லூரியை சேர்ந்த ஒரு மாணவியிடம் வீடியோ காலில் நிர்வாணமாக ஆபாசமாக பேசியதாக கூறப்படும் வீடியோ தற்போது அந்த கல்லூரி மாணவிகளிடம் பரவியது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவிகள் கல்லூரியில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி கல்லூரிக்குச் செல்லாமல் கல்லூரி வாயிலில் நின்று தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் மாணவிகளை சமரசம் செய்ய வந்த போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸை நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
கல்லூரியில் தங்கள் எதிர்காலம் குறித்தும் தங்களுடைய சான்றிதழ்கள் மற்றும் கட்டிய பணத்தை உடனடியாக திரும்பி தர வலியுறுத்தியும் கல்லூரி மாணவிகள் பெற்றோர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பழைய பேருந்து நிலையம் செல்லும் பிரதான சாலையில் திடீரென சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் வந்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவோம் எனக்கூறி போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சமாதானத்தை ஏற்காமல் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தால் மதுரை விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து அதிகாரிகள் மாணவிகளிடம் உன் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தய பின் அங்கிருந்து சென்றனர்.
தாஸ்வின் ஜான் கிரேஸ் மீது அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார். 354 ஏ பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்தல், 354 பி- பாலியல் உறவுக்காக தொந்தரவு செய்தல், 354சி- பெண் நிர்வாண வீடியோவை பார்த்தல், 506- அந்தரங்க விடியோவை அனுப்பச் சொல்லி மிரட்டுதல், ஒரு பெண்ணிடம் செல்போனில் ஆபாசமாக பேசுவது, ஆதிதிராவிடர் பழங்குடியின பெண்ணிடம் பாலியல் உணர்வை தூண்டும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மிஸ்டுகால் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு போட்டி போட முடியாது - பாஜகவை விமர்சித்த கி. வீரமணி
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.