தைப்பூசம் தவிர விசேஷ நாட்கள் எதுவும் இல்லை என்பதால் பூக்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. ஆனாலும் கூட மல்லிகைப்பூ வரத்து வழக்கம் போல் மிக குறைவாகவே உள்ளது.


மவுசு குறையாத மதுரை மல்லிகைப் பூ


மீனாட்சியம்மனுக்கு அடுத்தபடியாக மதுரை என்றதும் நினைவிற்கு வருவது மல்லிகைப் பூ தான். தனித்துவமான நிறம், வாசனை, பூவின் கெட்டித் தன்மை என்று மதுரை மற்றும் மதுரையை சுற்றியுள்ள பகுதியில் விளையக்கூடிய பூக்களுக்கு தனி மவுசு உள்ளது. இதனால் மதுரை மல்லிகைப் பூக்கள் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடு என நாள்தோறும் டன் கணக்கில் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆன்மீக நகரமாக கருதப்படும் மதுரையிலிருந்து பூக்களை வாங்க வியாபாரிகள் பெரிதும் விரும்புகின்றனர். மதுரையில் கிடைக்கும் பூக்கள் தான் வாசனை திரவியங்களுக்கும் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் மதுரை மல்லிப்பூவின் விலை கடந்த வாரம் ரூ.5 ஆயிரம், 4500 வரை விற்பனையானது. இந்த சூழலில் முகூர்த்த நாட்கள் குறைந்ததால் தற்போது 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.


- Valentines Day: "சேரா காதல்தான்.. ஆனால் தீராக்காதல்" காலத்திற்கும் அழியா ஒரு தலைக் காதல் படங்கள்!







மதுரை மலர் சந்தையில் பூக்களின் இன்றைய விலை நிலவரம்:


 

மதுரை மல்லி கிலோ ரூ.3000, மெட்ராஸ் மல்லி ரூ.1000, பிச்சி ரூ.1500, முல்லை ரூ.1500, செவ்வந்தி ரூ.150, சம்பங்கி ரூ.200, செண்டு மல்லி ரூ.60, கனகாம்பரம் ரூ.1000, ரோஸ் ரூ.200, பட்டன் ரோஸ் ரூ.250, பன்னீர் ரோஸ் ரூ.300, கோழிக்கொண்டை ரூ.30, அரளி ரூ.300, தாமரை (ஒன்றுக்கு) ரூ.25 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தைப்பூசம் தவிர விசேஷ நாட்கள் எதுவும் இல்லை என்பதால் பூக்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. ஆனாலும் கூட மல்லிகைப்பூ வரத்து வழக்கம் போல் மிக குறைவாகவே உள்ளது. அடுத்த சில நாட்களிலும் இதே விலை நிலவரம் நீடிக்கும் அல்லது விலை குறைய வாய்ப்பு உள்ளது” என மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முருகன் கூறினார்.