Just In





நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக பாம்புகளுடன் போராட்டம் - 51 பழங்குடியினர் மீது காவல்துறை வழக்குப்பதிவு
’’சூர்யாவுக்கு எதிராக அசம்பாவிதங்கள் நடக்கும் பட்சத்தில் அவர்கள் மீது விச பாம்பை கொண்டு எறிவோம் என்று பழங்குடிகள் போராட்டத்தின்போது கூறியிருந்தனர்’’

கீழடியில் மீன் சின்னம் பொறிக்கப்பட்ட சுடுமண் உறை கிணறு கண்டுபிடிப்பு...!
இந்நிலையில் நேற்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக பழங்குடியினர் கூட்டமைப்பின் சார்பில் பழங்குடியின மக்கள் இணைந்து பாம்புகள், எலிகள், தோல் பாவைக்கூத்து, பூம்பூம் மாடு உள்ளிட்டவற்றையும் நடனத்திற்காக சூர்யாவிற்கு நன்றி தெரிவிப்பதாக கூறி ஆதரவு போராட்டத்தை நடத்தினர். அப்போது இது குறித்து பேசிய கூட்டமைப்பின் தலைவர் மகேஸ்வரி, ஜெய்பீம் படத்தில் எங்களுடைய சமுதாயம் சந்திக்கும் இன்னல்களை சூர்யா அப்படியே காட்டியுள்ளார். தற்பொழுது சூர்யா எதிராக பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சூர்யாவுக்கு எதிராக அசம்பாவிதங்கள் நடக்கும் பட்சத்தில் அவர்கள் மீது விச பாம்பை கொண்டு எறிவோம் என்று ஆவேசமாக கூறினார். இந்த நிலையில் நடிகர் சூர்யா மற்றும் 'ஜெய்பீம்' திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பாம்புகள், எலிகளோடு ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்நாடு பழங்குடி நாடோடிகள் கூட்டமைப்பை சேர்ந்த 21 பெண்கள் உட்பட 51 பேர் மீது தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.