துபாயிலிருந்து மதுரை வந்த விமான பயணியிடமிருந்து 141 கிராம் எடையுள்ள 7 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்டது






 

மதுரை மாவட்டம் மதுரை விமான நிலையம் துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து நேற்று துபாயிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த பயணிகளிடம் சுங்க இலக்கா நுண்ணறிவு பிரிவினர் தீவிர சோதனைகளில் ஈடுபட்டனர்.



 


 

அப்போது இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வீரபாண்டியன் என்ற பயணியிடம் இருந்து ட்ரில்லிங் மிஷின் கீ எனப்படும் கருவியில் மறைத்து வைக்கப்பட்ட தங்கம் மற்றும் அலைன் கீ எனப்படும் நவீன ஸ்பானரில் மறைத்து வைக்கப்பட்ட தங்கம் கைப்பற்றப்பட்டது. விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட தங்கத்தின்  மொத்த எடை 141 கிராம் இதன் மதிப்பு 7,19,382 லட்சம் ரூபாய் என கண்டறியப்பட்டது.  இதனை தொடர்ந்து மத்திய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து பயணியிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.