சென்னை, சித்தரஞ்சன் சாலை, முதலமைச்சரின் முகாம் அலுவலகத்திலிருந்து இன்று மா மதுரை விழாவை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.


மாமதுரை போற்றுவோம்


யங் இந்தியன்ஸ்’ அமைப்பின் சாா்பில் இன்று ஆகஸ்ட் 8, மற்றும் 9, 10, 11 ஆகிய நாள்களில் மாமதுரை விழா” நடைபெற உள்ளது. மதுரை தமுக்கம் மைதானம், லட்சுமி சுந்தரம் மகால், மகாத்மா பள்ளி, வண்டியூா் தெப்பக்குளம், மடீட்சியா அரங்கம், வைகைக் கரை உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ள இந்த நிகழ்வில் பொதுமக்கள், மாணவா்களுக்கு விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள் சுற்றுலாவை மேம்படுத்த பட்டம் விடும் திருவிழா, பலூன் திருவிழா,  அடுக்குமாடி பேருந்து பயணம், பாரம்பரிய நடைபயணம், சைக்கிள் ஓட்டுதல், உணவுத் திருவிழா, வியாபார சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை மாநகரில் வண்ணமயமான அழகிய ஓவியங்கள், சிற்பங்களும் அமைக்கப்பட்டுளளன. ஏற்கனவே  மாமதுரை நிகழ்விற்கான அறிமுக பாடலை cii & யங் இந்தியன் குழுவினர் வழங்க மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பெற்றுக் கொண்டு வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


- என் மேல கேஸ் போடுங்க! சிறையில் இருக்கும் நண்பனை பார்க்கணும்! - இளைஞர் செயலால் அதிர்ச்சி அடைந்த போலீஸ்


தமிழக முதல்வர் துவக்கி வைத்தார்


இந்நிலையில் சென்னை, சித்தரஞ்சன் சாலை, முதலமைச்சரின் முகாம் அலுவலகத்திலிருந்து இன்று மா மதுரை விழாவை தமிழக முதல்வர் துவக்கி வைத்தார். மதுரை, தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் மதுரை நகரத்தின் மரபையும், பண்பாட்டையும் கொண்டாடும் "மா மதுரை" விழாவை காணொளி வாயிலாக துவக்கி வைத்த பின் விழாப்பேருரை ஆற்றினார்.


விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி


மா மதுரை விழா குறித்து மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில்..,” மதுரையில் கடந்த காலப் பெருமிதத்தையும், நிகழ்காலச்சிறப்பையும் எதிர்கால நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் விதமாக இவ்விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. மதுரை என்ற மாநகரில் ஏராளமான விசயங்களை கவனிக்கும் போது பல வியப்பான விசயங்களை தெரிந்து கொள்ள முடியும். மதுரையில் இருக்கும் மரங்களுக்கு கூட வரலாறு இருக்கிறது. மதுரையின் மத்தியில் பாலமாக அமைந்திருக்கும் ஏ.வி பாலம் நூற்றாண்டு கடந்து நிற்கிறது. இதற்கு சமூக ஆர்வலர்கள் பிறந்தநாள் கொண்டாடுகின்றனர். செல்லூர் பகுதியில் உள்ள ஆலமரத்திற்கு சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடினார்கள். இப்படி ஒவ்வொன்றையும் மதுரை மக்கள் கொண்டாடி தீர்ப்பார்கள். வரலாற்றில் பதித்த சித்திரைத் திருவிழா ஆயிரம், ஆயிரம் கதைகள் சொல்லும். வைகை ஆற்றின் தென்கரையிலும், தென் கரையிலும் நடக்கும் இந்த கொண்டாட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும். சென்னைக்கு மெரினா போல மதுரைக்கு வண்டியூர் தெப்பக்குளம் மிக மிக்கிய இடமாக மாறி வருகிறது. அழகர்கோயில், அரிட்டாபட்டி, கீழக்குயில்குடி, திருமலை நாயக்கர் மஹால், திருப்பரங்குன்றம், காந்தி மியூசியம் என்று ஏராளமான இடங்களில் முக்கிய விடயங்களை கூட இந்த திருவிழாவில் தெரிந்து கொள்லலாம்” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - அமைச்சர்களுக்கு ஷாக்.! விடுவித்தது செல்லாது! நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு! இதுதான் தேதி!


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - பெற்றோரே ஜாக்கிரதை! கவனமா பார்த்துக்கோங்க! ஃபிரிட்ஜை திறந்த 5 வயது சிறுமி பலி!