கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அரிக்கொம்பன் என்ற காட்டு யானை தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்தது. அங்குள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை  சேதம்  செய்து வந்ததுடன், 20-க்கும் மேற்பட்டோரை அந்த யானை உயிர்பலி வாங்கியுள்ளது. இதையடுத்து கேரள வனத்துறையினர் அந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, தமிழக-கேரள எல்லையாக இருக்க கூடிய பெரியாறு புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட தேக்கடி மேதகானம் வனப்பகுதியில் விட்டனர்.


The Kerala Story Review: வெறுப்பு பிரச்சாரமா? உண்மை கதையா? தி கேரளா ஸ்டோரி விமர்சனம்!




இந்தநிலையில் அந்த காட்டு யானை அங்கிருந்து இடம்பெயர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஹைவேவிஸ் மலைப்பகுதிக்கு வந்துள்ளது. மேலும் நேற்று முன்தினம் அதிகாலை இரவங்கலாறு பகுதியில் உள்ள தோட்ட தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்கு அரிக்கொம்பன் காட்டு யானை வந்துள்ளது.


Chennai Airport : சென்னை விமான நிலையத்தில், அதிகரித்த பயணிகளின் எண்ணிக்கை.. குறைந்த விமானங்கள்..




அப்போது குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு, அங்கிருந்த அரிசி மூட்டையை எடுத்து தின்றது. பின்னர் அங்கிருந்து காட்டு யானை சென்றுவிட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஹைவேவிஸ் பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே அரிக்கொம்பன் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


TN Rain Alert : அடுத்த 5 நாட்களுக்கு இங்கெல்லாம் மழை இருக்காம்.. உஷார் மக்களே.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!




CM Stalin: சாதி மதம் என மக்களைப் பிரித்து பார்ப்பவர்களுக்கு திராவிட மாடல் புரியாது - முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி..!


இதற்கிடையே வனத்துறை உயர் அதிகாரிகள் இதுதொடர்பாக நேற்று ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் வனத்துறையினர் சார்பில் கூறப்படுவதாக அரிக்கொம்பன் காட்டு யானை ஹைவேவிஸ் மலைப்பகுதியில் தொடர்ந்து முகாமிட்டுள்ளது. தற்போது அந்த யானை அப்பர் மணலாறு பகுதியில் உள்ளது. பொதுமக்கள் அத்துமீறி வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம். அந்த யானை வனத்துறையின் கண்காணிப்பில் உள்ளது. மேலும் அதன் அடுத்தக்கட்ட நகர்வுகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை   என்று பொதுமக்களுக்கு அறிவுரை கூறியுள்ளனர்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண