திண்டுக்கல் திருச்சி ரோடு, கரூர் பைபாஸ் சாலை உள்ளிட்ட நான்கு இடங்களில் ஆளும் கட்சி பிரமுகர் ஒருவரின் ஆதரவுடன் "கோல்ட் ஸ்டார்" என்ற பெயரில் அசைவ உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த அசைவ உணவகத்திற்கு வந்த வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவர் பிரியாணி மற்றும் சிக்கன் ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு உணவகத்தின் ஊழியர்கள் பிரியாணி மற்றும் சிக்கனை சப்ளை செய்துள்ளனர். ஆனால் அவருக்கு சப்ளை செய்யப்பட்ட சிக்கனில் இருந்து துர்நாற்றம் வீசவே அவருக்கு சப்ளை செய்த ஊழியரிடம் இது பற்றி கேட்டுள்ளார்.


Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!



ஆர்டர் செய்தவருக்கு கெட்டுப்போன சிக்கனை கொடுத்த ஊழியர்கள் - நடவடிக்கை எடுக்க தயங்கும்  அதிகாரிகள்


அவர்கள் பதில் எதுவும் கூறாத காரணத்தினால் நவீன், சமையல் அறைக்குள் உள்ளே நுழைந்து பார்த்த பொழுது முதல் நாள் சமைத்து வைத்து விற்பனையாகத சிக்கனை குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்து சுடவைத்து கொடுத்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட நவீன் அங்கிருந்த நபர்களிடம் கேட்ட பொழுது,  அவர்கள் பதில் எதுவும் கூறவில்லை. இதன் பின்னர் நடந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் நவீன் புகார் தெரிவித்தார்.


Bajaj Freedom CNG Bike: உலகின் முதல் CNG பைக்கை அறிமுகப்படுத்திய அமைச்சர் கட்கரி - சிறப்பம்சங்கள், விலை?




காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?


மேலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த போதிலும் ஆளும் கட்சி பிரமுகர் ஆதரவில் நடந்து வரும் உணவு விடுதி என்பதால் அவர்களும் இதைப்பற்றி கண்டு கொள்ளவில்லை. மேலும் இது பற்றி தகவல் அறிந்த ஆளுங்கட்சி பிரமுகர்கள் ஆதரவாளர்கள் புகார் கொடுத்த நவீனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டி உள்ளனர். இருப்பினும் நவீன் தான் பாதிக்கப்பட்டது போல் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்று பல்வேறு இடங்களில் புகார் தெரிவித்து வருகிறார்.