பழனி முருகன் கோயில் சார்பில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தங்கள் காலாவதி தேதி முடிந்து இன்று கெட்டுப்போன 66 கேன்களில் டன் கணக்கிலான பஞ்சாமிர்தங்களை ஏற்றி சென்ற வாகனத்தை பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Haryana CM: ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா - அமைச்சரவை கூண்டோடு கலைப்பு




அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மற்றும் விசேஷ காலம் லட்சக்கணக்கான மக்கள் வருகை தரும் நிலையில் திருக்கோவில் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் பஞ்சாமிர்தம், லட்டு, அதிரசம், முறுக்கு  உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு திருக்கோவில் ஊழியர்கள் வைத்து ஆங்காங்கே கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் தைப்பூசத் திருவிழா முன்னிட்டு தயாரிக்கப்பட்ட பிரசாதங்கள் அனைத்தும் இன்று வரை பஞ்சாமிர்தங்கள் விற்பனை ஆகாமல் தேக்கமடைந்துள்ளது என கூறப்படுகிறது.  கடந்த தைப்பூசத்தை முன்னிட்டு கூடுதலாக 1 லட்சம் பஞ்சாமிர்தங்கள் தயாரிக்கப்பட்டதாகவும் அதில் இருந்த பஞ்சாமிர்தங்கள் காலாவதி தேதி முடிந்து விற்பனை செய்யப்படுவதாகவும் பக்தர்கள் குற்றச்சாட்டு எழுந்து வந்தது. 


திருமண ஊர்வலத்தில் நடந்த சோகம்! லாரி மோதிய விபத்தில் 6 பேர் பலி!




இந்த நிலையில் அதனை செய்திகளில் ஆதாரங்களுடன் வெளியிட்டிருந்தது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் தாங்கள் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் காலாவதி தேதி குறிப்பிட்ட 15 நாட்களில் இருந்து கூடுதலாக 15 நாட்கள் வைத்து பயன்படுத்தலாம் என விளக்கம் அளித்து இருந்தனர்.


திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு: யாருக்கு எங்கே? வெளியான அறிவிப்பு




இந்த நிலையில் இன்று காலை அடிவாரத்தில் உள்ள பஞ்சாமிர்த தயாரிப்பு நிலையத்திலிருந்து சுமார் ஒரு கேன்களுக்கு 50 கிலோ விதம் 66 கேன்கள் மூலமாக லாரியில் காலாவதியான பஞ்சாமிர்தங்களை ஒட்டன்சத்திரம் அருகே கள்ளி மந்தையம் கோசலா வளாகத்தில் வைத்து அழிப்பதற்காக கொண்டு செல்லும்போது பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் லாரியை தடுத்து நிறுத்தி சிறை பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இந்து அமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி காலாவதியான பஞ்சாமிர்தம் லாரியை அடிவாரம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.