திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே நிலத்தை அளக்கும் போது போலீசார் முன்னிலையில்  காவல் சிறப்பு ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்  காவலர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் குமாரவேல். இவர் திண்டுக்கல் காவல் ஆயுதப்படையில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பாக்கியம் இவரும் சிறப்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். குமாரவேலுக்கு திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் பூர்வீக சொத்து ஒரு ஏக்கர் 4 சென்ட் நிலம் உள்ளது.


150 மோமோஸ்களை ஒரே நேரத்தில் சாப்பிடும் சவால்... சோகத்தில் முடிந்த சேலஞ்... என்ன நடந்தது?


இவரது நிலத்துக்கு அடுத்து வேங்காயி என்பவரின் 40 சென்ட் நிலம் உள்ளது. இதில் நீதிமன்ற தீர்ப்பின்படி அவரவருக்கு சேர வேண்டிய நில அளவைகள் தீர்ப்பு வெளியிட்டு பல வருடங்களாகியும் நிலத்தை சர்வேயர் மூலம் அளந்து கல் ஊண்டினாலும், அதனை பிடுங்கி எறிந்து விடுவது என வழக்கமாக கொண்டுள்ளனர். குமாரவேலுவின் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் வேங்காயுடன் சேர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் செம்பன், ரவி ஆகியோர் இடத்தை அளக்கவிடாமல் ஒவ்வொரு முறையும் பிரச்சனை செய்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நில அபகரிப்பு புகாரில் விசாரணை முடிந்து காவலர் குமாரவேலுக்கு சாதகமாக முடிவு வந்தது.


TN Govt Reward: விபத்தில் சிக்கியோரை காப்பாற்றினால் ரூ.10,000 - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு




இது சம்பந்தமாக ஏற்கனவே நான்கு முறை சர்வேயர் வைத்து நிலத்தை அளந்து பிரச்சனையாகியுள்ளது. இதுகுறித்து மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்து வடமதுரை போலீசார் பாதுகாப்புடன் நிலத்தை சர்வேயர் அளந்த பொழுது, சார்பு ஆய்வாளர் குமாரவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது,  வேங்காயி, செம்பன், ரவி மற்றும் 10க்கும் மேற்பட்டோர் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த குமாரவேல் மற்றும் பூச்சம்மாள் ஆகியோர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Actor Karthi: படிப்ப மட்டும் விட்டுடாத சிதம்பரம்.. வீட்டில் ஒருவர் படித்தால் தலைமுறையே முன்னேறும் - நடிகர் கார்த்தி




சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் பாதுகாப்பில் இருக்கும் பொழுது சிறப்பு சார்பு ஆய்வாளர் குமாரவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண