விபத்தில் சிக்கியோரை காப்பாற்றினால் ரூ. 10,000 வெகுமதி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 


சாலை விபத்தில் சிக்கியோரை காப்பாற்றினால் ரூ.10,000 வெகுமதி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 


சாலை விபத்தி காயம் அடைந்த நபர்களுக்கு உதவி செய்வோர்களை ஊக்குவிக்கும் வகையில் வெகுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மத்திய அரசால் அளிக்கப்பட்ட ரூ.5,000 தொகையுடன் மாநில அரசின் சார்பில் கூடுதலாக ரூ.5,000 வழங்கப்பட உள்ளது.


உயிரைக் காப்பாற்ற வெகுமதி


சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவும் நற்கருணை வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏற்கெனவே மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த ரூ.5 ஆயிரம் தொகையுடன், மாநில அரசின் பங்களிப்பாக சாலை பாதுகாப்பு நிதியில் இருந்து கூடுதலாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.


விதிமுறைகள் என்னென்ன?


வெகுமதி பெறுவதற்கு சாலை விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக (கோல்டன் ஹவர்) மருத்துவமனைக்கு ழைத்துச் சென்று, உயிரை காப்பாற்றியிருக்க வேண்டும். விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள்ள் குறித்த விவரங்களை காவல் நிலையம் அல்லது மருத்துவமனையிடம் பெற்று மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்வார்கள் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் கீழ் வெகுமதி பெற தகுதியானவர்கள்  குறித்த பரிந்துரையை மாதந்தோறும் போக்குவரத்து ஆணையரகத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுப்பி வைக்கப்படும். அதிலிருந்து,  தேர்வு செய்யப்படுவோரது வங்கிக் கணக்கில் ஆணையரகம் சார்பில் ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்படும். உதவி செய்தவர்கள் தங்களது அடையாளத்தை வெளியே சொல்ல வேண்டும் என்று விரும்பாதவர்களுக்கு வெகுமதி வழங்கப்படாது எனவும் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வெகுமதி பெறுவதற்கான நெறிமுறைகள்


உயிர்களை காப்பாற்றுவோருக்கு விபத்து எண்ணிக்கைக்கு ஏற்ப தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.  ஒரே விபத்தில் பல உயிர்களை ஒருவர் காப்பாற்றியிருந்தால் அவருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். ஒருவரின் உயிரை பலர் காப்பாற்றியிருந்தால் ரூ.5 ஆயிரம் பகிர்ந்தளிக்கப்படும் என அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது.


அதேபோல், ஒரே விபத்தில் பலரின் உயிரை பலர் காப்பாற்றியிருந்தால் அவர்கள் அனைவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படுவதோடு, ரொக்கப் பரிசுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் எனவும், இத்திட்டம் 2026-ம் ஆண்டு மார்ச் 3-1ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொதுவாகவே, சாலையில் விபத்துக்குள்ளானவர்களை மருத்துவமனையில் சேர்க்க, சில காரணகளுக்காகப் பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள். அவர்களின் அச்சத்தைப் போக்கி பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் ரூ.5000 அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது, மத்திய, மாநில அரசு சார்பில் மொத்தமாக ரூ.10,000 வழங்கப்படும்.




மேலும் வாசிக்க..


Rain Alert: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... இதுல உங்க மாவட்டம் இருக்கா..?


Chandrayaan 3 Travel: ”3-வது கட்டமும் சக்ஸஸ், அடுத்த 19 நாள் இதுதான் வேலை” .. கச்சிதமாக முன்னேறும் சந்திரயான் 3 விண்கலம்