Just In





மதுரையில் நடிகர் சூரி நடித்த கருடன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் பால்குடம் எடுத்துக் கொண்டாட்டம் !
நடிகர் சூரி நடித்த கருடன் திரைப்படம் வெளியான நிலையில் மேள தாளங்களுடன், பால்குடம் எடுத்து மதுரையில் ரசிகர்கள் கொண்டாட்டம்.

மக்கள் மனதை வென்ற சூரி
மதுரை மண்ணின் மைந்தன் சூரி, காமெடியில் இருந்து தேர்ந்த நடிகராக உருவெடுத்துள்ளார். விடுதலை படத்துக்குப் பிறகு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மீண்டும் பிரதான கதாநாயகனாக கருடன் திரைப்படம் என்ற படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இயக்குநர் துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் சசிக்குமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, ஷிவதா, ரேவதி ஷர்மா, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி, ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் இப்படத்தின் கதையை எழுதியுள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின. இப்படத்தின் ட்ரெய்லர் முன்னதாக வெளியாகி கவனமீர்த்து பாராட்டுகளைப் பெற்ற நிலையில், இன்று திரையரங்குகளில் வெளியாகியானது. இந்நிலையில் நடிகர் சூரியின் சொந்த ஊரான மதுரையில் ரசிகர்கள் மேள, தாளங்களுடன் பால்குடம் எடுத்து கொண்டாடினர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Garudan Movie Review: நட்பு, பகை, விஸ்வாசம்.. மீண்டும் ஹீரோவாக ஜெயித்தாரா சூரி.. கருடன் விமர்சனம் இதோ!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Donald Trump: வரலாற்றில் முதல்முறை - 34 குற்றங்களில் டிரம்ப் குற்றவாளி என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு