பழனியில் 14ம் நூற் றாண்டை சேர்ந்த செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டு அதை தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.


திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்த திருமஞ்சன பண்டாரம் சண்முகம் பாதுகாத்து வைத்திருந்த செப்பேட்டை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, இச்செப்பேடு ஆயிர வைசியர் சமூகம் தம் குடிகளின் கெதி மோட்சத்திற்காக உருவாக்கப்பட்டது. 3 கிலோ எடையும், 49 செமீ உயரமும், 30 செமீ அகலமும் கொண்டதாக உள்ளது.


Jaiswal Double Century: விடாது விரட்டி இரட்டை சதத்தை கடந்த ஜெய்ஸ்வால்.. குவிந்த பல்வேறு சாதனைகள்..!




இச்செப்பேடு பழனிமலை முருகனுக்கு திருமஞ்சனம், வில் வார்ச்சனை, தினசரி விளா பூஜை செய்ய வேண்டி பழனியில் வசிக்கும் செவ்வந்தி பண்டாரத்திற்கு ஏற்படுத்தி கொடுத்த திருமஞ்சன கட்டளையை விரிவாக கூறுகிறது. இச்செப்பேடு கிபி 14ம் நூற்றாண்டில் (1363) சோபகிருது ஆண்டு தை மாதம் 25ம் தேதி வியாழக்கிழமை தைப்பூச நாளில் பெரியநாயகி அம்மன் சன்னதி முன்பாக எழுதி வெளியிடப்பட்டுள்ளது. பழனி ஸ்தானீகம் சின்னோப நாயக்கர், புலிப்பாணி, பழனிக்கவுண்டன் ஆகியோரை சாட்சியாக வைத்து எழுதப்பட்டுள்ளது. இச்செப்பேட்டில் 518 பேர் கையொப்ப மிட்டுள்ளனர்.


Crime: முன்பகை! ஆள் மாற்றி திருநங்கையை கொலை செய்த இளைஞர் - நடந்தது என்ன?




ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா, பன்றிக்காய்ச்சல்..!


செப்பேட்டின் முகப்பில் விநாயகர், கைலாசநாதர், பெரியநாயகி அம்மன், முருகன், செவ்வந்தி பண்டாரம், ஆயிர வைசியரின் சின்னமான செக்கு ஆகியவை கோட்டுருவமாக வரையப்பட்டுள்ளன. தொடர்ந்து முருகனின் புகழ் 5 பாடல்களில் பாடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.