Breaking LIVE : ராகுல் காந்தியின் தேசிய ஒற்றுமை யாத்திரையில் கமல் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு..!

Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

முகேஷ் Last Updated: 18 Dec 2022 07:25 PM
Breaking LIVE : கத்திப்பாரா மேம்பாலத்தில் கார் எரிந்து விபத்து!

கத்திப்பாரா மேம்பாலத்தில் கார் எரிந்து விபத்து ஏற்பட்டது. சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. ஓட்டுநர் சுதாரித்து கொண்டு காரை விட்டு வெளியே வந்ததால் அவருக்கு பெரிதாக எவ்வித பாதிப்பும் இல்லை.

ராகுல் யாத்திரையில் கமல்ஹாசன் பங்கேற்பு..!

ராகுல் காந்தியின் தேசிய ஒற்றுமை யாத்திரை பயணத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். 

Breaking Live : பீகாரில் கள்ளச்சாரய மரணம் 83ஆக அதிகரிப்பு

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 83ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாரயம் அருந்தி 27 பேர் கண் பார்வையை இழந்த நிலையில், 31 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Breaking Live : டிசம்பர் 22-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் டிசம்பர் 22-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோன்று, டிசம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Breaking Live : அன்னூர் போராட்டம் - ஆட்சியர் தலைமையில் குழு அமைக்க முடிவு

கோவை மாவட்டம் அன்னூர் போராட்டம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் 17 பேர் கொண்ட குழு அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என ராசா எம்.பி தெரிவித்துள்ளார். அன்னூர் அருகே அமையவுள்ள தொழிற்பூங்காவுக்கு எதிராக நடைபயணம் மேற்கொண்டு வரும் ராசா எம்.பி. விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் தெரிவித்தார்.

Breaking Live : சென்னையில் விதிமீறி கட்டுமானம் - பொருட்கள் பறிமுதல்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் கட்டட அனுமதிக்கு மாறாக கட்டுமானம் நடந்த இடங்களில் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விதிமீறி கட்டுமானம் நடைபெற்ற 347 இடங்களில் இருந்து பொருட்களை பெருநகர சென்னை மாநகராட்சி பறிமுதல் செய்துள்ளது.

மதுராந்தகம் ஏரியில் தலைமைச் செயலாளர் ஆய்வு..!

செங்கல்பட்டு மதுராந்தகம் ஏரியில் தூர்வாரும் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார். 2, 411 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் ரூ. 120.24 கோடியில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. 

மாநகராட்சி குப்பை லாரி மோதி இளைஞர் பலி..!

சென்னை எழும்பூர் ஆணையர் அலுவலக சாலையில் குப்பை லாரி மோதி இளைஜர் சாதிக் பாஷா என்ற 23 வயது இளைஞர் உயிரிழப்பு

பயணிக்கு உடல்நிலை பாதிப்பு - விமானம் தரையிறக்கம்..!

ஜெட்டாவில் இருந்து கோலாலம்பூர் சென்ற விமானத்தில் பயணிக்கு உடல்நலக்குறைவால் விமானம் தரையிறக்கப்பட்டது. 

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி..!

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

211 வது நாளாக மாறாத பெட்ரோல் விலை..!

மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 211ஆவது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (டிச.18) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

புரோ கபடி: சாம்பியன் பட்டம் வென்றது ஜெய்ப்பூர்..!

புரோ கபடி: புனே அணியை வீழ்த்தி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஜெய்ப்பூர்

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து: அர்ஜெண்டினா - பிரான்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: மகுடம் சூடப்போவது யார்? அர்ஜெண்டினா - பிரான்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை. 

வெற்றி விளிம்பில் இந்தியா... 4-ம் நாள் முடிவில் வங்காளதேச அணி 272 ரன்கள் சேர்ப்பு!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் : 4-ம் நாள் முடிவில் வங்காளதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் சேர்ப்பு

கோமாரி நோய்க்கு தடுப்பூசி வேண்டும்... மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்..!

கோமாரி நோயினால் கால்நடைகள் பாதிக்கப்படுவதால் தமிழ்நாட்டுக்கு உடனடியாக 90 லட்சம் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனவரி 2ம் தேதி திருச்சியில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

சொர்க்கவாசம் திறப்பை முன்னிட்டு திருச்சியில் ஜனவரி 2ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Background

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இருநூறு நாள்களைக் கடந்து மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலை ரூ. 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40 க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து ஐந்து மாநிலத் தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 


இன்றைய விலை


இதன்பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 211ஆவது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (டிச.18) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. இந்நிலையில், விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை இருநூறு நாள்களை முன்னதாகக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  


எத்தனால் கலந்த பெட்ரோல்


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை' 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


 இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும் என பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோர் லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.