பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார். 


அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக டெல்லி சென்றுள்ள உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநரும் தற்போது பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநருமாக உள்ள பன்வாரிலால் புரோகித்தின் பேத்தி திருமண விழா நேற்று இரவு டெல்லியில் நடைபெற்றது. அதில் கலந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். 


இந்நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிவிக்கப்பட்டது. அப்போது பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரையும் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி சந்தித்து பேச உள்ளார். 


அமைச்சருடன் உதயநிதி சந்திப்பு:


தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர், திறன் மேம்பாடு&மகளிர் சுய உதவிக் குழுக்கள் மேம்பாட்டு திட்டங்களுக்கான‌ கூடுதல் நிதி ஒதுக்கீடு & மானியங்கள் குறித்து,  ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்- யை சந்தித்து அமைச்சர் உடன் உதயநிதி ஸ்டாலின் உரையாடினார்.


பிரதமருடனான சந்திபிற்கு விளக்கம்: 


பிரதமர் மோடியை சந்தித்த பிறகு அமைச்சர் உதயநிதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பிரதமரை சந்தித்தது ஏன் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார். 


“டெல்லி வரும்போது தன்னை சந்திக்குமாறு பிரதமர் மோடி கூறியிருந்தார். அதன்படி அவரை இன்று சந்தித்தேன். நீட் தேர்வு விலக்கு குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்தேன். அப்போது அவரும் சில விளக்கங்களை கொடுத்தார். நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் தொடரும் என பிரதமரிடம் தெரிவித்தேன். நீட் தேர்வு குறித்த தமிழக மக்களின் மனநிலையை பிரதமரிடம் எடுத்து கூறினேன். மத்திய அரசின் துறைகளில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க கோரினேன். கேலோ இந்தியா போட்டியை தமிழ்நாட்டில் நடத்தும் வாய்ப்பை தருமாறு பிரதமரிடம் கேட்டேன்” எனத் தெரிவித்தார்.


பிரதமர் மோடியுடனான இந்த சந்திப்பில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். 


நேற்றைய தினம் டெல்லி சென்ற உதயநிதி ஸ்டாலின் டெல்லி தமிழ்ச் சங்கத்தலைவர் சக்தி பெருமாள், துணைத் தலைவர் ராகவன் உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து உரையாடினார். தொடர்ந்து டெல்லி முத்தமிழ்ப் பேரவை டெல்லி தமிழ்க் கல்விக் கழக நிர்வாகிகளையும் அவர் சந்தித்தார். பின்னர் தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநரும், பஞ்சாப்பின் தற்போதைய ஆளுநருமான பன்வாரிலால் புரோகித்தின் பேத்தி திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். 




மேலும் வாசிக்க.. 


MK Stalin Birthday: வருடத்திற்கு 2 அல்லது 3 முறை எனக்கு பிறந்தநாள் வரக்கூடாதா? - முதலமைச்சர் சொன்ன காரணம் இதுதான்..!


மேலும் வாசிக்க-Jasprit Bumrah Surgery: நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுகிறாரா பும்ரா? மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் அதிர்ச்சி..!