Pm Campaign: கர்நாடகாவில் நாளை மாலையுடன் ஓயும் தேர்தல் பிரச்சாரம்... பிரதமர் மோடி தீவிர பரப்புரை

கார்நாடகாவில் நாளை மாலையுடன் தேர்தல் பிராச்சரம் முடிவடையும் நிலையில், பிரதமர் மோடி இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். 

Continues below advertisement

கார்நாடகாவில் நாளை மாலையுடன் தேர்தல் பிராச்சரம் முடிவடையும் நிலையில், பிரதமர் மோடி இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். 

Continues below advertisement

கர்நாடக தேர்தல் வரும் 10-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. நாளை மாலையுடன் பிராச்சாரம் ஓயும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகாவில்  இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.பெங்களூருவில் 10 கிமீ தூரத்துக்கு திறந்த வாகனத்தில் அவர் பேரணி மேற்கொண்டு வருகிறார்.

நேற்று காலை 10 மணிக்கு பெங்களூருவில் உள்ள கோனன குண்டே சோமேஷ்வரா கோயிலில்பிரதமர் மோடி  சிறப்பு பூஜை செய்து வழிபாட்டார். பின் மைசூரு தலைப்பாகை அணிந்து, காவி நிற பிரச்சார வாகனத்தில் நின்றவாறு சாலை பேரணி மேற்கொண்டார். வாகனத்தில் பெங்களூரு மத்திய தொகுதி எம்.பி. பி.சி.மோகன், பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி. தேஜஸ்வி சூர்யா ஆகியோர் அவருடன் நின்று மக்களை பார்த்து கையசைத்த‌னர்.

சாலையின் இரு புறங்களிலும் நின்றிருந்த மக்கள் மோடியை வரவேற்கும் விதமாக ‘‘மோடி.. மோடி'' என வழிநெடுக கோஷமிட்டனர். மேலும், அவர் மீது மலர்களை தூவினர். பதிலுக்கு மோடியும் மலர்களை தூவினர். பிரச்சாரத்தின்போது மோடி எழுப்பிய, ‘‘பாரத் மாதா கீ ஜெய், ஜெய் பஜ்ரங் பலி'' ஆகிய கோஷங்களை ஒலிபெருக்கி மூலம் வழிநெடுக ஒலிக்க செய்த‌னர். பாஜக தொண்டர்கள் பலர், ஹனுமான் வேடமணிந்தும், மோடியின் முகமூடி அணிந்தும், பேரணியில் பங்கேற்றனர்.

இரண்டரை மணி நேரத்தில் 26 கிமீ தூரம் திறந்த வாகனத்தில் நின்றவாறு பயணித்து 13 சட்டப்பேரவைத் தொகுதிகளை சேர்ந்த வாக்காளர்களிடம் பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார். பிற்பகல் 12.30 மணியளவில் பேரணி நிறைவடைந்தது. இதுகுறித்து பாஜக எம்பி பி.சி.மோகன் கூறுகையில், ‘‘இந்தப்பேரணியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் என்றார்.

பிரதமர் மோடி தனது சமூகவலைதள பக்கத்தில், ‘‘பெங்களூருவில் நான் கண்ட‌தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என் மீது அன்பை பொழிந்ததற்காக இந்த துடிப்பான நகரத்தின் மக்களுக்கு தலைவணங்குகிறேன். இதை என் வாழ்நாள் முழுவதும் மனதில் வைத்து போற்றுவேன்'' என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க

CM Stalin : "ஓட்டு போட்டவர்களுக்கு மட்டும் இல்லை...போடாதவர்களுக்கும்" - ஒரே போடாய் போட்ட முதல்வர் ஸ்டாலின்!

 

Continues below advertisement