Karnataka Election Results 2023 LIVE: திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலுமாக அகற்றம் - கர்நாடக தேர்தல் முடிவு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து..!
Karnataka Election Results 2023 LIVE Updates: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
கர்நாடகாவில் ஆட்சி அமைக்க 113 தொகுதிகள் தேவைப்படும் நிலையில், 114 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
50 தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்றதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், 14 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
தற்போது வரை, மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 107 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், 29 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
கர்நாடக தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், "அவர்களுக்கு (பாஜக) மக்கள் பாடம் புகட்டுவார்கள். சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய அனைத்து தேர்தல்களிலும் அவர்கள் பாடம் கற்பார்கள்" என்றார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல், ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். "பிரிவினையை நிராகரிக்க வேண்டும் என கர்நாடக மக்களை நீங்கள் நம்பினீர்கள், அவர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து ஒற்றுமையாக பதிலடி கொடுத்தனர். வெற்றிக்கு மட்டுமல்ல வெற்றி பெற்ற விதத்திற்கும் பாராட்டுக்கள்" என கமல் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது என தேர்தல் முடிவு குறித்து திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் மக்களாட்சியையும், அரசியலமைப்பு விழுமியங்களையும் மீட்டெடுக்க எதிர்க்கட்சிகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
"பாஜகவின் முதலாளித்துவ நண்பர்களின் சக்தியை ஏழைகளின் சக்தி தோற்கடித்துள்ளது" என தேர்தல் முடிவு குறித்து ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
"வெற்றியும் தோல்வியும் பாஜகவுக்கு புதிதல்ல. தோல்வி குறித்து சுயபரிசோதனை செய்வோம்" என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பாஜக 45 தொகுதிகளில் முன்னிலை வகித்து வரும் நிலையில், 17 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
101 தொகுதிகளில் முன்னிலை வகித்து வரும் காங்கிரஸ், 36 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
"ஏழை மக்கள் கர்நாடகாவில் குரோனி முதலாளிகளை தோற்கடித்தனர். நாங்கள் இந்த போரில் வெறுப்பை பயன்படுத்தி போராடவில்லை" என கர்நாடக தேர்தல் முடிவு குறித்து ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசி வருகிறார்.
"காங்கிரஸ் கட்சிக்கு மகத்தான தீர்ப்பை வழங்கிய கர்நாடக மக்களுக்கு நன்றி. அவர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை நிலைநாட்டுவோம். தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள அனைத்து நலத்திட்டங்களையும் நிறைவேற்றுவோம். உடல்நிலை சரியில்லாத போதும் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சோனியா காந்தி ஆகியோருக்கு நன்றி" என காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார்.
"கர்நாடக தேர்தல் முடிவுகள், மக்களவை தேர்தலுக்கான படிக்கட்டாக அமையும். ராகுல் காந்தி, பிரதமராவார்" என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதிகாரப்பூர்வமாக முடிவு அறிவிக்கப்பட்ட 14 தொகுதிகளில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி கிட்டதட்ட உறுதியான நிலையில் பேசிய ப. சிதம்பரம், இனி இந்திய மக்கள் விழித்து கொள்வார்கள் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
கர்நாடக மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம் என மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் 130 க்கு அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள காங்கிரஸ் தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.
கர்நாடக அமைச்சரும் பாஜக முக்கிய தலைவருமான ஸ்ரீராமுலு பெல்லாரி புறநகர் தொகுதியில் தோல்வி
கர்நாடக தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடிக்கு கிடைத்த தோல்வி என சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.
ராம்நகர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி தோல்வியடைந்தார்.
காங்கிரஸ்-4, பாஜக-2 இடத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் பிரதமர் மோடி 20 முறை பரப்புரை செய்தார், அது மக்களிடம் எடுபடவில்லை என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடக தேர்தலில் மக்கள் முடிவை ஏற்று கொள்கிறேன் என மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
3 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.
பாஜக ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு ராஜினாமா கடிதம் வழங்க பசவராஜ் பொம்மை திட்டம்
கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து டி.கே. சிவக்குமார் ஆனந்த கண்ணீர் வடித்தார்.
முதலமைச்சர் யார் என்பது பற்றி ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் நடைபெற்ற மோசமான ஆட்சி நிர்வாகத்துக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளதாக மல்லிகார்ஜூன கார்கே பேட்டியளித்துள்ளார்.
பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த லக்ஷ்மண் சவதி அத்தாணி தொகுதியில் வெற்றிபெற்றார்.
சோனியா காந்தி, ராகுல் காந்தி, டி.கே. சிவகுமாருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போனில் வாழ்த்து தெரிவித்தார்.
கர்நாடகா மாநில தேர்தல் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ள நிலையில் சேலம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியினரின் ஒட்டுமொத்த உழைப்புக்கு கிடைத்த வெற்றி என டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் வெற்றி கொண்டாட்டத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சென்ற கார் சிக்கியது.
செல்லகரை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரகுமூர்த்தி வெற்றி பெற்றார்.
கர்நாடக தேர்தல் வெற்றி ராகுலில் நடைபயணத்திற்கு கிடைத்த வெற்றி என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் தோல்வியை ஒப்புக்கொண்டார் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 5 தொகுதிகளில் சுயேச்சைகள் முன்னிலையில் உள்ளனர். அதன்படி, அப்சல் பூர்ம் ஹரப்பனஹள்ளி, ஹவுரி பீதனூர், மாலூர், புட்டூர் ஆகிய தொகுதிகளில் சுயேச்சைகள் முன்னிலை
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஹிரெகெரூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக அமைச்சர் பி.சி.பாட்டீல் தோல்வி
வெற்றிபெறும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பெங்களூருவுக்கு வர வேண்டும் என காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது. கட்சி தாவலை தடுக்க காங்கிரஸ் கட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாஜகவின் ஊழலால் வெறுப்படைந்து மக்கள் காங்கிரஸுக்கு வாக்களித்துள்ளனர் என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரம் என்ன..?
கர்நாடக தேர்தலில் தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்வோம் என பசவராஜ் பொம்மை பேட்டியளித்தார்.
கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் தற்போது 124 தொகுதிகளிலும், பாஜக 69 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலைவிட கூடுதலாக 50 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.
மைசூரு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 தொகுதிகளில் 8 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை.
சாம்ராஜ் நகர், குடகு மாவட்டங்களில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றுகிறது காங்கிரஸ்.
கல்கட்கி சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சந்தோஷ் 22,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
கர்நாடக தேர்தலில் 126 தொகுதிகளில் முன்னிலை பெற்று 43 சதவீத வாக்குகளுடன் வலுவான நிலையில் காங்கிரஸ் உள்ளது.
126 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வரும் நிலையில் 67 தொகுதிகளில் மட்டுமே பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
சிக்கமகளூரு தொகுதியில் போட்டியிட்ட தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி பின்னடைவில் உள்ளார்.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, விஐபி தொகுதியான ஷிகாவ்னில் காங்கிரஸ் கட்சியின் யாசிர் அகமது கான் பதானை எதிர்த்து 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் கனகபுரா தொகுதியில் 72% சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
கர்நாடகத்தில் முன்னிலை நிலவரப்படி பாஜக 70 தொகுதிகளுக்கும் கீழே சென்றது.
கனகபுரா தொகுதியில் போட்டியிட்ட கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டிகே சிவக்குமார் முன்னிலையில் உள்ளார். கனகபுரா தொகுதியில் டிகே சிவக்குமாரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக அமைச்சர் பின்னடைவு.
இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 72% வாக்குகள் டிகே சிவக்குமாருக்கு பதிவாகியுள்ளது. பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு தலா 12 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, ஹிகாரிபுரா தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.
குமாரசாமி மகன் நிகில் போட்டியிடும் ராம்நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் இக்பால் உசேன் முன்னிலையில் உள்ளார்.
கர்நாடக தேர்தலில் மொத்தமுள்ள 6 மண்டலங்களில் ஹைதராபாத் கர்நாடகா, மும்பை கர்நாடகா மற்றும் மைசூரு ஆகிய 3 மண்டலங்களில் காங்கிரஸ் அதிக வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றிமுகம்.
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல்
தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி காலை 11 மணி முன்னணி நிலவரம் :
223/224
காங்கிரஸ் - 117
பாஜக - 71
மத சார்பற்ற ஜனதா தளம் - 28
மற்றவை - 7
கர்நாடகத்தில் தனிப்பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட கர்நாடகத்தில் தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. வெற்றி உறுதியாகும் நிலையில் இருப்பதை அடுத்து ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை காங்கிரஸ் தொடங்கி உள்ளது.
தற்போதைய நிலவரப்படி பெங்களூருவில் உள்ள தொகுதிகளில் பாஜக -16, காங்கிரஸ் -11, மஜத -1 முன்னிலை வகித்து வருகிறது.
கர்நாடகாவில் நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெற்றி முகம் காணும் காங்கிரஸ் வேட்பாளர்களை பெங்களூர் ரிசார்ட்டுக்கு அழைத்துவர 12 ஹெலிகாப்டர்கள் ஏற்பாடு.
கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் நேற்று அங்கு பாஜக வாக்குச்சாவடி பிரமுகர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் உள்ள 6 மண்டலங்களில் 5ல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.
பாஜக மூத்த தலைவர் எடியூரப்பாவின் சொந்த மாவட்டமான ஷிமோகாவில் 7 இடங்களில் 5ல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.
கனகபுரா தொகுதியில் அமைச்சர் அசோகா மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
அண்மையில் பாஜகவிலிருந்து விலகி காங்கிரசில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், தொடர்ந்து பின்னடைவு
குமாரசாமியின் மகன் நிகில், ராமநகரம் தொகுதியில் பின்னடைவு
யாரும் எதிர்பார்த்திடாத பகுஜன் சமாஜ்வாதி கட்சி கூட தமிழகர்கள் வாழும் புலிகேசி தொகுதியில் முன்னிலை வகிக்கும் சூழலில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை
ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி 93 வாக்குகள் வித்தியாசத்தில் சென்னபட்னா தொகுதியில் மீண்டும் முன்னிலை
கர்நாடகா சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் சிம்லாவில் பிரியங்கா காந்தி சிம்லாவில் உள்ள ஜக்கு ஹனுமான் கோயிலில் சிறப்பு வழிபாடு
கே.ஜி.எஃப்., சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ள நிலையில், பெங்களூருவில் உள்ள ஹில்டன் ஓட்டலில் நாளை எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ள நிலையில், பெங்களூருவில் உள்ள ஹில்டன் ஓட்டலில் நாளை எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான தினேஷ் குண்டுராவ் பெங்களூரு காந்தி நகர் தொகுதியில் பின்னடைவு
தேர்தலில் பின்னடைவை சந்திப்பதால் கர்நாடக பாஜக அலுவலகம் வெறிச்சோடியது.
கர்நாடக தேர்தலில் பின்னடைவில் இருந்த மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி தற்போது முன்னிலை.
பெல்லாரி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நரபரத் ரெட்டி முன்னிலை. சுரங்க அதிபர் ஜனார்த்தன ரெட்டியின் மனைவி லக்ஷ்மி அருணா 2வது இடம்.
தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 43.6 சதவீதமும், பாஜக 36.6 சதவீதமும் வாக்குகளை பெற்றுள்ளன.
தேர்தல் ஆணையம் இதுவரை வெளியிட்ட முடிவின்படி 100 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை. பாஜக 68 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைய இணையதளத்தில் தகவல்.
மைசூரு, கடலோடர கர்நாடகவை சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர்களை பெங்களூரு அழைத்துவர திட்டம்.
முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, ஷிகாரிபுரா தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறது.
முன்னாள் முதலமைச்சரும் மதசார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி சென்னபட்னா தொகுதியில் பின்னடைவு
கனபுரா தொகுதியில் போட்டியிட்ட கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே. சிவக்குமார் முன்னிலையில் உள்ளார்.
"பெரும்பான்மையுடன் நாங்கள் ஆட்சி அமைப்போம், அதில் எந்த சந்தேகமும் இல்லை. பிரதமரின் எதிர்மறையான, பிளவுபடுத்தும் பிரச்சாரம் பலனளிக்கவில்லை": காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா
தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 45.4 சதவீதமும், பாஜக 36.2 சதவீதமும் வாக்குகளை பெற்றுள்ளன.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 8 பாஜக அமைச்சர்கள் பின்னடைவில் உள்ளனர்.
பெங்களூருவில் உள்ள 32 தொகுதிகளில் காங்கிரஸ் 18 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
எனது அப்பாதான் முதலமைச்சர். அதில், எந்த மாற்றமும் இல்லை என சித்தராமையா மகன் யதிந்திர சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களுக்கும் அதிகமான தொகுதிகளில் காங்கிரஸ் 120 இடங்களுடன் முன்னிலை வகித்து வருகிறது.
கொள்ளேகால் தொகுதியில் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்து வருகிறார்.
தற்போதைய நிலவரம் என்ன..?
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வரும் நிலையில் டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டம்.
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் 135 தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறது.
பெங்களூரு காந்தி நகர் தொகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் முன்னிலை - தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி சிக்மங்களூர் தொகுதியில் பின்னடைவு
தமிழர்கள் அதிகம் வசிக்கும் புலிகேசி தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார்.
பெரும்பான்மைக்கு 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில், 122 இடங்களுடன் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. இதன்மூலம் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது.
கர்நாடகா தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 122 இடங்களில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
பெரும்பான்மைக்கு 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில், 121 இடங்களுடன் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.
கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் மீண்டும் 107 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான தினேஷ் குண்டுராவ், பெங்களூரு காந்தி நகர் தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.
பாஜக முதல் முறையாக கர்நாடக தேர்தலில் 113 இடங்களுடன் முன்னிலை வகித்து வருகிறது.
பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில் இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றனர்.
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் 112 இடங்களில் முன்னிலை வகித்து பெரும்பான்மையை நெருங்கி வருகிறது.
பாஜக உள்துறை அமைச்சராக இருந்த அரக ஞானேந்திரா, கனகபுரா தொகுதியில் போட்டியிட்ட அசோக், ராஜாஜி நகர் தொகுதியில் போட்டியிட்ட சுரேஷ் குமார் ஆகியோர் பின்னடைவை சந்தித்து வருகின்றன.
கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் 107 இடங்களிலும், பாஜக 97 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
பாஜக வேட்பாளர் ஸ்ரீராமுலு பெல்லாரி தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகிறார்.
வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் நிலையில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.
காங்கிரஸ் மீண்டும் 106 இடங்களிலும், பாஜக 87 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
தபால் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் இருந்த காங்கிரஸ் தற்போது பின்னடைவை சந்தித்து வருகிறது. தற்போது பாஜக 99 இடங்களிலும், காங்கிரஸ் 98 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே. சிவகுமார் முன்னிலை வகித்து வருகிறார்.
பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டர் முன்னிலை வகித்து வருகிறது.
தபால் வாக்குகளை தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
கர்நாடக தேர்தலில் 115 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.
மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே சித்தாபூர் தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார்.
தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் முதல்வர் பசவராஜ் பொம்மை கோயிலில் வழிபாடு நடத்தி வருகிறார்.
கர்நாடக தேர்தலில் தபால் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.
சென்னபட்னா தொகுதியில் பாஜக வேட்பாளர் யோகேஸ்வரா முன்னிலையிலும், குமாரசாமி பின்னடைவை சந்தித்தும் வருகின்றனர்.
கர்நாடகா தேர்தல் தபால் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் தற்போது 100 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
தபால் வாக்குகள் எண்ணப்படும் நிலையில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
வருணா தொகுதியில் சித்தராமையா முன்னிலை வகித்து வருகிறார்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக- காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
சிக்மகளூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சி.டி.ரவி முன்னிலை வகித்து வருகிறார்.
சென்னபட்ணா தொகுதியில் மஜத தலைவர் குமாரசாமி முன்னிலை வகித்து வருகிறார்.
ஹிக்கான் தொகுதியில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை முன்னிலை வகித்து வருகிறார்.
தபால் வாக்கு எண்ணிக்கையில் ஹூப்பள்ளி தார்வாட் மத்தி தொகுதியில் ஜெகதீஷ் ஷெட்டர் முன்னிலை வகித்து வருகிறார்.
தபால் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம்:
தபால் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம்:
சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அறுதிப்பெரும்பான்மை பெறும் என்று பாஜக முதலமைச்சர் வேட்பாளர் பசவராஜ் பொம்மை நம்பிக்கை
கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இன்று மாலைக்குள் 16வது சட்டமன்ற தேர்தலில் ஆட்சியமைக்கப் போவது யார் என்ற கேள்விக்கு விடை தெரிந்து விடும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பின்னர் இயந்திரங்களில் உள்ள வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் பணி 36 மையங்களில் நடைபெறுகிறது.
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே கர்நாடக தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
கர்நாடகாவில் காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். நாங்கள் தனித்து ஆட்சி அமைப்போம் என உறுதியாக நம்புகிறோம்: காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் மகனுமான யதீந்திர சித்தராமையா
கூட்டணி தொடர்பாக யாரும் என்னை தற்போது வரை சந்திக்கவில்லை என மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு கர்நாடகாவில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்குகளை எண்ணுவதற்காக மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் திறக்கப்பட்டன.
கர்நாடகாவில் இன்று ஒரு பெரிய நாள். காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. நாங்கள் 120 இடங்களுக்கு மேல் பெரும்பான்மை பெற வேண்டும். காங்கிரஸின் வெற்றியை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு கணிப்பது மட்டுமல்ல, தரை மட்டத்திலும் இது தெரியும், மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்: கே ரஹ்மான் கான், காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்
பெங்களூருவில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணும் பணியையொட்டி, 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை நிராகரித்த முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, தனது கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று உறுதிபடத் தெரிவித்தார்.
அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் லக்னோ காவல்துறையால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செல்போன் அல்லது எந்த வகையான ஆயுதத்தையும் வாக்கு எண்ணும் முகவர் மற்றும் வேட்பாளர் வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை: மார்டண்ட் பி.சிங், மதுரா எஸ்பி
காங்கிரஸ் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும்.கர்நாடக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள், தற்போதைய அரசாங்கத்தால் அவர்கள் சலிப்படைந்துள்ளனர் என்று கர்நாடகா காங்கிரஸ் நிர்வாகி சலீம் அகமது தெரிவித்துள்ளார்.
எங்கள் கொள்கைக்கு உட்பட்டு யார் பேச்சுவார்த்தைக்கு வந்தாலும் பேசத்தயார் என குமாரசாமி தெரிவித்துள்ளார்.
இன்னும் 2-3 மணி நேரத்தில் தெளிவாகிவிடும். இரு தேசியக் கட்சிகளும் அமோக வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. கருத்துக்கணிப்பு ஜேடிஎஸ்க்கு 30-32 இடங்களை அளித்துள்ளது.நான் ஒரு சிறிய கட்சி, எனக்கு எந்த தேவையும் இல்லை. நல்ல வளர்ச்சியை எதிர்பார்க்கிறேன் - ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 184 பெண் வேட்பாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை போட்டியிட்டனர்.
கர்நாடகாவில் பாஜக 224, காங்கிரஸ் 223, மஜத 206, ஆம் ஆத்மி 217 இடங்களில் போட்டியிட்டன. காங்கிரஸ், பாஜக, மஜத இடையே மும்முனை போட்டி நிலவும் நிலையில் 2,615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தேர்தலுக்கு பிந்தைய சில கருத்துக்கணிப்புகளில் தொங்கு சட்டப்பேரவைக்கு வாய்ப்பு என தகவல் வெளியானது. பாஜக மற்றும் காங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைக்காவிடில் மஜதவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது.
தேர்தலில் போட்டியிடும் மூன்று கட்சிகளின் மூத்த தலைவர்களில் மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை முதலிடத்தில் இருக்கிறார். இவர் மீது அதிகபடியான எதிர்பார்ப்பு நிலவிகிறது. இவரை தொடர்ந்து, முன்னாள் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோரின் நிலைமை என்ன என்பது குறித்தும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. அதேபோல், மஜத தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி, முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் மீதும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இதுதவிர, அம்மாநில முன்னாள் துணை முதல்வர் லட்சுமண சவடி, சட்டசபை சபாநாயகர் விஷேஷ்வர் ஹெக்டே, பாஜக மூத்த தலைவர் எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.விஜயேந்திரா, காங்கிரஸ் தலைவரின் மகன் பிரியங்க் கார்கே உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வெற்றி எந்த அளவிற்கு இருக்கும் என்றும் உச்சகட்ட ஆர்வத்தில் இந்தியா உள்ளது.
காங்கிரஸ், பாஜக, மஜத இடையே மும்முனை போட்டி நிலவும் நிலையில் 2,615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கர்நாடக தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
Background
Karnataka Election Results 2023 LIVE
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தல் முடிவுகள் அரசியல் களத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சட்டமன்ற தேர்தல்
மத்தியில் ஆளும் அரசாக உள்ள பாஜக தென்னிந்தியாவில் ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகாவாகும். 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா மாநிலத்திற்கு கடந்த மார்ச் 29 ஆம் தேதியன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நாள் பற்றிய அறிவிப்பை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்டார். அதன்படி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், மே 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கான வேட்புமனுத்தாக்கல் ஏப்ரல் 13 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. கடந்த ஒரு மாதமாகவே கர்நாடகா முழுவதும் தேர்தல் திருவிழா களைக்கட்டியது. திரும்பும் திசையெங்கும் அரசியல் கட்சியினர் பிரச்சாரம், தொண்டர்கள் அணிவகுப்பு, வித்தியாசமான வாக்கு சேகரிப்பு என இந்தியா முழுமைக்கும் கர்நாடகா சட்டமன்ற தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்தியாவில் 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நடப்பாண்டு நடக்கவுள்ள தேர்தல்கள் அரசியல் கட்சிகள் இடையே மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதற்கு முன்மாதிரியாக கர்நாடகா சட்டமன்ற தேர்தல் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய 3 கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள் என பாஜக ஒருபுறம் களமிறங்க, மறுபுறம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்காகாந்தி என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் வருகை தந்தனர்.
விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு
திட்டமிட்டபடி கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடந்தது. பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் வாக்களித்தனர். இதில் 73.19 சதவீதவாக்குகள் பதிவாகிய நிலையில் ஆட்சி அமைக்க 113 இடங்களில் வெல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டாலும் அங்கு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி யாருக்கு ஆதரவு தரும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆட்சியமைக்கப்போவது யார்?
பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், சுயேட்சைகள் சேர்த்து மொத்தம் 2613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலில் பயன்படுத்தப்பட்ட 75,603 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் சீல் வைக்கப்பட்டு மண்டல மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு 2 கட்ட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று மாலைக்குள் 16வது சட்டமன்ற தேர்தலில் ஆட்சியமைக்கப் போவது யார் என்ற கேள்விக்கு விடை தெரிந்து விடும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -