Breaking LIVE : தமிழ்நாட்டின் 22 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு-வானிலை மையம்

Breaking LIVE : நாடு முழுவதும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 15 Oct 2022 01:45 PM
தமிழ்நாட்டின் 22 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு-வானிலை மையம்

தமிழ்நாட்டின் 22 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது

சத்யஸ்ரீ கொலை - முதலமைச்சர் வேதனை 

சத்யஸ்ரீக்கு நிகழ்ந்தது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறக் கூடாது. பள்ளி, கல்லூரிகள், பெற்றோரும் இளைய சக்தியை பாதுகாத்து வளர்க்க வேண்டும். ஆண்களின் வலிமை பெண்களை மதிக்கவும் பாதுகாப்பை தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.


சில இளைஞர்கள் என்ன மாதிரியாக வளர்கிறார்கள் என்பதை மாணவி உயிரிழப்பு உணர்த்துகிறது.சத்யஸ்ரீக்கு நடந்த துயரத்தை கண்டு மன வேதனை அடைகிறேன் - முதல்வர் ஸ்டாலின் 

திமுகவின் இந்தி தினிப்பு போராட்டம் தோல்வி அடைந்துள்ளது-அண்ணாமலை

இந்தி கட்டயாமாக்கப்படும் என கூறிய மத்திய அரசின் அறிக்கையை முதலமைச்சர் காட்ட வேண்டும்-அண்ணாமலை

முதல்வர் ஸ்டாலின் உரை

சென்னை ராயப்பேட்டையில் உள்ள நியூ கல்லூரியில் முதல்வர் ஸ்டாலின் உரை. 


வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வு. தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் நடத்தப்படும் வேலைவாய்ப்பு முகாம். 

பிற்போக்கான சட்டங்களை நீக்குவது அவசியம் : பிரதமர்

பிற்போக்கான காலனித்துவ சட்டங்களை அகற்றினால்தான் நாடு உண்மையாக முன்னேற முடியும் : பிரதமர் நரேந்திர மோடி 

உலகிலேயே அபாயகரமான நாடு பாகிஸ்தான்- அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

உலகிலேயே அபாயகரமான நாடு பாகிஸ்தான் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தி திணிப்பை எதிர்த்து, தமிழ்நாடு முழுவதும் திமுக இளைஞரணி ஆர்பாட்டம்

இந்தி திணிப்பை எதிர்த்து, தமிழ்நாடு முழுவதும் திமுக இளைஞரணி ஆர்பாட்டம் நடத்துகிறது. இந்நிலையில், StopHindiImposition என்ற ஹேஸ்டாக் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைவு 

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.37,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 45 குறைந்து ரூ.4690 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர் திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

பரந்தூர் விமான நிலைய விவகாரம் : தலைமைச் செயலகத்தில் இன்று பேச்சுவார்த்தை

பரந்தூரில் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களுடன் தலைமைச் செயலகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 

பரந்தூர் விமான நிலையம் : தலைமைச் செயலகத்தில் இன்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை

பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்கள்  நாளை மறுதினம் சட்டசபையை நோக்கி நடைப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் ஏற்பாட்டில் தலைமை செயலகத்தில், இன்று 10 மணியளவில் அமைச்சர் தங்கம் தென்னரசு, ஏ.வா வேலு, தா.மோ.அன்பரசு தலைமையில் பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு இயக்கம் கூட்டமைப்பு சார்பில் கிராம மக்கள் கலந்து கொள்கின்றனர்.

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை - ரூ. 1.12 கோடி பறிமுதல்

தீபாவளி வசூல் புகார் தொடர்பாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் ரூ. 1.12 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

டி20 உலக கோப்பையில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிசிசிஐ!

உலக கோப்பை டி20 தொடருக்கான ரோகித்சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

மகளிர் ஆசியக்கோப்பை டி20 தொடர்: இந்தியா - இலங்கை இன்று பலப்பரீட்சை

மகளிர் ஆசியக்கோப்பை டி20 இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை இன்று பலப்பரீட்சை நடத்த இருக்கின்றனர். 

நவம்பர் 1ம் தேதி முதல் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு சீட் பெல்ட் அணிவது கட்டாயம்..!

மும்பையில் நவம்பர் 1-ம் தேதி முதல் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சக பயணிகளும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொதுத்துறை ஊழியர்களுக்கு 10% போனஸ்.. அறிவித்த தமிழ்நாடு அரசு..!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுத்துறை ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

Background

Petrol, Diesel Price : தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 147வது நாளாக மாற்றமின்றி இன்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 100 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8உம், டீசல் விலை ரூபாய்க்கு 6உம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.


இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 147வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (அக்டோபர்.15) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.


தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் விலை உயர்த்தப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம், தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு கவலையின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.


பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 12 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.