Breaking News Tamil LIVE: ஏப்ரல் முதல் பாராசிட்டாமல் உள்ளிட்ட 800 மருந்து பொருட்களின் விலை உயர்வு

Breaking News Tamil LIVE Updates: இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.

ABP NADU Last Updated: 26 Mar 2022 08:44 PM
சென்னையில் 10 நிமிடத்தில் உணவு டெலிவரி இல்லை : காவல்துறை தகவல்

சொமேட்டாவின் 10 நிமிடத்தில் உணவு டெலிவரி திட்டம் சென்னையில் இல்லை என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றால் இறப்பு எதுவும் பதிவாகவில்லை

தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் இறப்பு எதுவும் பதிவாகவில்லை என்றும், அதேபோல், தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் 38, 025 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தமிழ்நாடு மருத்துவத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி : ஏப்ரல் 4 ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான முதலாமாண்டு வகுப்புகள் ராமநாதபுரம் கல்லூரியில் ஏப்ரல் 4 ம் தேதி தொடங்கும் எனவும், மாணவர்கள் ராமநாதபுரத்தில் தங்கியிருந்து கல்வி பயில தயாராக வரவேண்டும் என்று எய்ம்ஸ் நிர்வாகம் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் தேர்தல் : அதிமுக வெற்றி

கோவை வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் தேர்தலுக்கான போட்டியில் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஐந்து மொழிகளில் ரிலீஸ்... ஸ்டைலா, கெத்தா வெளியானது ‘பீஸ்ட்’ ரிலீஸ் போஸ்டர்

பீஸ்ட் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி இருக்கிறது. அதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடா மொழிகளில் பீஸ்ட் படம் வெளியாக இருப்பதாக அப்டேட் வந்திருக்கிறது. அந்தந்த மொழி போஸ்டர்களும் வெளியாகி உள்ளன. இந்த போஸ்டர்கள் வைரலாகி வருகின்றது. 

திருச்சி கூத்தைப்பார் பேரூராட்சி தேர்தல் ஒத்திவைப்பு

திருச்சி கூத்தைப்பார் பேரூராட்சி துணைத்தலைவர் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

அந்தியூர் பேரூராட்சியில், திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு.

அந்தியூர் பேரூராட்சியில், திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு.. மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளரின் பெயரை யாரும் முன்மொழியாததால் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்

மூன்று மாதங்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் விநியோகத் திட்டம் நீடிக்கும் - உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

மூன்று மாதங்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் விநியோகத் திட்டம் நீடிக்கும் - உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

மூன்று மாதங்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் விநியோகத் திட்டம் நீடிக்கும் - யோகி ஆதித்யநாத் அறிவிப்பு. இத்திட்டத்தின்படி, ரேஷன் பொருட்களுடன் கூடுதலாக 5 கிலோ தானியங்கள் அளிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

அன்னூர் பேரூராட்சித் தலைவராக திமுகவை சேர்ந்த பரமேஸ்வரன் போட்டியின்றி தேர்வு

அன்னூர் பேரூராட்சித் தலைவராக திமுகவை சேர்ந்த பரமேஸ்வரன் போட்டியின்றி தேர்வு. கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சியில் திமுக அதிமுகவினர் மோதல். காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் லேசான தடியடி

சேலம் மாவட்டம் நங்கவள்ளி மற்றும் வனவாசி பேரூராட்சி தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியுள்ளது.

சேலம் மாவட்டம் நங்கவள்ளி மற்றும் வனவாசி பேரூராட்சி தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியுள்ளது.

கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சித் தலைவராக திமுகவை சேர்ந்த பரமேஸ்வரன் போட்டியின்றி தேர்வு

கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சித் தலைவராக திமுகவை சேர்ந்த பரமேஸ்வரன் போட்டியின்றி தேர்வு. கடந்த முறை மறைமுக தேர்தலின் போது தலைவர் பதவிக்கு திமுகவினர் இரு தரப்பாக பிரிந்து மோதிக் கொண்டதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது

இந்தியாவில் ஒரே நாளில் 1,660 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் ஒரே நாளில் 1,660 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

வேலூரில் எலக்ட்ரிக் பைக் வெடித்து அப்பா - மகள் உயிழப்பு

வேலூர் சின்ன அல்லாபுரம் பகுதியில் எலக்ட்ரிக் பைக் வெடித்து விபத்துக்குள்ளானது. நாள்ளிரவு சார்ஜ் போட்டு தூங்கியபோது பேட்டரி வெடித்து புகைமூட்டம் உண்டாகி இருக்கிறது. புகைமூட்டத்தில் இருந்து தப்பிக்க பாத்ரூமில் ஒதுங்கிய அப்பா, மகள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவில் பயங்கரம்

ரஷ்யாவில் இராணுவ நடவடிக்கைகள் குறித்து பொய் செய்திகள் பரப்புபவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை என அந்நாட்டு அரசு அறிவித்திருக்கிறது

நீலகிரி, கோவை மாவட்டங்களில் மழை

அடுத்த 24 மணி நேரத்தில் நீலகரி, கோயமுத்தூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தினம் உயரும் பெட்ரோல், டீசல் விலை... இன்றைய நிலவரம் இதுதான்!

இன்று பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து  ரூ.104.43க்கு விற்பனையாகிறது. டீசல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.94.47-க்கு விற்பனையாகிறது.

இன்று முதல் ஐபிஎல் ஆரம்பம்

2022 ஐபிஎல் தொடர் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன

Background

சென்னையில் பெட்ரோல் டீசல் விலை 137 நாட்களுக்கு பிறகு கடந்த மார்ச் 23-ம் தேதி உயர்ந்தது. அதனை அடுத்து, நேற்று பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 103.67க்கு விற்பனையானது. டீசல் ஒரு லிட்டருக்கு  93.71 ரூபாய்க்கு  விற்பனையானது. இந்நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து  ரூ.104.43க்கு விற்பனையாகிறது. டீசல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.94.47-க்கு விற்பனையாகிறது. 


முன்னதாக, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 15 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கணித்திருந்தனர். பெட்ரோல், டீசல் விலையை நான்கு மாதங்களுக்கும் மேலாக சீராக வைத்திருந்து நஷ்டத்தை சமாளிக்க எண்ணெய் நிறுவனங்கள் தயாராகி வருவதால், இந்த வாரம் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தனர்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.