Breaking News LIVE: அரசு பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழி படிப்புகள் நீக்கம்

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 25 May 2023 06:44 PM
Breaking News LIVE : ஜப்பான் சென்றடைந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு முறைப் பயணமாக ஜப்பான் சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Breaking News LIVE: உலக பட்டினி தினம் - விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மதிய உணவு!

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மதிய உணவு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ’தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம் திட்டம் மூலம் வரும் 28 ஆம் தேதி காலை 11 மணியில் இருந்து இலவச மதிய உணவு அளிக்கப்பட உள்ளது.


 

Breaking News LIVE: மே-28-ம் தேதி துக்க தினமாக அனுசரிப்பு - தொல்.திருமாவளவன்

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா நடைபெறும் மே-28 ஆம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க திட்டம் . விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து துக்க தினமாக அனுசரிப்பு. முழுமையான மது விலக்கு கோரி ஜூன் -2 -வது வாரம் அறப்போராட்டம் நடைபெறும் எனவும் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Breaking News LIVE :குனே பூங்காவில் மேலும் ஒரு சிறுத்தை குட்டி உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலத்தில் நமீபியா நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தை ஜ்வாலாவின் இரண்டாவது குட்டியும் உயிரிழந்தது. 

Breaking News LIVE: அரசு நிலங்கள் குத்தகை - மறு ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் ஆணை

தமிநாட்டில் உள்ள அரசு நிலங்களிம் குத்தகை விவரங்களை மறு ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,.

Breaking News LIVE: பாடப்பிரிவுகள் நீக்கப்படாது-அண்ணா பல்கலை., தகவல்

வரும் கல்வி ஆண்டில் அண்ணா பல்கலை கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் எந்த பாடப்பிரிவுகளும் நீக்கப்படாது என துணைவேந்தர் வேல்ராஜ் தெரித்துள்ளதாக தகவல் 

Breaking News LIVE: அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதை தடுத்து நிறுத்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

Breaking News LIVE:சபாநாயகருக்கு அருகே செங்கோல் நிறுவப்பட உள்ளது

புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் சபாநாயகருக்கு அருகே செங்கோல் நிறுவப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Breaking News LIVE:உத்ரகாண்டில் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்

உத்ரகாண்ட் மாநிலத்தில் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

Breaking News LIVE:உத்ரகாண்டில் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்

உத்ரகாண்ட் மாநிலத்தில் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

Breaking News LIVE: அரசு பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழி படிப்புகள் நீக்கம்

11 அரசு பொறியியல் கல்லூரிகளில் மிகக்குறைந்த அளவில் மாணவர் சேர்க்கை இருந்ததால் தமிழ் வழி சிவில், மெக்கானிக்கல் படிப்புகள் நீக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு - திண்டுக்கல், ராமநாதபுரம், அரியலூர், தூத்துக்குடி, நாகர்கோயில் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் இடம் பெற்றுள்ளது. 

Breaking News LIVE: அரசு பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழி படிப்புகள் நீக்கம்

11 அரசு பொறியியல் கல்லூரிகளில் மிகக்குறைந்த அளவில் மாணவர் சேர்க்கை இருந்ததால் தமிழ் வழி சிவில், மெக்கானிக்கல் படிப்புகள் நீக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு - திண்டுக்கல், ராமநாதபுரம், அரியலூர், தூத்துக்குடி, நாகர்கோயில் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் இடம் பெற்றுள்ளது. 

Breaking News LIVE: அரசு பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழி படிப்புகள் நீக்கம்

11 அரசு பொறியியல் கல்லூரிகளில் மிகக்குறைந்த அளவில் மாணவர் சேர்க்கை இருந்ததால் தமிழ் வழி சிவில், மெக்கானிக்கல் படிப்புகள் நீக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு - திண்டுக்கல், ராமநாதபுரம், அரியலூர், தூத்துக்குடி, நாகர்கோயில் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் இடம் பெற்றுள்ளது. 

Breaking News LIVE: அரசு கலைக்கல்லூரி தரவரிசைப்பட்டியல் இன்று வெளியீடு

164 அரசுக் கல்லூரிகளில் உள்ள இளநிலை படிப்புகளுக்கு உள்ள 1,07,395 இடங்களுக்கு சுமார் 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. 

Breaking News LIVE: உத்தரகாண்டில் வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்

உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார் - டேராடூன் முதல் டெல்லி வரை செல்லும் இந்த ரயிலை காணொளி காட்சி மூலம் பிரதமர் தொடங்கி வைக்கிறார். 

Breaking News LIVE: சிங்கப்பூர் அமைச்சருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு - சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று முதலமைச்சர் ஜப்பான் செல்லவுள்ள நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. 

Breaking News LIVE: 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

வளர்ச்சி திட்டப் பணிகளை கண்காணிக்க 12 மாவட்டங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு - ஏற்கனவே 25 மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட நிலையில் 12 மாவட்டங்களில் புதிய அதிகாரிகள் நியமனம் 

Background

ஓராண்டை கடந்தும் சென்னையில் மாற்றமின்றி விற்பனையாகி வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையின் இன்றைய விலை நிலவரத்தைக் காணலாம்.


எரிபொருளின் அவசியம் 


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம்


இந்நிலையில் சென்னையில் இன்று (மே.25) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 369 நாட்களை கடந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.


இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது.


அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.