Breaking News LIVE: கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 16 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 07 Aug 2023 07:44 PM
Breaking News LIVE: கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 16 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 16 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசை மற்றும் குழித்துறை நகராட்சி நடத்தும் வாவுபலி கொண்டாட்டத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 

Breaking News LIVE: செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க புழல் சிறைக்கு விரைந்த அமலாக்கத்துறை

சென்னை முதன்மை நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் புழல் சிறைக்கு சென்றனர். 


கும்மிடிப்பூண்டி அல்லது சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Breaking News LIVE: அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் - ஆகஸ்ட்.12 வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

|அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 12ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி

Breaking News LIVE: அறுவடையை முடித்து NLC நிலத்தை ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

NLC நிறுவனத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் அறுவடையை முடித்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும் புதிதாக பயிர்கள் ஏதும் பயிரிடக் கூடாது; மீறினால், சட்ட நடவடிக்கைகள் எடுக்கலாம் ₹25 லட்சம் இழப்பீடு என்பது 2014க்கு பிறகு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு மட்டுமே வழங்க முடியும்; அதற்கு முன்பாக நிலத்தை கொடுத்தவர்களுக்கு வழங்க முடியாது தொழில் மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சி தொடர்பான விவகாரங்களில் அரசின் கொள்கை முடிவுகளில் நில உரிமையாளர்கள் தலையிட முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Breaking News LIVE: ‘ஜவான்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டது படக்குழு!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜவான்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டது படக்குழு!



Breaking News LIVE: அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் - சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத்தாக்கல்!

அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று காலை அனுமதி வழங்கிய நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத்தாக்கல்

Breaking News LIVE: மாணவர்களுக்கான உபகரணங்கள் தரப்படவில்லை - அண்ணாமலை குற்றசாட்டு

பள்ளிகள் திறந்து ஒரு மாதமாகியும் மாணவர்களுக்கான உபகரணங்கள் தரப்படவில்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். எது, எதற்கோ வீணாக நிதி ஒதுக்குகிறார்கள். ஆனால் மாணவர்கள் நலனுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார். 

Breaking News LIVE: மணிப்பூர் விவகாரம் குறித்து பேச ராகுல் ஆலோசனை

மணிப்பூர் விவகாரம் குறித்து நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் பேச ராகுல் காந்தி ஆலோசனை - மோடி அரசுக்கு எதிரான நாளை நடக்கவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்தில் ராகுல் பங்கேற்கிறார். 

Breaking News LIVE: பட்டியலின பாதுகாவலர் என திமுக வாய்ஜாலம் - இபிஎஸ் கண்டனம்

பட்டியலின மக்கள் பாதுகாவலர் என திமுக ஆட்சியாளர்கள் வாய்ஜாலம் காட்டுவதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் - தென்காசி மாவட்டல் லட்சுமியூர் ஆறுமுகப்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் 40 வீடுகளுக்கு குடிநீர் வசதியில்லை என கூறி இபிஎஸ் கண்டனம் 

Breaking News LIVE: மணிப்பூர் கலவரம் - 3 பேர் கொண்ட குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

மணிப்பூரில் மறுகுடியமர்த்தும் பணிகளை கண்காணிக்க,  ஓய்வுபெற்ற நீதிபதிகள்  3 பேர் கொண்ட குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிவாரணம் வழங்குவது உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் செய்யப்படுவதை நீதிபதிகள் குழு கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் பாலியல் வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ குழுவில் வேறு மாநிலங்களைச் சேர்ந்த  அதிகாரிகள் இடம்பெற வேண்டும்

Breaking News LIVE: கருணாநிதி நினைவு நாள்.. டெல்லியில் ராகுல், சோனியா காந்தி, கார்கே மலர்தூவி மரியாதை..!

டெல்லியில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு, காங்கிரஸ் முன்னாள் தலைவர்களான சோனியாகாந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.



டிஜிட்டல் தனிநபர் தரவுகள் பாதுகாப்பு மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல்

டிஜிட்டல் தனிநபர் தரவுகள் பாதுகாப்பு மசோதாவிற்கு மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பாடகர் கத்தார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்

மக்கள் பாடகர் கத்தார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல். கத்தார் மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ராவில் கத்தார் கலந்துகொண்டு வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

Breaking News LIVE: மீண்டும் முடங்கிய மக்களவை..!

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கத்தால் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

Breaking News LIVE: மீண்டும் எம்.பி.யானார் ராகுல் காந்தி..!

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவியை திரும்பப்பெற்றார். 

Breaking News LIVE: செந்தில் பாலாஜிக்கு 5 நாள் அமலாக்கத்துறை காவல்..!

ஆகஸ்ட் 12ம் தேதி வரை செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துரைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

Breaking News LIVE: செந்தில் பாலாஜி கைது செல்லும், சட்ட விரோதம் இல்லை - உச்சநீதிமன்றம் அதிரடி..!

செந்தில் பாலாஜி கைது செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

மீண்டும் எம்பியானார் ராகுல் காந்தி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக அங்கீகரித்து, நாடாளுமன்ற செயலாளர் அறிவித்துள்ளார்.

Breaking News LIVE: என்.எல்.சி தொழிலாளர்கள் 13வது நாளாக வேலைநிறுத்தம்..!

பணி நிரந்தரம் செய்யக் கோரி என்.எல்.சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று 13வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Breaking News LIVE: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் சரிவு..!

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 121. 60 அடியில் இருந்து 121.20 அடியாக சரிந்தது. 

Breaking News LIVE: மக்களுக்கு ஒரு நல்ல செய்தி..! தங்கம் விலையில் மாற்றமில்லை..

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று மாற்றம் செய்யப்படவில்லை. ஆபரணத்தங்க ஒரு கிராம் ரூ. 5,555 க்கும் சவரன் ரூ. 44,440 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

Background

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 14 மாதங்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில் , இன்றைய நிலவரத்தை அறியலாம்.


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம்


இந்நிலையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 7) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 443வது நாளாக தொடர்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.









அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.