Breaking News LIVE: மணிப்பூர் விவகாரம்; சிபிஐ விசாரணைக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 27 Jul 2023 06:57 PM
மணிப்பூர் விவகாரம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

மணிப்பூர் விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

கே.பி. அன்பழகன் மீதான வழக்கு ரத்து..!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் மீது கிராம நிர்வாக அலுவலர் தொடங்கிய சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், நோயைப் பறப்புதல் உள்ளிட்ட புகார்களை மைய்யப்படுத்திய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 

ஓபிஎஸ், ஓபிஆர் மீதான வழக்குகள் ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வேட்பு மனுதாக்கலின் போது தவறான தகவலை கொடுத்ததாக ஓ. பன்னீர் செல்வம் மற்றும் ஓபிஆர் மீது தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

காலஷேத்ர வழக்கு 250 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை சைதாப்பேட்டை 9வது நீதிமன்றத்தில் காலஷேத்ர கல்லூரி மாணவிகள் கொடுத்த பாலியல் புகார் விசாரணையின் 250 பக்க குற்றப்பத்திரிகையை காவல்துறை தாக்கல் செய்துள்ளது. 

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை..!

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக இன்று அதாவது ஜூலை 27ஆம் தேதி தொடங்கியுள்ளது. 

செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு மனு தொடர்பான விசாரணை நடந்து வருகிறது

செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு மனு தொடர்பான விசாரணை இரண்டாவது நாளாக நடந்து வருகிறது

ஜூலை 29, 30 ஆகிய தேதிகளில், மணிப்பூர் செல்கிறது இந்தியா கூட்டணியின் எம்.பிக்கள் குழு

ஜூலை 29, 30 ஆகிய தேதிகளில், மணிப்பூர் செல்கிறது இந்தியா  கூட்டணியின் எம்.பிக்கள் குழு

நாடாளுமன்றத்துக்கு கருப்பு உடை அணிந்து வந்த எதிர்கட்சியினர்.. இரு அவைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்துக்கு கருப்பு உடை அணிந்து வந்த எதிர்கட்சியினர்.. இரு அவைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பு

Hogenakkal : ஓகேனக்கல் நீர்வரத்து 18,500 கன அடியாக அதிகரிப்பு

Hogenakkal : ஓகேனக்கல் நீர்வரத்து 18,500 கன அடியாக அதிகரிப்பு

தெலங்கானாவில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தெலங்கானாவில், கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்பப்பெறும் விவகாரம் தொடர்பாக, மக்களவையில் திமுக எம்.பி டி.ஆர் பாலு நோட்டீஸ் அளித்துள்ளார்

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்பப்பெறும் விவகாரம் தொடர்பாக, மக்களவையில் திமுக எம்.பி டி.ஆர் பாலு நோட்டீஸ் அளித்துள்ளார்

Gold Rate : தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 224 ரூபாய் உயர்ந்துள்ளது

Gold Rate : தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 224 ரூபாய் உயர்ந்துள்ளது 

Breaking News LIVE: மணிப்பூர் விவகாரம்: இன்று கருப்பு உடை அணிந்து கூட்டத்தொடரில் பங்கேற்க எதிர்க்கட்சிகள் முடிவு

மணிப்பூர் விவகாரத்தில் விவாதத்தை அனுமதிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கருப்பு உடை அணிந்து கூட்டத்தொடரில் பங்கேற்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன

Breaking News LIVE: எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி.. அமளிக்கிடையே 7 மசோதாக்கள் தாக்கல்..!

நேற்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே 7 மசோதாக்கல் தாக்கல் செய்யப்பட்டன.


 

Breaking News LIVE: சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு தொடக்கம் 

சென்னை கிண்டி கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையில் சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு தொடக்கம் - இதில் விளையாட்டு வீரர்கள், முன்னாள் இராணுவத்தினரின் வாரிசுகள் பங்கேற்பு 

Breaking News LIVE: ஆளுநருக்கு எதிராக திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் - மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக திமுக எம்.பி., டி.ஆர்.பாலு நோட்டீஸ் 

Breaking News LIVE: பிலுகுண்டுலுவில் நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு 

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் பிலிகுண்டுலுவில் நீர்வரத்து அதிகரிப்பு - நீர்வரத்து விநாடிக்கு 14 ஆயிரம் கன அடியில் இருந்து 15 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு 

Breaking News LIVE: திருச்சியில் வேளாண் சங்கம திருவிழா இன்று தொடக்கம்

திருச்சியில் மூன்று நாட்கள் நடக்கும் வேளாண் சங்கம திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று தொடங்கி வைக்கிறார் - கண்காட்சியில் புதிய வேளாண் இயந்திரங்கள், பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சிக்கு வைக்கப்படுகிறது. 

Background

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 14 மாதங்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில் , இன்றைய நிலவரத்தை அறியலாம்.


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம்


இந்நிலையில் சென்னையில் இன்று (ஜூலை 27) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 432வது நாளாக தொடர்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.









அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.