Breaking News LIVE: இந்த ஆண்டில் மட்டும் 74 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது - மத்திய அரசு

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 22 Jul 2023 01:48 PM
உயர்த்தப்பட்ட உதவித்தொகை விபரம்..!

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அதாவது ஜூலை 22ஆம் தேதி நடைபெற்றது.  கலைஞர் மகளிர் உரிமை தொகை, கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படவிருப்பதாக  ஏற்கனவே கூறப்பட்டது.  இந்நிலையில் அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, முதியோர் உதவித் தொகை ரூபாய் ஆயிரத்தில் இருந்து ரூபாய் 1,200ஆக உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார். அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூபாய் 1,500ஆக உயர்த்தப்பட்டுள்ளது எனவும், கைம் பெண்களுக்கான உதவித்தொகை ரூபாய் 1,200ஆக உயர்த்தப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார். முதியோர் உதவித்தொகை மூலம் 30 லட்சம் பேட் பயன்பெறுவார்கள் எனவும் அவர் கூறினார். மேலும் இந்த உயர்த்தப்பட்ட உதவித்தொகை வரும் ஆகஸ்ட் மாதம் முதலே நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளார்.  18 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். 

70 ஆயிரம் பேருக்கு பணி நியமனக் கடிதங்களை வழங்கிய பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடி  சனிக்கிழமையான இன்று அதாவது ஜூலை 22ஆம் தேதி இந்தியா முழுவதும் உள்ளவர்களில்  70 ஆயிரம் பேருக்கு பணி நியமனக் கடிதங்களை வழங்கியுள்ளார்.  அதன் பின்னர் அவர் வீடியோ கான்பிரன்சில் உரையாற்றினார். 

இந்த ஆண்டில் மட்டும் 74 தமிழக மீனவர்கள் கைது

இந்த ஆண்டு மட்டும் தமிழக மீனவர்கள் 74 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 


நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் திமுக எம்.பி கனிமொழி தமிழக மீனவர்கள் கைது குறித்து கேள்வி எழுப்பினார். 


இதற்கு எழுத்து பூர்வமாக பதிலளித்த மத்திய அரசு இந்த ஆண்டில் மட்டும் தமிழக மீனவர்கள் 74 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.  இந்திய மீனவர்கள் பாதுகாப்புக்காக சம்பந்தப்பட்ட நாடுகளோடு புரிந்துணர்வை உறுதிபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளிவுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தொடங்கியது அமைச்சரவைக் கூட்டம்..!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. 

Breaking News LIVE: தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,440 ஆகவும் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,555 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai)


ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1.50 குறைந்து  ரூ.80.50- க்கு விற்பனையாகிறது.  வெள்ளி கிலோ ரூ.80,500-க்கு விற்பனையாகிறது.

மதுரையில் மீண்டும் தீ விபத்து..!

மதுரையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள பழைய கட்டிதத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், அங்கு மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் தொடங்கியது..!

திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகளமாக தொடங்கியுள்ளது. மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கிவிட்டனர். 

மணிப்பூர் கலவரம் குக்கி சமூக எம்.எல்.ஏக்கள் கூட்டறிக்கை..!

மணிப்பூர் கலவரம் குறித்து அங்குள்ள எம்.எல்.ஏக்களில்  கட்சி பாகுபாடு இன்றி 10 பேர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கலவரத்தில் 114 குக்கி சமூகத்தவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்த இந்தியாவும் மணிப்பூரில் அமைதி நிலவ கோரிக்கை வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். 

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி..!

4 நாடகளாக பலத்த காற்று வீரியதால் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் இருந்த ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இன்று மீன்பிடிக்கான அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளதால் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். 

Background

Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டிசல் விலை மாற்றமின்றி தொடர்ந்து 14 மாதங்களை பூர்த்தி செய்துள்ள நிலையில், இன்றைய விலையை அறியலாம். 


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம்


இந்நிலையில் சென்னையில் இன்று (ஜூலை 22) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 427வது நாளாக தொடர்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.









அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.