Breaking News LIVE: உலகக்கோப்பை செஸ் தொடர் இறுதிப்போட்டி- முதல் சுற்று ஆட்டம் டிரா..!

Breaking News LIVE:நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 22 Aug 2023 08:34 PM
Breaking News LIVE: தமிழ்நாடு மீனவர்கள் மீது தாக்குதல் - மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்


தமிழ்நாடு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினர் தாக்குதல் அதிகரித்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். தாக்குதல் சம்பவங்கள் மீனவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Breaking News LIVE: உலக கோப்பை செஸ் - முதல் சுற்று டிராவில் முடிந்தது

கார்ல்சன்-பிரக்ஞானந்தா மோதிய இறுதிப்போட்டியின் முதல் சுற்று டிராவில் முடிந்தது. விறுவிறுப்பாக நடந்த இறுதிப்போட்டியின் முதல் சுற்றில் 35வது நகர்த்தலுக்கு பின் ஆட்டம் டிராவில் முடிந்தது.

Breaking News LIVE: உலகக்கோப்பை செஸ் தொடர் இறுதிப்போட்டி- முதல் சுற்று ஆட்டம் டிராவில் முடிவடைந்தது

உலகக்கோப்பை செஸ் தொடரின் கார்ல்சென் - பிரக்ஞானந்தா மோதிய இறுதிப்போட்டியில் முதல் சுற்று டிராவில் முடிவடைந்தது. இரண்டாவது சுற்று போட்டி நாளை நடைபெற உள்ளது. 

Breaking News LIVE: ம.பியில் உள்ள பாஜக அரசு சட்டவிரோதமானது - கார்கே

மத்தியப் பிரதேசத்தில் உள்ள பாஜக அரசு சட்டவிரோதமானது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.

Breaking News LIVE: தாய்லாந்து முன்னாள் பிரதமருக்கு 8 ஆண்டு சிறை

17 ஆண்டுகள் வெளிநாட்டில் தஞ்சமடைந்துவிட்டு நாடு திரும்பிய தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் சினாவத்ராவுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

Breaking News LIVE: 87 போலி இணையதளம் முடக்கம் - அரசு

தமிழ்நாட்டில் பிரசித்து பெற்ற கோயில்களின் பெயரில் இயங்கிய 87 போலி இணையதளங்கள் முடக்கம் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Breaking News LIVE: கனமழை பாதிப்பு.. இமாச்சல பிரதேசத்துக்கு உதவும் தமிழ்நாடு அரசு.. ரூ.10 கோடி நிதியுதவி..!

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு ரூ.10 கோடி நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


கனமழை, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இமாச்சல பிரதேச மாநிலத்தின் சீரமைப்பு பணிகளுக்காக உதவி செய்ய தயாராக உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நிவாரணப் பணிகளுக்காக தமிழ்நாடு அரசின் பங்களிப்பாக நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில்? இன்றைய வானிலை நிலவரம்..

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை   பெய்யக்கூடும். சேலம், நாமக்கல்,  கரூர், தர்மபுரி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 

Breaking News LIVE: செம்மண் குவாரி வழக்கு - நீதிமன்றத்தில் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜர்!

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பொன்முடி ஆஜராகியுள்ளார் 

Breaking News LIVE: தனியார் கல்லூரி மாணவர்களிடையே மோதல்.. 10 மாணவர்களை கைது செய்த போலீஸ்!

சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டு இதனால் பூண்டு பட்டாசு வீசியதால் வேளச்சேரி தனியார் கல்லூரியில் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


 ‌அதில் கலவரத்தை ஏற்படுத்திய 12 மாணவர்கள் மீது கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் இன்று காலை 10 மாணவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Breaking News LIVE: டி என் பி எஸ் சி தலைவர் நியமனம் தொடர்பாக விளக்கம் கேட்ட ஆளுநர் - தமிழக அரசு சார்பில் பதில்

டி என் பி எஸ் சி தலைவர் நியமனம் தொடர்பாக கவர்னர் கேட்டுள்ள விளக்கங்களுக்கு விரைவில் தமிழக அரசு சார்பில் பதில் கொடுக்கப்படும் என தமிழக அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

Breaking News LIVE: குடிநீரில் கழிவுநீர் கலப்பது குறித்த புகாரில் நடவடிக்கை இல்லை - சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

குடிநீரில் கழிவுநீர் கலப்பது குறித்த புகாரில் நடவடிக்கை எடுக்காத மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 79ஆவது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் லக்சிகாஸ்ரீ தலைமையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகள்.. சூட்டு வீழ்த்திய ராணுவ வீரர்கள்..

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் ஊடுருவ முயன்ற இரண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். பாலகோட் செக்டார் பகுதியில் துப்பாக்கிச் சண்டை நடந்த இடத்தில் இருந்து ஒரு ஏகே 47 ரக துப்பாக்கி, 2 செய்தி நாளேடுகள், 30 ரவுண்டுகள் (தோட்டாக்கள்), இரண்டு கைக்குண்டுகள், பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சில மருந்துகள் கைப்பற்றப்பட்டன.

தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை.. சவரனுக்கு 40 ரூபாய் உயர்வு.. இன்றைய விலை நிலவரம் இதோ..

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu)


இன்று (ஆகஸ்ட் 22 ஆம் தேதி) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 உயர்ந்து ரூ. 43,680 ஆகவும் 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ரூ.5,460 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


சென்னையில் 24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 47,440  ஆகவும் கிராமுக்கு ரூ. 5,930 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 


வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai)


ஒரு கிராம் வெள்ளி விலை ஒரு ரூபாய் 30 காசுகள் உயர்ந்து ரூ.78.00 -க்கு விற்பனையாகிறது.  வெள்ளி கிலோ ரூ.78,000 -க்கு விற்பனையாகிறது.

இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்.. நாகை மீனவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம்..

நாகை மாவட்ட மீனவர்களிடம் மீண்டும் கொள்ளையடித்து அட்டூழியம் செய்துள்ள இலங்கை கடற்கொள்ளையர்கள். தாக்குதல் சம்பவத்தில் 8 மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.


வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவர்களின் படகுகளில் இலங்கை கடற்கொள்ளையர்கள் அண்மையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், ஆறுகாட்டுத்துறையில் இருந்து தென்கிழக்கே 22 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களிடம் மீண்டும் இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். 10 லட்ச ரூபாய் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை பறித்துக்கொண்ட அவர்கள், கத்தி, கட்டை மற்றும் கம்பியால் 8 பேரை தாக்கியதில் மீனவர்கள் படுகாயமடைந்தனர். அதில் ஒருவருக்கு தலையில் 21 தையல்கள் போடப்பட்டுள்ளன. இதேபோல, மற்றொரு விசைப்படகையும் குறிவைத்து கொள்ளையடித்த இலங்கை கடற்கொள்ளையர்கள், படகு ஓட்டுநரை தலையில் தாக்கியதில், அவர் படுகாயமடைந்துள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி தலைவராக சைலேந்திர பாபு நியமனம் - அரசு அனுப்பிய கோப்பை திருப்பி அனுப்பிய ஆளுநர்..

டி.என்.பி.எஸ்.சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமனம் செய்து  தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்பை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பியுள்ளார். டி.என்.பி.எஸ்.சி நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிக்காட்டுதல் பின்பற்றப்படவில்லை என கூறி திருப்பி அனுப்பியுள்ளார். டி.என்.பி.எஸ்.சி தலைவர் நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை விவரங்கள் குறித்து ஆளுநர் விளக்கம் கேட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தலைவர் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளிப்படையாக விளம்பரம் செய்யப்படாதா என அரசுக்கு ஆளுநர் கேள்வி எழுப்பியுள்ளார். 


Background

Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை  450 நாட்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில், இன்றைய நிலவரத்தை அறியலாம்.


பெட்ரோல், டீசல்:


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம்


இந்நிலையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 22) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 458வது நாளாக தொடர்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.









அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.