Breaking News LIVE: மீனவர்கள் கைது - வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்..!

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 10 Jul 2023 02:58 PM
Breaking News LIVE: அயனாவரத்தில் காவலர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை அயனாவரத்தில் காவலர் அருண்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

Breaking News LIVE: மழை பாதிப்பு - மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி பேச்சு

வட மாநிலங்களில் ஏற்பட்ட மழை பாதிப்புகள் பற்றி மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி பேசியுள்ளார். 

Breaking News LIVE : பேனா நினைவுச்சின்னத்தை எதிர்த்த மனு தள்ளுபடி

சென்னை மெரினா கடலில் போனா நினைவுச் சின்னம் அமைப்பதை எதிர்த்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதுது. 

மாற்றப்படும் டாஸ்மாக் கடை திறப்பு?

அண்மையில் மூடப்பட்ட 500 டாஸ்மாக் கடைகள் அமைந்திருந்த பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்படும் எனவும், கடைகள் மூடப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் குடிப்பழக்கத்தை கைவிட்டால் மகிழ்ச்சியே எனவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.


மேலும் பேசிய அவர் ”மதுவிற்பனை செய்து வருமானம் ஈட்ட வேண்டிய நிலை அரசுக்கு இல்லை. டாஸ்மாக் திறக்கப்படும் நேரத்தை மாற்ற ஆலோசித்து வருகிறோம். டாஸ்மாக் கடையை காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை திறக்கவேண்டும் மது பிரியர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதுகுறித்து பரிசீலனையில் உள்ளது. இன்னும் எவ்வித முடிவும் எடுக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.  

மீனவர்களை விடுவிக்க கடிதம் ..!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 15 ராமேஸ்வ்வரம் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

மகளிர் உரிமைத் தொகை - வழிகாட்டு நெறிமுறை

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 

நடமாடும் காய்கறி கடைகள் - முதலமைச்சர்

மாநகராட்சி மற்றும் தோட்டக்கலை மூலம் நடமாடும் காய்கறிக்கடைகளை அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு - முதலமைச்சர் ஆலோசனை..!

அத்தியாவசிய பொருடகளின் விலையேற்றம் குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். 

நடிகர் தனுஷ் மீதான வழக்கு ரத்து..!

வேலையில்லா பட்டதாரி படத்தில் இருந்த புகைப்பிடிக்கும் காட்சி தொடர்பாக தொடரப்பட்ட வழக்கினை ரத்து செய்தது சைதாப்பேட்டை நீதிமன்றம். இதனால் தனுஷ் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

உயர்வுடன் தொடங்கிய பங்குச் சந்தை..!

வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கியுள்ளது. மேலும் மேலும் உயரும் என நம்பப்படுகிறது. 

மீனவர்கள் வேலை நிறுத்தம்..!

ராமேஸ்வரம் விசைபட மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். 15 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததைக் கண்டித்து இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. 

Background

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன் தினம் மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டை பெற்று சுமார் 400 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.  இந்த நிலையில் நேற்று அதிகாலை நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை இரண்டு விசைப்படகையும் அதில் இருந்த 15 மீனவர்களையும் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளது. இதையடுத்து அவர்கள் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 15 மீனவர்களையும் அவரது படகையும் விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று ஒரு நாள் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதினால் சுமார் 700 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் நங்கூரம் இட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தினால் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு அரசுக்கு ஒரு நாளைக்கு ஒரு  கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 


கடந்த ஜுன் மாதம் 21ம் தேதி  புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 91 விசைப்படகுகளில் 450 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவற்றில், உதயகுமாருக்கு சொந்தமான படகில் உதயகுமார், அவரது மகன்கள் ரவீந்திரன்(40), உலகநாதன்(35), வைத்தியநாதன்(27), அருள்நாதன்(23), முத்து மகன் குமரேசன்(35),  அகிலா என்பவருக்கு சொந்தமான படகில் அவரது கணவர் காளிமுத்து(45), எம்.அர்ஜுனன்(50), எஸ்.குமார்(42), என்.குருமூர்த்தி(27), எம்.அருண்(22) மற்றும் தமிழரசனுக்கு சொந்தமான படகில் தமிழரசன், சி.பாஸ்கர்(40), ஓ.முத்துராஜா(25), டி.அரேன்(20), டி.ஜெகநாத்(35), எஸ்.குமார்(43), ஆகியோர் 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.


அப்போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி 3 விசைப்படகுகளில் இருந்த 17 மீனவர்களையும் கைது செய்ததுடன், அவர்களது விசைப்படகுகள், வலைகள், மீன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதேபோன்று, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து 405 விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.  அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்தபோது அந்தோணி பிரசாத்துக்கு சொந்தமான விசைப்படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், அதிலிருந்த சந்தியா, தேவா, நடராஜன், நாகராஜன், ஜிப்ரா ஆகிய 5 மீனவர்களை கைது செய்தனர். மத்திய, மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கைக்குப் பிறகு 22 தமிழக மீனவர்களும் சில தினங்களுக்கு முன்பு  நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டனர். தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.