Lok Sabha Election 5th Phase LIVE : நாடு முழுவதும் 5ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு - ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

ABP NADU Last Updated: 20 May 2024 06:04 PM
நாடு முழுவதும் 5ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு - ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்

நாடு முழுவதும் 49 தொகுதிகளில் நடைபெற்ற 5வது கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

Lok Sabha Election 5th Phase LIVE : ஈரான் அதிபர் மறைவு:  இந்திய தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிட முடிவு

ஈரான் அதிபர் மறைவு இப்ராஹிம் ரைசி மறைவையொட்டி, நாளை இந்தியாவில் உள்ள அரசு கட்டடங்களில் உள்ள தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

உதகையில் மலர் கண்காட்சி மே 26ம் தேதி வரை நீட்டிப்பு

உதகையில் மலர் கண்காட்சி வரும் 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Lok Sabha Election 5th Phase LIVE :வாக்கு இயந்திரத்துக்கு மாலையை போட்ட வேட்பாளருக்கு வழக்கை போட்ட காவல்துறை


Lok Sabha Election 5th Phase LIVE : 1 மணி வாக்குப்பதிவு நிலவரம் என்ன?

1 மணி நிலவரப்படி, 5ஆம் கட்ட வாக்குப்பதிவில் 36.73 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. 

Lok Sabha Election 5th Phase LIVE : கங்கனா ரனாவத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய காங்கிரஸார்!

இமாச்சல பிரதேசம்: இன்று லாஹவுல் & ஸ்பிதி மாவட்டத்தின் காசாவிற்கு வருகை தந்த பாஜக மண்டி வேட்பாளர் கங்கனா ரணாவத்துக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் கருப்புக் கொடி காட்டி முழக்கங்களை எழுப்பினர்.


கங்கனா ரனாவத் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் இன்று காசாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினர்.

Lok Sabha Election 5th Phase LIVE : குடும்பத்தினருடன் மும்பையில் வாக்கு செலுத்திய நடிகை பிரியா தத்

ஐந்தாம் கட்ட தேர்தலில் வாக்களிக்க நடிகை பிரியா தத் தனது குடும்பத்தினருடன் மும்பையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்தார்.

பிரபல நட்சத்திர இணை தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் இருவரும் மும்பையில் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்

மகன் அர்ஜுன் டெண்டுல்கருடன் வந்து வாக்கு செலுத்திய சச்சின் டெண்டுல்கர்

இந்திய வங்கி துறை : நிகர லாபம் ரூ. 3 லட்சம் கோடியைத் தாண்டியது. இது வரலாற்றில் முதல்முறை - மோடி பதிவு

வாக்களிக்காமல் இருந்துவிட்டு புகார் மட்டும் செய்யக்கூடாது - நடிகர் அனுபம் கேர்

ஜனநாயகக் கடமையாற்றிய நடிகர் இம்ரான் ஹாஷ்மி

ஜூன் 10-ஆம் தேதி, முதல் ஒடிஷா பாஜக முதலமைச்சர் பதவியேற்பார் - மோடி பேச்சு

ஓட்டு போடுங்க.. ஓட்டு போடலன்னா புகார் பண்ணவும் உங்களுக்கு உரிமை இல்லை - நடிகர் மனோஜ் பாஜ்பாய்

5-ஆம் கட்ட வாக்குப்பதிவு : 11 மணி நிலவரம்.. முழு விளக்கத்தொகுப்பு

இந்தியா கூட்டணி உயர்ந்து நிற்கிறது. சிறுபான்மையினரும், ஏழைகளும் திரண்டு வாக்களிக்கிறார்கள் - திக் விஜய் சிங்

Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது

Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது. மும்பை உள்ளிட்ட நகர்ப்பகுதிகளில் வாக்கு சதவிகிதம் குறைந்ததாக பதிவாகியுள்ளது. மேற்கு வங்கம் - 32.70% , பீகார் - 21.11% ஜம்மு காஷ்மீர் - 21.37%, ஜார்கண்ட் - 26.18% , ஒடிசா - 21.07% , உத்தர பிரதேசம்- 27.76%

Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது

Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது


 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிலவரமானது காலை 9 மணி நிலவரப்படி, 10 சதவிகிதமாக இருந்த நிலையில், 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது

PM Modi In Odisha : காந்தி குடும்பத்தின் நான்கு தலைமுறையினரும் அரசியல் அமைப்பை அவமதித்தனர் - மோடி பேச்சு

Jammu and Kashmir Home Vote : ஜம்மு காஷ்மீர் : பூஞ்ச் தொகுதி மக்கள் முதல்முறையாக Home Vote செலுத்தினர்

ஜனநாயகக் கடமை ஆற்றிய உத்தவ் தாக்கரே குடும்பத்தினர்..

Rajnath Singh Vote : குடும்பத்துடன் திரண்டு வந்து ஓட்டு போடுங்க : பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விடுத்த கோரிக்கை

Actor Govinda Casts Vote : நடிகரும், சிவசேனா தலைவருமான கோவிந்தா வாக்களித்தார்

Shahid Kapoor : வாக்களிக்க வாங்க.. ஒவ்வொரு ஓட்டும் முக்கியம் - ஷாஹித் கபூர் பதிவு

5th Phase Lok sabha election vote percentage : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது

5th Phase Lok sabha election vote percentage : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது





Punishment For Not Voting : வாக்களிக்காதவர்களுக்கு கூடுதல் வரி அல்லது ஏதோ ஒரு தண்டனை - நடிகர் பரேஷ் ராவல்

இந்த தேர்தல் மக்களுக்கும், பாஜகவுக்கும் இடையிலானது. இந்தியா கூட்டணி வெல்லும் - முதல்வர் ஹேமந்த் சோரன் மனைவி

Smriti Irani Vote : அமேதி வாக்குச்சாவடியில், வாக்களித்த ஸ்மிரிதி இரானி

காஞ்சிபுரம் : பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது!

இந்த முறை மாற்றம் இருக்கும். மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி

Breaking News LIVE: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் உயிரிழப்பு..

இந்த விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் உட்பட ஹெலிகாப்டரில் இருந்த பயணிகள் அனைவரும் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன

Iran President Ibrahim Raisi Dies : ஹெலிகாப்டர் பாகங்கள் கண்டெடுப்பு.. ஈரான் அதிபர் விபத்தில் உயிரிழப்பு..

Iran President Ibrahim Raisi Dies : ஹெலிகாப்டர் பாகங்கள் கண்டெடுப்பு.. ஈரான் அதிபர் விபத்தில் உயிரிழப்பு..


ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அண்டை நாடான அஜர்பைஜானில் ஒரு விழாவில் கலந்துகொண்டு விட்டு, டெக்ரானுக்கு திரும்பும் வேளையில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

Janhvi Kapoor Vote : மும்பையில் வாக்களித்துவிட்டு, அனைவரும் வாக்கு செலுத்துமாறு வலியுறுத்திய ஜான்வி கபூர்

Breaking News LIVE: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கன மழை பெய்யும் – இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் அதி கன மழைக்கான ரெட் அலெர்ட்ம் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தென் மாவட்டங்களான தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் மிக கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Breaking News LIVE: 10 மணிக்குள் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Breaking News LIVE: ஃப்ரூக்காபாத் தொகுதி - மறுவாக்குப்பதிவுக்கு பரிந்துரை..!

உத்தரப்பிரதேசம்: ஃப்ரூக்காபாத் தொகுதியில் சிறுவன் 8 முறை வாக்களித்த விவகாரத்தில் மறுவாக்குப்பதிவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஃப்ரூக்காபாத் தொகுதியில் நடந்த தேர்தலில் பாஜகவுக்கு 8 முறை சிறுவன் வாக்களித்த வீடியோ வெளியானது. 

Breaking News LIVE: ஒடிசாவில் இன்று இரண்டாம் கட்ட சட்டமன்ற தேர்தல்..!

நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து ஒடிசா சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெறுகிறது. ஒடிசாவில் 2வது கட்டமாக 35 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஒடிசாவில் மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் முதல் கட்டமாக 28 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 

Breaking News LIVE: ஈரான் அதிபருக்காக உலகம் முழுவதும் பல இடங்களில் பிரார்த்தனை

ஈரான் அதிபருக்காக உலகம் முழுவதும் பல இடங்களில் பிரார்த்தனை நடந்து வருகிறது. இரவு முழுவதும் தேடலை முடுக்கிவிட Night Vision ஹெலிகாப்டர்களை அனுப்பி உள்ளது துருக்கி அரசாங்கம். 


மேலும், பிரதமரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈராக் மற்றும் அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகளும் மீட்பு பணியில் இறங்கி உள்ளன. இதுவரை 40 மீட்பு குழுக்கள், 8 ஆம்புலன்ஸ்கள் ஹெலிகாப்டர் விழுந்ததாக கருதப்படும் இடத்தில் முகாமிட்டு தேடி வருகின்றனர். மேலும், செஞ்சிலுவை சங்கம் சம்பவ இடத்தில் மீட்பு பணியை தலைமையேற்று நடத்தி வருகிறது.

Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!

நேபாள பிரதமர் பிரசண்டா தலைமையிலான அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. பிரதமர் பிரசண்டா தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி அரசில் அங்கம் வகித்த ஜேஎஸ்பி ஆதரவை திரும்ப பெற்றது.  30 நாட்களில் பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது. 

Background


  • நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் ஐந்தாம் கட்டத்தில், 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு நடைபெறுவதை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி, ராஜ்நாத் சிங் போட்டியிடும் லக்னோ தொகுதிகளின் வாக்குப்பதிவு தொடங்கியது.  மும்பை வடக்கில் பியூஸ் கோயல், அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

  • நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து ஒடிசா சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெறுகிறது. ஒடிசாவில் 2வது கட்டமாக 35 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஒடிசாவில் மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் முதல் கட்டமாக 28 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.

  • ஜார்க்கண்ட் மாநிலம் கண்டே சட்டசபை தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 

  • ஈரானில் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. தற்போது வரை அவரது நிலைமை என்னவென்று தெரியவில்லை. 


  • ஈரான் அதிபருக்காக உலகம் முழுவதும் பல இடங்களில் பிரார்த்தனை நடந்து வருகிறது. இரவு முழுவதும் தேடலை முடுக்கிவிட Night Vision ஹெலிகாப்டர்களை அனுப்பி உள்ளது துருக்கி அரசாங்கம். 


    மேலும், பிரதமரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈராக் மற்றும் அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகளும் மீட்பு பணியில் இறங்கி உள்ளன. இதுவரை 40 மீட்பு குழுக்கள், 8 ஆம்புலன்ஸ்கள் ஹெலிகாப்டர் விழுந்ததாக கருதப்படும் இடத்தில் முகாமிட்டு தேடி வருகின்றனர். மேலும், செஞ்சிலுவை சங்கம் சம்பவ இடத்தில் மீட்பு பணியை தலைமையேற்று நடத்தி வருகிறது.



  • சென்னையில் நடைபெறும் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. ரூபே கார்டுகள் வைத்திருப்பவர்களுக்கு இன்று மாலை 6 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • ஐபிஎல் 2024ன் நேற்றைய கடைசி லீக் போட்டியில் மோத இருந்த கொல்கத்தா - ராஜஸ்தான் இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.