Breaking News LIVE: போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 06 Feb 2024 07:23 PM
போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை

போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

அண்ணாமலையை நாங்கள் ஒருபோதும் மதிப்பதில்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நாங்கள் ஒருபோதும் மதிப்பதில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கையால் சர்ச்சை

சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பல்கலைகழக பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையால் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதலமைச்சர் நன்றி

கேரள எம்.பி.க்கள் போராட்டத்தில் தமிழக எம்.பி.க்களும் பங்கேற்பார்கள் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.

பட்டாசு ஆலை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு

பட்டாசு ஆலை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

மத்திய பிரதேச பட்டாசு ஆலை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் இழப்பீடு

மத்திய பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 4 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று அந்த மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

Breaking News LIVE: ’மகன் குறித்து தகவல் தெரிவித்தால்’.. 1 கோடி சன்மானம் அறிவித்த சைதை துரைசாமி

ஹிமாச்சல பிரதேசத்தில் காணாமல் போன தனது மகன் பற்றிய தகவல் தெரிவித்தால், ரூ.1 கோடி சன்மானம் அளிக்கப்படும் என அதிமுக நிர்வாகி சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.

உத்ரகாண்டில் பொது சிவில் சட்டம் - எதிர்கட்சிகள் கடும் அமளி

Breaking News Live: உத்ரகாண்ட் அரசு பொது சிவில் சட்ட மசோதாவை மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

Breaking News LIVE: நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்.. தேமுதிக பாஜக கூட்டணி ? எத்தனை இடங்கள் ?

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் பாஜக கூட்டணியில் தேமுதிக 4+1 இடங்களை கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 4 மக்களவையும் ஒரு மாநிலங்களவை இடத்தையும் கேட்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Breaking News LIVE: கெஜ்ரிவால் உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர் மற்றும் நெருக்கமானவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

Breaking News LIVE: தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு..!

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. அதன்படி, ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 5, 830க்கும், ஒரு சவரன் ரூ.46,640க்கும் விற்பனை ஆகிறது. 


 

Breaking News LIVE: டெல்லியில் 12 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.!

டெல்லியில் மொத்தம் 12 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. ஆம் ஆத்மி கட்சி பொருளாளரும், எம்.பி.யுமான குப்தா வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

Breaking News LIVE: மின்சார ரயில்கள் தாமதம் - பயணிகள் வாக்குவாதம்

செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் தாமதமாக வருவதால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், ஆத்திரமடைந்த ரயில் பயணிகள் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் வாங்கும் இடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

Breaking News LIVE: ஸ்பெயின் சுற்றுப்பயணம் - நாளை சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஸ்பெயின் நாட்டிற்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (பிப்ரவரி 7) சென்னை திரும்புகிறார். கடந்த ஜனவரி 27 ஆம் தேதி அவர் ஸ்பெயின் புறப்பட்டு சென்றார். 

Breaking News LIVE: இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னை வருகை

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழ்நாட்டில் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னை வருகின்றனர். 2 நாட்கள் மாநில தலைமை தேர்தல் ஆணையருடன் இந்த ஆய்வானது நடைபெறுகிறது. 


 

Background

கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.


பெட்ரோல், டீசல்:


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம்


இந்நிலையில் சென்னையில் இன்று (பிப்ரவரி 6ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 626வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 20 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.









அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.