Breaking News LIVE : மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - செல்வப்பெருந்தகை

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்

முகேஷ் Last Updated: 01 Apr 2024 09:21 PM
மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - செல்வப்பெருந்தகை

மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

"பாஜக அரசின் இந்த சர்வாதிகார போக்குக்கு மக்கள் தகுந்த பதிலை தருவார்கள்” - சுனிதா கெஜ்ரிவால்

தொகுதி மக்களுடன் உரையாடி வாக்கு கேட்கும், ஹிமாச்சல பிரதேச, மண்டி தொகுதி வேட்பாளர் கங்கனா ரனாவத்

பெயரை மாற்றினால் அது சீனாவுக்கு சொந்தமாகிவிடாது - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

பெயரை மாற்றினால் அது சீனாவுக்கு சொந்தமாகிவிடாது - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் 


உங்கள் வீட்டின் பெயரை நான் மாற்றினால் அது எனக்கு சொந்தமாகிவிடுமா? அருணாச்சல பிரதேசத்தில் 30 இடங்களின் பெயரை மாற்றினால் அது சீனாவுக்கு சொந்தமாகிவிடாது - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

2024-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டுமே, 86.82 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோவில் பயணித்துள்ளனர் - மெட்ரோ நிர்வாகம் தகவல்

இம்ரான் கானின் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

திகார் சிறையில் அடைக்கப்பட்டார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஞானவாபி மசூதி விவகாரம்: இந்துக்கள் பூஜை செய்ய உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு

ஞானவாபி மசூதியில் இந்து பக்தர்கள் பூஜை செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

பா.ம.க.வில் பூத் கமிட்டி அமைக்கக்கூட ஆட்கள் கிடையாது - செல்லூர் ராஜூ பேச்சு

பா.ம.க.வில் பூத் கமிட்டி அமைக்கக்கூட ஆட்கள் கிடையாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.

Breaking News LIVE : பாஜக ஆட்சியில் நாட்டின் தலைவருக்கே சாதி, பாலினப் பாகுபாடு - கனிமொழி கண்டனம்

மார்ச் 30 ஆம் தேதி முன்னாள் துணை பிரதமர் அத்வானி பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட போது, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நின்று கொண்டிருப்பது போலும், பிரதமர் மற்றும் எல்.கே அத்வானி அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியானது. அப்போது, நாட்டின் குடியரசுத் தலைவரை பாகுபாடோடு நடத்துகிறார்கள் என குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 





தேர்தல் விதிமுறை மீறல் - அவதூறுப் பேச்சு : பாஜக எம்.பி திலீப் கோஷ் மற்றும் காங்கிரஸைச் சேர்ந்த சுப்ரியா ஸ்ரீநாத் ஆகியோரைக் கண்டித்தது தேர்தல் ஆணையம்

Tamilisai Soundararajan BJP : தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் பிரச்சாரம்..

கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 15 வரை நீட்டிப்பு..

1700 Crores IT To Congress : 1700 கோடி ரூபாயை வசூலிக்க இப்போது நடவடிக்கை எடுக்கமாட்டோம்.. உச்சநீதிமன்றத்திடம் தெரிவித்த வருமான வரித்துறை

கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகம் - முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு

Breaking News LIVE : எடப்பாடி பழனிசாமிக்கு அன்புமணி கேள்வி..!

அதிமுகவுக்கு உயிர் கொடுத்து, பழனிசாமியை முதலமைச்சராக தொடர வைத்ததுதான் நாங்கள் செய்த துரோகம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 2019ல் 22 தொகுதி இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்றது. அதில், 5 தொகுதி பாமகவால் வெற்றி பெற்றீர்கள் என தெரிவித்தார். 

கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசின் முடிவுகளுக்கு கருணாநிதி சம்மதம் கூறியுள்ளார் - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

கச்சத்தீவு விவகாரத்தில், தமிழ்நாடு அரசுக்கு தெரிந்தே அனைத்து நடவடிக்கைகளும் நடைபெற்றன; கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசின் முடிவுகளுக்கு கருணாநிதி சம்மதம் கூறியுள்ளார் - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்





கன்னித்தீவு கதை கூட ஒருநாள் முடிவுறலாம். அதைவிட மர்மங்கள் நிறைந்தது எழுதித் தீரா அ.தி.மு.க.வின் ஊழல்கள்! - முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

Gold Price Hike : அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. ஆபரணத் தங்கம், சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்துள்ளது

Gold Price Hike : அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. ஆபரணத் தங்கம், சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்துள்ளது

Jaishankar On Katchatheevu Issue : வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கச்சத்தீவு விவகாரம் குறித்து செய்தியாளர் சந்திப்பு

Kalamandalam Sathyabama : பரதநாட்டியக் கலைஞர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு

பரதநாட்டியக் கலைஞர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு..


பிரபல மோகினியாட்டக் கலைஞர் ராமகிருஷ்ணனை தரக்குறைவாக விமர்சித்த பரத நாட்டியக் கலைஞரான கலமண்டலம் சத்யபாமா மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ், கேரள போலீசார் வழக்குப்பதிவு

கச்சத்தீவு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது - பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு

Breaking News LIVE : அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்ந்தது..!

தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயரும் என்று அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, குறிப்பிட்ட மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை 0.00551 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 12 சதவிகிதமும், அதற்கு முந்தைய ஆண்டு 10 சதவிகிதமும் மருந்துகளில் விலை உயர்த்தப்பட்டது. 

Breaking News LIVE : அதிரடியாக குறைந்த வணிக சிலிண்டரின் விலை.. சுங்க கட்டணம் விலை உயர்வு..!

ஏப்ரல் 1 ஆம் தேதியான இன்று சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ.30 குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி  சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் ரூ.1,930க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Background

மாதத்தின் முதல் நாள் ஏப்ரல் 1ம் தேதி இன்று என்பதால் வணிகரீதியாக பல ஏற்ற இறக்கம் ஏற்பட்டுள்ளது. மகிழ்ச்சியான செய்தியுடன் தொடங்க வேண்டும் என்றால், வணிக சிலிண்டர் விலை ரூ. 30 குறைந்து ரூ. 1930க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து, அப்படியே நம்மை எல்லாம் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. 


மேலும், தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயரும் என்று அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, குறிப்பிட்ட மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை 0.00551 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 12 சதவிகிதமும், அதற்கு முந்தைய ஆண்டு 10 சதவிகிதமும் மருந்துகளில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 


மக்களவை தேர்தல் பரப்புரையின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி வரும் 9ம் சென்னையில் ரோட் ஷோ மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், மக்களவை தேர்தலை முன்னிட்டு 6வது முறையாக தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி.


தொடர்ந்து, விளையாட்டு பக்கம் போனால் நேற்றைய போட்டியில் வெளுத்தெடுத்துள்ளார் எம்.எஸ்.தோனி. எப்போது பேட்டிங் வருவார் என்று எதிர்பார்த்த அவரது ரசிகர்களுக்கு எல்லாத்தையும் சேர்த்து வைத்து மொத்தமாக கொடுத்துள்ளார். டெல்லிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 16 பந்துகளில் 37 ரன்களை குவித்து கெத்து காட்டியுள்ளார் எம்.எஸ்.தோனி. 


இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்  மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.