Breaking News LIVE: ஹரியானா மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்ற நயாப் சிங் சைனி...

Breaking News Live: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.

ஆர்த்தி Last Updated: 12 Mar 2024 07:26 PM
ஹரியானா மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்ற நயாப் சிங் சைனி...

ஹரியானா மாநிலத்தின் பாஜக மாநில தலைவர் நயாப் சிங் சைனி, மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றார்.

Breaking News LIVE: தேர்தல் பத்திர விவரங்களை அளித்தது எஸ்.பி.ஐ. வங்கி

உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, தேர்தல் பத்திர விவரங்களை அளித்தது எஸ்.பி.ஐ.வங்கி.   தேர்தல் பத்திர நிதி விவரங்களை தர அவகாசம் தேவை என எஸ்.பி.ஐ கோரிய நிலையில், உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. 

தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திர விவரங்களை அளித்தது எஸ்.பி.ஐ வங்கி

தேர்தல் பத்திர விவரங்களை, இன்றுக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தேர்தல பத்திர விவரங்களை எஸ்.பி.ஐ வங்கி சமர்பித்தது.

Breaking News LIVE: ஜலோர் தொகுதியில் அசோக் கெலாட் மகன் போட்டி

முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ்  கெலாட் ஜலோர் தொகுதியில் போட்டியிடுகிறார். 

Breaking News LIVE: சிந்த்வாரா தொகுதியில் கமல்நாத் மகன் போட்டி

மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா தொகுதியில் நகுல் கமல்நாத் மீண்டும் போட்டியிடுகிறார். 

Breaking News LIVE: அகோக் கெலாட், கமல்நாத் மகன்களுக்கு வாய்ப்பு

முன்னாள் முதல்வர்கள் கமல்நாத், அசோக் கெலாட் மகன்களுக்கு மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது காங்கிரஸ்.

Breaking News LIVE: காங்கிரஸ் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் 2வது பட்டியலை வெளியிட்டார்.  முதல் கட்டமாக 39, இரண்டாவது கட்டமாக 43 என மொத்தம் 82 வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்.

அதிமுக கொடி , சின்னம் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு- சென்னை உயர்நீதிமன்றம்

அதிமுக சின்னம், கொடி ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்க கோரிய வழக்கில், தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.

Tejas: விபத்துக்குள்ளான இந்திய விமானப்படையின் போர் விமானம் தேஜஸ்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் அருகே இந்திய விமானப் படைக்குச் சொந்தமான இலகுரக போர் விமானமாக கருதப்படும் தேஜஸ் விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக விமானி விமானத்திலிருந்து பேராசூட்டின் மூலமாக உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Breaking News LIVE: பொது இடங்களில் சார்ஜ் போட வேண்டாம் - சைபர் கிரைம் எச்சரிக்கை..

பொது இடங்களில் இருக்கும் சார்ஜ் போர்டில் செல்போனை சார்ஜ் போட வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளார். பொது இடங்களில் சார்ஜ் போடுவதால் செல்போனில் இருக்கும் தரவுகள் திருடப்படும் வாய்ப்புகள் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

Breaking News LIVE: தேர்தல் பத்திர விவகாரத்தை திசை திருப்பவே சிஏஏ அமல் - செல்வ பெருந்தகை குற்றச்சாட்டு

தேர்தல் பத்திர விவகாரத்தை திசை திருப்பவே பாஜக இந்திய குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். 

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் ஒதுக்கீடு

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. திமுக தலைவர் ஸ்டாலின் உடனான சந்திப்புக்கு பிறகு தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. 

Breaking News LIVE: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் ஒதுக்கீடு

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். 

Breaking News LIVE: மார்க்சிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள் - சற்று நேரத்தில் ஒப்பந்தம்..

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்திப்பு நடத்தி வருகின்றனர். இந்த சந்திப்பானது தொகுதி ஒப்பந்தம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக என்று கூறப்படுகிறது. 

புதிய வந்தே பாரத் ரயில் சேவை - தொடங்கி வைத்தார் மோடி

அகமதாபாத்தில் இருந்து 10 புதிய வந்தே பாரத் ரயில்கள் மற்றும் பிற ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.





10 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைக்கும் மோடி

10 புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். சிலிகுரியில் உள்ள நியூ ஜல்பைகுரி நிலையத்திலிருந்து ஜல்பைகுரி மற்றும் பாட்னா இடையே புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸை பிரதமர்  கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.






அகமதாபாத்-மும்பை சென்ட்ரல், செகந்திராபாத்-விசாகப்பட்டினம், மைசூரு-டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் (சென்னை), பாட்னா-லக்னோ, நியூ ஜல்பைகுரி-பாட்னா, பூரி-விசாகப்பட்டினம், லக்னோ-டெஹ்ராடூன், கலபுராகி-சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா, டெர்மினல் பெங்களூரு, ராஞ்சி-வாரணாசி, கஜுராஹோ-டெல்லி (நிஜாமுதீன்) ஆகிய ரயில்களை அவர் கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார். 

Breaking News LIVE: புல்லட் ரயில் வேலை நிறைவு

புல்லட் ரயில்களுக்கான வேலை நிறைவடைந்துள்ளதாகவும் விரைவில் செயல்பாட்டிற்கு வரும் எனவும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

Breaking News LIVE: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் போதைப் பொருள்.. அதிமுக தரப்பில் மனித சங்கிலி போராட்டம்..

தமிழ்நாட்டில் போதை பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக அதிமுக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. போதை பொருள் பயன்பாட்டை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என் வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று அதிமுக தரப்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படுகிறது. 

Background

Petrol Diesel Price Today, March 12: கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 21 மாதங்களை கடந்துவிட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.


பெட்ரோல், டீசல்:


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம்


இந்நிலையில் சென்னையில் இன்று ( மார்ச் 12ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 661வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 21 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.









அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.