Breaking News LIVE: இளைஞர்கள் தமிழை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 10 Feb 2024 06:50 PM
இளைஞர்கள் தமிழை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இளைஞர்கள் தமிழை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொரோனாவில் கூட வளர்ச்சி தடைபடவில்லை - பிரதமர் மோடி

கொரோனாவில் கூட வளர்ச்சி தடைபடவில்லை என்று பிரதமர் மோடி மக்களவையில் பேசியுள்ளார்.

சீர்த்திருத்தம், செயலாக்கம், மீட்டுருவாக்கமே எங்களது தாரக மந்திரம் - பிரதமர் மோடி

சீர்த்திருத்தம், செயலாக்கம் மற்றும் மீட்டுருவாக்கமே எங்களது தாரக மந்திரம் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க புதிதாக உரிமம் வழங்கவில்லை - தமிழ்நாடு அரசு

காவிரி டெல்டா பகுதிட்யில் புதிதாக ஹைட்ரோ கார்பன் எடுக்க உரிமம் வழங்கப்படவில்லை என நீதிமன்றத்தில் தமிநாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. 

ஹைட்ரோகார்பன் எடுக்க புதிய உரிமம் வழங்கவில்லை - தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் தகவல்

காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க புதியதாக உரிமம் வழங்கப்படவில்லை என்று தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

வெள்ளை அறிக்கை வெளியிட பா.ஜ.க.விற்கு தகுதி இருக்கிறதா?

வெள்ளை அறிக்கை வெளியிட பா.ஜ.க.விற்கு தகுதி இருக்கிறதா? என்று தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார்.

Breaking News LIVE: வேலூரில் போட்டியிடும் ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதி கட்சி

ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதி கட்சி பாஜக கூட்டணியில் வேலூரில் தாமரைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

Breaking News LIVE: வழூர் கிராமத்தில் உள்ள கோயிலில் சாமி தரிசனம் செய்த நாகாலாந்து ஆளுநர்..!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வழூர் கிராமத்தில் உள்ள கோயிலில் நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் சாமி தரிசனம் செய்தார்.

Breaking News LIVE: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணம்..!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து பேருந்து நிலையம் வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

மெட்ரோ இரயில் திட்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ஒப்புதல் வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Breaking News LIVE: புதுச்சேரியில் சட்டமன்றம் நோக்கி நூற்றுக்கணக்கானோர் பேரணி

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் புதுச்சேரி சட்டமன்ற நோக்கி பேரணியில் ஈடுபட்டுள்ளனர். 

Breaking News LIVE Virat Kohli: தனிப்பட்ட காரணம்.. இங்கிலாந்து தொடரில் இருந்து முழுமையாக விலகிய விராட் கோலி..!

Virat Kohli : இங்கிலாந்து அணிக்கு எதிரான மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விராட் கோலி விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. 


Breaking News LIVE : கோவையில் யானை மரணங்கள் : AI அடிப்படையிலான அமைப்பை அறிமுகப்படுத்தும் தமிழ்நாடு அரசு

Breaking News LIVE: நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!


இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வுக்கு இன்று முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு - மே 5 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறுகிறது.

Breaking News LIVE : ஆந்திரா : நெல்லூரில் ட்ரக் - பேருந்து விபத்தில் 4 பேர் பலி, 15 பேருக்கு காயம்

Breaking News LIVE: தண்டவாள பரமாரிப்பு பணி - சென்னையில் நாளை 44 மின்சார ரயில்கள் சேவை ரத்து

சென்னையில் கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே நாளை (பிப்ரவரி 11) காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 44 மின்சார ரயில்கள் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகள் தங்கள் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Breaking News LIVE: தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

திருநெல்வேலி, கோவை, மதுரை உட்பட தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 

Breaking News LIVE: கலைஞர் நூற்றாண்டு விழா - சென்னையில் இன்று மலர் கண்காட்சி

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தயாநிதிமாறன் எம்.பி., மேயர் பிரியா உள்ளிட்டோர்கள் பங்கேற்கின்றனர். 

Breaking News LIVE: ஆந்திரா அருகே நடைபெற்ற விபத்தில் பேருந்து - லாரி மோதல் ; 7 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் நடைபெற்ற பேருந்து - லாரி மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 15 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Background

கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் 600 நாட்கள் கடந்து விட்ட நிலையில், சென்னையில்  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம்.


பெட்ரோல், டீசல்:


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  அதேசமயம் வெகு விரைவில் முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம்


இந்நிலையில் சென்னையில் இன்று (பிப்ரவரி 10ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 630வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 20 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.









அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 16 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.