Breaking News LIVE: சந்திரபாபு நாயுடுவிற்கு 14 நாள் நீதிமன்ற காவல் - ஆந்திராவில் பெரும் பரபரப்பு

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 10 Sep 2023 07:52 PM
ஜாமின் மனு தாக்கல் செய்த சந்திரபாபு நாயுடு

சந்திரபாபு நாயுடுவிற்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

ஜாமின் மனு தாக்கல் செய்த சந்திரபாபு நாயுடு

சந்திரபாபு நாயுடுவிற்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

சந்திரபாபு நாயுடுவிற்கு 14 நாள் நீதிமன்ற காவல் - ஆந்திராவில் பெரும் பரபரப்பு

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிற்கு 14 நாள் நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளது. 

தங்களைவிட பலவீனமானவர்களை துன்புறுத்த இந்து மதம் சொல்லவில்லை - ராகுல்காந்தி

தங்களை விட பலவீனமானவர்களை துன்புறுத்த வேண்டும் என்று இந்து மதத்தில் எங்கும் சொல்லப்படவில்லை என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். 

Breaking News LIVE: ஆரணி அருகே 50 சவரன் நகை கொள்ளை

திருவண்ணாமலை ஆரணி அருகே சண்முகன் என்பவர் வீட்டில் 50 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

Breaking News LIVE: வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் பானை கண்டெடுப்பு

வெம்பக்கோட்டையில் நடைபெறும் இரண்டாம் கட்ட அகழாய்வில் திரவம் வடிந்த நிலையில் கூம்பு வடிவ சுடுமண் பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Breaking News LIVE: உயிரிழந்த சிறுமி குடும்பத்திற்கு முதல்வர் ரூ.2 லட்சம் நிதியுதவி

கடலூர் திட்டக்குடி அருகே மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பல்லடம் கொலை வழக்கில் கைதானோரை குண்டர் சட்டத்தில் கைது செய்க - ஈஸ்வரன்

பல்லடம் கொலை வழக்கில் கைதானோர மீது குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜி20 மாநாடு: பிரதமர் மோடி பெருமிதம்

ஜி20 மாநாடு தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஜி20 உச்சி மாநாட்டில் சிறந்த கிரகத்திற்கான ஆக்கப்பூர்வமான விவாதங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு, நேற்று காலை மாநாடு தொடங்கியது, பாரத் மண்டபத்தில் தலைவர்கள் கலந்துரையாடியது, குடியர தலைவர் மாளிகையில் நடைபெற்ற இரவு விருந்து தொடர்பான காட்சிகள் அடங்கிய வீடியோவையும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.





Chennai Dengue Death : டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுவன் உயிரிழப்பு

Chennai Dengue Death : டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுவன் உயிரிழப்பு 


சென்னையில், டெங்கு காய்ச்சல் தீவிர பாதிப்பால், 4 வயது சிறுவன் உயிரிழப்பு. சென்னை மதுரவாயலில் தண்ணீர் தேக்கம் இருப்பதால் டெங்கு பரவி வருவதாக மக்கள் குற்றச்சாட்டு

புறப்பட்டார் அதிபர் பைடன்

ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்த்துக் கொண்டு வியட்நாம் புறப்பட்டார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அவர் தனது பயணத்தை மேற்கொண்டார்.





இங்கிலாந்து பிரதமர் வழிபாடு

டெல்லி அக்ஷர்தாம் கோயிலில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி ஆகியோர் இறைவழிபாடு நடத்தினர். 





உலக தலைவர்கள் மரியாதை

மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த காந்தி நினைவிடத்தை, வெளிநாட்டு தலைவர்கள் சுற்றி நின்று அஞ்சலி செலுத்தினர்.





காந்தி நினைவிடத்தில் உலக தலைவர்கள் மரியாதை

ஜி20 உச்சி மாநாடு இரண்டாவது நாளாக டெல்லியில் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட தலைவர்கள் ராஜ்கோட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது பிரதமர் மோடி உடனிருந்தார்

Background

Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 16 மாதங்களை கடந்தும் மாற்றமின்றி விற்பனையாகி வரும் சூழலில், இன்றைய நிலவரத்தை அறியலாம்.


பெட்ரோல், டீசல்:


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில் முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும்  முழுமையாகக் களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம்


இந்நிலையில் சென்னையில் இன்று (செப்டம்பர் 10) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி 477வது நாளாக தொடர்கிறது. அதாவது, விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது 16 மாதங்களை கடந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.









அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை 6 ரூபாய்க்கும் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” எனத்தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.