கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் முதலாமாண்டு பயின்று வந்த மாணவர் ஒருவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பேருந்து நடத்துனராக பணியாற்றி வருபவர் பழனி. இவரது 19 வயது மகன் பிரோதாஸ் குமார். இவர் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் பி.டெக் பயோடெக்னாலஜி முதலாமாண்டு படித்து வந்தார். இதனிடையே மாணவர் பிரோதாஸ் குமார், இளங்கலை வனவியல் பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் இருந்து வந்த நிலையில், அந்த துறை கிடைக்காததால் பயோ டெக் படிப்பில் விருப்பம் இல்லாமல் சேர்ந்து படித்து வந்ததாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க : கோவையில் பி.எம்.டபுள்யூ காரில் கஞ்சா கடத்திய இருவர் கைது.. இத்தனை கிலோ கஞ்சா பறிமுதல்!


இந்நிலையில் மானவர் விடுதியில் மாணவர் பிரோதாஸ் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தகவலறிந்து காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, மாணவரின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், பிரோதாஸ் குமார் விருப்பப்பட்ட துறை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், ஏற்கனவே ஒருமுறை வீட்டில் இருந்த போது தற்கொலைக்கு முயன்றதாகவும். அவரை பெற்றோர்கள் சமாதானப்படுத்தி கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து மாணவர் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது குறித்து, விடுதியில் உடன் தங்கியிருந்த மாணவர்கள், அவரது நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேளாண்மை பல்கலைக் கழகத்தில் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)


மேலும் படிக்க : ’தேசிய கொடியை கண்ணிமை போல் காப்போம்’ - கண்ணுக்குள் தேசிய கொடியை வரைந்த நகை தொழிலாளி


பழங்குடியினர் மொழிகளை காக்கும் ‘மொழிப்பெட்டி’ - ஒரு அசத்தல் முயற்சி


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண