தமிழ்நாட்டில்இருளர், காட்டுநாய்க்கர், மலையாளிஉள்ளிட்ட36 வகையானபழங்குடியினமக்கள்வாழ்ந்துவருகின்றனர். அதில்காடர், மலைமலசர், முதுவார்உள்ளிட்ட13 பழங்குடியினஇனங்களின்மொத்தமக்கள்தொகைஆயிரத்துக்கும்குறைவாகஇருந்துவருகிறது. நீலகிரிமாவட்டத்தைபொறுத்தவரை கோத்தர், தோடர், இருளர், குரும்பர், பனியர் மற்றும் காட்டு நாயக்கர் என ஆறு வகையான பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.
ஒவ்வொருபழங்குடியினரும்ஒருதனித்துவமானமொழியைபேச்சுவழக்கில்கொண்டுள்ளனர். பழங்குடிகளின் மொழிகள் பண்பாட்டின் கூறுகளையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றக் கூடியவை. ஒவ்வொரு பழங்குடியினருக்கும் தனித்துவமான கதைகள், வரலாறு, பாடல்கள், பழமொழிகள் உள்ளன. அந்த மொழிகள் பேச்சு வழக்கில் மட்டுமே இருப்பதாலும்,எழுத்து வடிவில் இல்லாததாலும் அம்மொழிகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன. மேலும்பழங்குடியினர் பேசக்கூடிய மொழிகளுக்கு அங்கீகாரம் கிடைக்காதது, பழங்குடியினரின் இடப்பெயர்வு மற்றும் சமூக, பொருளாதார காரணங்களும் பழங்குடியின மக்களின் மொழிகள் அழிவுக்குகாரணமாகஉள்ளன.
நீலகிரிமாவட்டத்தில்அழிவின்விழிம்பில்உள்ளபழங்குடியினர்மொழிகளைபாதுகாக்கபல்வேறுதரப்பினரும்முயற்சிகளைமேற்கொண்டுவருகின்றனர். அதன்ஒருபகுதியாககோத்தகிரிஅருகேஉள்ளசெம்மனாரைபகுதியில்உள்ளஅரசுஉண்டுஉறைவிடப்பள்ளியில், பழங்குடியினசெயற்பாட்டாளர்கள்பள்ளிநிர்வாகத்துடன்இணைந்து ’மொழிப்பெட்டி’ என்றதிட்டத்தைசெயல்படுத்தியுள்ளனர்.
இந்தப்பள்ளியில்குறும்பர்மற்றும்இருளர்பழங்குடியினமாணவர்கள்அதிகளவில்படித்துவருகின்றனர். இந்தமொழிப்பெட்டியில்குழந்தைகள்ஒவ்வொருநாளும்தங்களதுமொழியில்இருந்துஒருவார்த்தையைதெரிந்துகொண்டு, இருகாகிதத்தாளில்எழுதிக்கொண்டுவந்துஅவரவர்பெயரெழுதிபோடவேண்டும். மாதமொருமுறைஆசிரியர்அல்லதுபழங்குடிஇளைஞர்கள்அப்பெட்டியைதிறந்து, அதிகமாகவார்த்தைகளைஎழுதியமாணவர்களுக்குபரிசுகள்வழங்கப்படஉள்ளது. ஆண்டுஇறுதியில்இருளா, குரும்பாமொழிகளுக்கெனஅகராதிகள்குழந்தைகள்பெயரில்அச்சுக்குகொண்டுவரதிட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்துபழங்குடியினசெயற்பாட்டாளரும், எழுத்தாளருமானஒடியன்லட்சுமணன்கூறுகையில், “வாழ்க்கைச்சூழல்மாற்றம், எழுத்துவழக்கில்இல்லாதது, வணிகமொழியாகஇல்லாததுஉள்ளிட்டகாரணங்களால்பழங்குடியினமொழிகள்அழிந்துவருகின்றன. பெரும்பாலானகுழந்தைகள்தங்களதுமொழியில்உள்ளபலவார்த்தைகளைமறந்துவிட்டனர். பலர்பழங்குடியினர்மொழிகளில்பேசுவதைநிறுத்திவிட்டனர். இந்தசூழலில்அம்மொழிகளைகாக்கும்ஒருகருவியாகமொழிப்பெட்டி, தமிழ்நாட்டில்முதல்முறையாகசெயல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால்பலபழையவார்த்தைகள்கிடைக்கும். பலபுதியவார்த்தைகள்தெரியவரும். அதன்மூலம்பழங்குடியினமொழிஅகராதிகளைகொண்டுவரதிட்டமிட்டுள்ளோம். இதேபோலகாட்டுநாய்க்கர், பணியர், பெட்டகுறும்பர், கோத்தர், தோடர்மொழிகளுக்கும்மொழிப்பெட்டிசெயல்படுத்ததிட்டமிட்டுள்ளோம்.
ஒருபழங்குடியினர்மொழிஅழியும்போது, அப்பழங்குடிகளின்அடையாளம், பண்பாடும்சேர்ந்துஅழியும். வனத்திற்கும், அவர்களுக்குமானதொடர்புஅந்நியமாகும். அதனைப்போக்கபழங்குடியினகுழந்தைகள்கதைச்சொல்லும்நூலால்எழுவோம்என்றநிகழ்வைநடத்திவருகிறோம். அடுத்தகட்டமாகபழங்குடியினர்மொழிகளில்நூல்களைவெளியிடதிட்டமிட்டுள்ளோம்” எனஅவர்தெரிவித்தார்.
தொடர்ந்துபேசியஅவர், ”பழங்குடியினகுழந்தைகள்வீட்டில்ஒருமொழியைபேசிப்பழகியிருக்கும்சூழலில், பள்ளிகளில்ஆரம்பத்தில்தமிழ், ஆங்கிலத்தில்படிக்கஇயல்பாகவேசிரமம்ஏற்படுகிறது. இத்தகையசிரமங்களைபோக்கபழங்குடியினமாணவர்கள்அதிகளவில்படிக்கும்பள்ளிகளில்பழங்குடியினஆசிரியர்களைநியமிக்கவேண்டும். பழங்குடியினமொழிகளைபாதுகாக்கஅரசுசிறப்புத்திட்டங்கள்செயல்படுத்தவேண்டும்” எனஅவர்தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
