சென்னை ராயப்பேட்டையில் உள்ள ரியல் டவர் கட்ட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  இதை அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தனியார் நிறுவன கட்டிடத்தில் தீ விபத்து


சென்னை ராயப்பேட்டையில் உள்ள ராதாகிருஷ்ணன் சாலையில் ரியல் டவர் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. 


மின் கசிவு காரணமாக வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ கட்டிடத்தின் மேல் தளத்தில் உள்ள செல்போன் டவரிலும் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதனால் அப்பகுதி புகை மூட்டமாக காட்சியளித்தது. 


இந்த விபத்தின் தகவல் அறிந்து மயிலாப்பூர், தேனாம்பேட்டை மற்றும் திருவல்லிக்கேணி உள்ளிட்ட தீயணைப்பு அலுவலகங்கலில் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை வீரர்கள் வணிக வாளாகத்தில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 


இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக இராதாகிருஷணன் சாலையில் இருந்து அஜந்தா மேம்பாலம் சாலை வரை போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. பின்பு, சரி செய்யப்பட்டது. 




மேலும் வாசிக்க..


May day wishes: தொழிலாளர் தினம்: முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!


இதையும் படிங்க..


Swiggy Platform Fee: இனிமே கூடுதல் கட்டணம்.. வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்த ஸ்விக்கி...! முழு விவரம்..!