Breaking News LIVE: ஜாக்டோ- ஜியோ போராட்டம் வாபஸ்: அரசுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் அறிவிப்பு

BREAKING NEWS: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.

உமா பார்கவி Last Updated: 08 Apr 2023 01:20 PM
Breaking News LIVE: ஜாக்டோ- ஜியோ போராட்டம் வாபஸ்: அரசுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் அறிவிப்பு

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ- ஜியோ ஏப்ரல் 11ஆம் தேதி கோட்டையை முற்றுகையிடுவதாக அறிவித்திருந்த போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Breaking News LIVE : டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து

தமிழக டெல்டா பகுதிகளில் புதிதாக 3 நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய  அரசு அறிவித்துள்ளது.

Breaking News LIVE : ஜாக்டோ ஜியோ அமைப்புடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்புடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஏப்ரல் 11ல் கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்திருந்தது.

Breaking News LIVE : போலி மருத்துவர்கள் 10 பேர் கைது

திருவாரூர் மாவட்டத்தில் முறையக படிக்காமல் மருத்துவம் பார்த்த போலி மருத்துவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Breaking News LIVE : பிரதமர் சென்னை வருகை - தமிழில் ட்வீட் போட்ட பிரதமர் மோடி

சென்னை வருகையை பற்றி பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.  அதில் வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைத்து, ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழாவிலும் கலந்து கொள்ள உள்ளேன் என்று தெரிவித்திருக்கிறார்.

Breaking News LIVE : விடுதலை திரைப்படத்துக்கு ரஜினிகாந்த் பாராட்டு

விடுதலை இதுவரை தமிழ்த் திரையுலகம் பாத்திராத கதைக்களம்; இது ஒரு திரைக்காவியம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார்.

Breaking News LIVE : 12ஆம் வகுப்பு தேர்வில் காப்பி அடிக்க உதவிய ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

நீலகிரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் காப்பி அடிக்க உதவிய ஆசிரியர்கள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Breaking News LIVE : பிளாஸ்டிக் தடையை முழு அளவில் அமல்படுத்த இயலாது - தமிழக அரசு

பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக வேறு பொருட்கள் இல்லாததால் தடையை முழு அளவில் அமல்படுத்த இயலாது என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

Breaking News LIVE : பிரதமர் மோடியை வரவேற்கும் இபிஎஸ், ஓபிஎஸ்

சென்னை வரும் பிரதமர் மோடியை வரவேற்க எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Breaking News LIVE : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 1,723 கன அடியிலிருந்து 1,873 கனஅடியாக அதிகரித்துள்ளது.

Breaking News LIVE : இபிஎஸ்க்கு எதிராக விசாரணை நடத்த அனுமதி

மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு என எழுந்த புகாரில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

Breaking News LIVE : பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.

Breaking News LIVE : தைவானை சுற்றி சீனா போர் பயிற்சி - பதற்றம்

தைவான் நாட்டின் வான் மற்றும் நீர்பரப்பில் சீன போர் விமானங்கள், போர் கப்பல்கள் கடுமையான போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

Breaking News LIVE : பிரதமர் மோடி வருகை - சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்

பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Breaking News LIVE : ரேசன் கடைகளை அடைந்து இன்று போராட்டம்

தமிழகம் முழுவதும் இன்று ரேசன் கடைகளை அடைந்து போராட்டம் நடத்தப்படும் என அரசு பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

Background

உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில்,  முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றது. அந்த வரிசையில் இந்தியாவும்  முழு  களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம் 
சென்னையில் இன்று (ஏப்ரல்.08) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி இன்றோடு 322வது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.


இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது.



அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை
கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” என  தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.