Breaking News LIVE: இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

உமா பார்கவி Last Updated: 25 Apr 2023 02:57 PM
Breaking News LIVE:அரிவாளால் வெட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாட்டில்  மர்ம நபர்களால் வெட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ்(56) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

Breaking News LIVE:செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 7 டன் மாம்பழங்கள் பறிமுதல்!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் செயற்கை முறையில் ரசாயன கற்கள் வைத்து பழுக்க வைக்கப் பட்ட ஏழு டன் மாம்பழங்கள் உணவு சுகாதாரத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டது

Breaking News LIVE:உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - இந்திய அணி அறிவிப்பு

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இல் விளையாடப்போகும் இந்திய அணியின் இறுதிப் பட்டியலை பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ளது

Breaking News LIVE: தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலரை வெட்டிய மர்ம நபர்கள்

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகேயுள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலகத்தில் புகுந்து கிராம நிர்வாக அலுவலருக்கு வெட்டு.வெட்டிய மர்ம நபர்களை போலீஸ் தேடிவருகிறது.

Breaking News LIVE:12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம்.

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 5 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் தற்போது  தேர்வு முடிவுகள் மே 7 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்று முடிந்த பின் அறிவிக்கப்படும் என  அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Breaking News LIVE:எப்ரல் 27இல் ipl போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்.

எப்ரல் 30 இல் சென்னை- பஞ்சாப் அணிகளுக்கு இடையில் சேப்பாக்கத்தில்  நடக்கவிருக்கும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை வருகிற 27 ஆம் தேதி தொடங்கும்.

Breaking News LIVE : சென்னையில் 366 புதிய கழிவறைகள் - மாநகராட்சி

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 366 புதிய கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Breaking News LIVE : மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளை கண்டறியும் பணி துவக்கம்

தமிழகத்தில் மூடப்படவுள்ள 500 டாஸ்மாக் கடைகளை கண்டறியும் பணி தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Breaking News LIVE:தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளை மூட கணக்கெடுப்பு!

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் தெரிவித்திருந்த நிலையில்.முடப்படப்போகும் கடைகளை தேர்வு செய்யும் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

Breaking News LIVE : இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

வேங்கைவயல் விவகாரம் - 8 பேர் ரத்த மாதிரி தர மறுப்பு..

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக டி.என்.ஏ பரிசோதனைக்காக இன்று 11 பேரிடம் ரத்த மாதிரி சேகரிப்பு நடைபெற்று வந்தது. இந்த ரத்த மாதிரி சேகரிப்பின் போது 8 பேர் ரத்த மாதிரி தர மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Breaking News LIVE : வேங்கைவயல் விவகாரம் - ரத்த மாதிரி சேகரிப்பு

வேங்கைவயல் விவகாரத்தில் டிஎன்ஏ பிரிசோதனைக்கான ரத்த மாதிரி சேகரிப்பு பணி தொடங்கியது.

Breaking News LIVE: மல்யுத்த வீராங்கனைகளின் மனு ஏற்று விசாரிக்கப்படும் -உச்சநீதிமன்றம்

 மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டு குறித்த மனுவை ஏற்று விசாரிப்பதாக  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவித்துள்ளார்.

Breaking News LIVE : சேலம் நீதிமன்றத்தில் ஜி.கே.மணி ஆஜர்

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 2019 - ல் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜி.கே.மணி உட்பட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


வழக்கு தொடர்பான விசாரணைக்கு சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் என் ஒன்றில் ஜி.கே மணி, சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள், வன்னியர் சங்க மாநில செயலாளர் கார்த்தி உட்பட ஐந்து பேர் ஆஜராகி உள்ளனர்.

Breaking News LIVE : விபத்து வழக்கில் நடிகை யாஷிகா நீதிமன்றத்தில் ஆஜர்

கார் விபத்து வழக்கில் நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார்.

Breaking News LIVE : வேங்கைவயல் விவகாரம் - ரத்த மாதிரி பரிசோதனைக்கு 3 பேர் ஆஜர்

வேங்கைவயல்  விவகாரத்தில் டிஎன்ஏ பரிசோதனைக்கான ரத்த மாதிரி பரிசோதனைக்கு 3 பேர் வந்துள்ளனர்.

Breaking News LIVE : வி.பி.ராமன் சாலை பெயர் பலகையை திறந்து வைத்தார் முதல்வர்

சென்னையில் வி.பி.ராமன் சாலை பெயர் பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார்.

Breaking News LIVE :இந்தியாவில் ஒரே நாளில் 6,934 பேருக்கு கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 6,934 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் 24 பேர் உயிரிழந்தனர்.

Breaking News LIVE :மே 1-ல் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவு

மே 1-ஆம் தேதி கிராம சபை கூட்டங்களை நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு.

Breaking News LIVE : தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ. 45,040க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Breaking News LIVE : செட்டிநாடு குழுமத்தில் அமலாக்கத்துறை 2வது நாளாக சோதனை

செட்டிநாடு குழும நிறுவன இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

Breaking News LIVE : டிஎன்ஏ சோதனை - இன்று ரத்த மாதிரி சேகரிப்பு

வேங்கைவயல் விவகாரத்தில் டிஎன்ஏ பரிசோதனை நடத்த இன்று 11 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்படுகிறது.

Breaking News LIVE: மதுரை மாவட்டத்துக்கு மே 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

கள்ளளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வை ஒட்டி வரும் மே 5ஆம் தேதி மதுரைக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் அறிவித்துள்ளார்.

Breaking News LIVE : பல்லடம் அருகே ஜல்லிக்கட்டு தொடங்கியது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அலகுமலை கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

Breaking News LIVE : பாஜக நிர்வாகிகள் இன்று ஆளுநருடன் சந்திப்பு

சென்னையில் இன்று மாலை 5 மணிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக நிர்வாகிகள் சந்தித்து பேசுகின்றனர்.

Breaking News LIVE : திருச்செந்தூரில் 4 செ.மீ மழை பதிவு

தமிழகத்தில் அதிகபட்சமாக திருச்செந்தூரில் 4 செ.மீ, சேலம்  ஏற்காட்டில் 2 செ.மீ மழை பதிவானது.

Breaking News LIVE : பழனியில் இன்று, நாளை ரோப் கார் சேவை ரத்து

திண்டுக்கல் பழனி முருகன் கோயிலில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரோப் கார் சேவை இன்று, நாளை ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Breaking News LIVE : மலேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 544 கி.மீ தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Breaking News LIVE : திருத்தணி முருகன் கோயிலில் பிரம்மோற்சவ விழா துவங்கியது

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Breaking News LIVE : அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Background

சென்னையில் 11 மாதங்களை கடந்தும் மாற்றமில்லாமல் விற்பனையாகி வரும் பெட்ரோல், டீசல் விலையின் இன்றைய நிலவரத்தைக் காணலாம்.


அன்றாட வாழ்வில் எரிபொருளின் பங்கு 


உலகமே எரிபொருளை மையமாகக் கொண்டு தான் இயங்கி வரும் வேளையில்,  முழுமையான மின்சார சக்தியில் செயல்படும் அளவிற்கு உலக நாடுகள் தங்களை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகின்றது. அந்த வரிசையில் இந்தியாவும்  முழு  களம் கண்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் சம்பந்தமான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.  இதனால்  வெகு விரைவில்  முற்றிலுமான மின்மயமான நாட்டினை நோக்கி இந்தியா தன்னை நகர்த்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவை பொறுத்தவரை 80% வாகனங்கள் பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை  நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.


இன்றைய விலை நிலவரம் 


சென்னையில் இன்று (ஏப்ரல்.25) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயமானது தொடர்ந்து மாற்றமின்றி இன்றோடு 339வது நாளாக நீடித்து வருகிறது. முன்னதாக கடந்த 2020, 2021 ஆம் ஆண்டுகளில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்தனர்.


இதனைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் விலையை ரூ.10ம் குறைத்தது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. அன்றைய தினம் சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ 101.40க்கும் டீசல் விலை ரூ 91.43க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர்  5 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  மாற்றம் ஏற்பட்டது.


அப்போது கலால் வரி குறைப்பால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் குறைந்தது.   இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி 10 மாதங்களை கடந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை


கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த 'தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்கு தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக 2025 ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” என  தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நான் நம்புகிறேன்" என் கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய ஹர்தீப் சிங் பூரி, "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம். இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது.


பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு, நமது நாட்டிற்கு 1,000 கோடி லிட்டர் கொள்ளளவு தேவைப்படுகிறது. 450 கோடி லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 400 கோடி லிட்டருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 20 சதவிகித கலப்பிற்கான போதுமான எத்தனால் கைவசம் உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து பெட்ரோலிலும் 20 சதவீதம் எத்தனால் இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.