தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. நேற்று இந்த சீரியலில் கடத்தப்பட்ட மாரியை சூரியாவும் விக்ரமும் சேர்ந்து மீட்டெடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


அதாவது ஆபிசில் டீல் அக்ரீமெண்ட்டில் கையெழுத்து போட்டு விட அங்கு வரும் மாரி இவர்களிடம் வாக்குவாதம் செய்து அரவிந்தை உசுப்பேற்ற, ஒரு கட்டத்தில் அவன் நான் நியாயமாகவே ஜெயித்து காட்டுறேன் என்று சொல்ல, சூர்யா இருப்பதால் தாரா எதுவும் பேச முடியாமல் அமைதியாகவே இருக்கிறாள். 


அதனைத் தொடர்ந்து அரவிந்த் “எனக்கு இந்த டீலிங் வேண்டாம்” என்று சொல்ல, மாரி “உண்மையா தானே சொல்ற?” என்று கேட்க அவனும் “ஆமாம், உனக்கு தேவி பெயரில் இது பண்ணுவது தானே பிரச்சனை, நான் என் அம்மா பெயரில் செய்து ஜெயித்து காட்டுறேன்” என்று சொல்கிறான். உடனே மாரி “அப்படினா இந்த டாகுமெண்ட் எதுக்கு?” என்று சொல்லி அதை கிழித்து போட்டு விட்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறாள். 


அடுத்து கோமாவில் இருந்த் டாக்டர் கண் விழித்து விட்டதாகத் தகவல் கிடைக்க சூர்யா “இவர் மூலமாக ஏதாவது உண்மைகள் கிடைக்கும். அதை வைத்து ஜாஸ்மின் முகத்திரையை கிழிக்கலாம்” என கிளம்பிச் செல்கிறான். தாராவுக்கும் டாக்டர் கண் விழித்த விஷயம் தெரிய வர, ஜாஸ்மின் “நான் மாட்டிடுவேன் போல இருக்கு, காப்பாற்றுங்க” எனக் கெஞ்ச கருப்பு உருவத்தை வைத்து டாக்டரை கொல்ல பிளான் போடுகிறாள் தாரா. 


பிறகு ஹாஸ்பிடலுக்கு வரும் கருப்பு உருவம் தலையணையை வைத்து டாக்டரை கொல்ல முயற்சிக்க சூர்யா அங்கு வந்து விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


மேலும் படிக்க


Velachery Cave : ”வேளச்சேரியில் ஏற்பட்ட திடீர் பள்ளம் – 3 நாட்களாக நடக்கும் மீட்பு பணி” உள்ளே விழுந்தவர்களின் கதி என்ன..?


'மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசு வேலை..' முதலமைச்சரான பிறகு ரேவந்த் ரெட்டி போட்ட முதல் கையெழுத்து


Rajnath Singh: மோடிக்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்: உறுதி அளித்த அமைச்சர் ராஜ்நாத் சிங்!