தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சீதா கல்பனாவுக்கு காபியில் மிளகாய் தூளை கலந்து கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


அதாவது, சீதா ராமிடம் வந்து “நான் ஒரு தப்பு பண்ணிட்டேன்” என கல்பனாவுக்கு காபியில் மிளகாய் தூளை கலந்து கொடுத்த விஷயத்தை சொல்கிறாள். ராம் “நீ பண்ணது தப்பு கிடையாது, சரியாக தான் பண்ணிருக்க” என்று ராம் சொல்ல சீதா  “இப்போ அவங்க மூணு பேரும் சேர்ந்து சண்டைக்கு வருவாங்க” என்று சொல்கிறாள். 


அதற்கேற்றார் போல நடந்த விஷயங்களை சொல்லி கல்பனா அர்ச்சனா மற்றும் மகாவுடன் கிளம்பி வர, சீதா காய்ச்சல் வந்தது போல் இழுத்து போத்திக் கொண்டு டிராமா போடுகிறாள். ராம் அவளுக்கு மருந்து கொடுத்து கொண்டு “மூன்று மணி நேரமாக உடம்பு சரியில்ல, படுத்திட்டே இருக்கா” என்று சொல்லி அவரும் பெர்பாமன்ஸை போடுகிறார். 


அதன் பிறகு இவர்கள் ரூமில் இருந்து வெளியே வந்த பிறகு, சீதா மீண்டும் கல்பனாவை சந்தித்து “இன்னொரு  தடவை இப்படி பண்ணா மண்டையிலேயே போட்டுடுவேன்” என்று வார்னிங் கொடுக்கிறாள். அதனைத் தொடர்ந்து ராம் சேதுவை சந்தித்து ஷேரை சீதா பெயருக்கு மாற்றி எழுதியதற்காக மன்னிப்பு கேட்க, அவர் “நீ பண்ணது தான் சரி” என்று சொல்கிறார். இதையெல்லாம் ஒட்டுக் கேட்கும் சுபாஷ் கடுப்பாகிறார். 


பிறகு மகா வீட்டிற்கு குருஜியை வரவைத்து பூஜை செய்து எல்லாருக்கும் பிரசாதத்தை நெற்றியில் வைத்து விடுகிறாள். இறுதியாக சீதா வந்து நிற்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய சீதாராமன் எபிசோட் நிறைவடைகிறது.


மேலும் படிக்க: Ra. Sankaran: தமிழ் சினிமாவில் அடுத்த சோகம்.. உடல்நலக்குறைவால் மூத்த இயக்குநர் ரா.சங்கரன் காலமானார்..


Mysskin - Pandiarajan : மிஷ்கின் போட்ட கண்டிஷன்... ஆடிப்போன பாண்டியராஜன்... அஞ்சாதே அனுபவம் பகிர்ந்த இயக்குநர்!