ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மாயா அம்மன் சிலைக்கு மிளகாய் அரைத்து பூசிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.


அதாவது, மாயாவுக்கு உடம்பில் எரிச்சல் வராமல் இருக்க, செந்தில் மிளகாய் அரைத்து பூச உமா வடிவேலுவை பார்த்து கண்ணை காட்ட, வடிவேலு தலை ஆட்ட செந்திலுக்கு உடம்பெல்லாம் எரிய தொடங்க அமுதா, அன்னம், மாணிக்கம் ஷாக் ஆகி பார்க்க பழனி, உமா சிரிக்கின்றனர். பிறகு செந்தில் அன்னலட்சுமியிடம் நான் எந்த தப்பு பண்ணலம்மா என சொல்கிறான்.


இதனைத் தொடர்ந்து பஞ்சாயத்தில் திடீரென அரிவாள் வந்து விழ அனைவரும் திரும்பி பார்க்க, அமுதாவின் அப்பா சிதம்பரமும் செல்வாவும் வர சிதம்பரம், “என் மாப்பிள்ளை மேல பொய்யா பழி போட்டது யாரு, என் மாப்பிள்ளை சொக்கத் தங்கம்” என வாதிட, செல்வா “இவங்க கிட்ட பேசி ஒண்ணும் பிரோயஜனம் கிடையாது, எப்படி டீல் பண்ணனுமோ அப்படி டீல் பண்ணிக்கலாம்” என சொல்லிவிட்டு நகர்கின்றனர்.


பஞ்சாயத்தார் செந்திலிடம் “அம்மன் சொல்றதை நீங்க கேட்டுத்தான் ஆகனும்” என சொல்ல, மாயா “அவரு என் கழுத்துல மீண்டும் தாலி கட்டி அவரோட மனைவியா என்னை ஏத்துக்கனும்” என சொல்கிறாள். அமுதா “என் புருஷன் நிரபராதின்னு நிரூபிக்க எனக்கு ஒரு மாசம் அவகாசம் குடுங்க” எனக் கேட்க, மாயா, “அந்த ஒரு மாசமும் நான் அவரோட வீட்டுல தான் இருப்பேன்” என சொல்ல அமுதா அதற்கு சம்மதம் சொல்கிறாள்.


ப்ளாஷ் கட்டில் செந்தில் பாத்ரூமில் குளிக்கப் போக, வடிவேலு அதில் உடம்பு அரிக்க பவுடர் கலந்து தெரிய வருகிறது. உமா வடிவேலுக்கு பணம் குடுத்து நான் சொன்ன மாதிரி நீ பண்ணதால அவனுக்கு உடம்பு எரிந்தது என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய அமுதாவும் அன்னலட்சுமியும் எபிசோட் நிறைவடைகிறது.


மேலும் படிக்க: Shriya Saran: 41ஆவது பிறந்தநாள்... மகள், கணவருடன் மண்பாண்ட கிளாஸ்... ஜாலி சுற்றுலா ஃபோட்டோ பகிர்ந்த ஸ்ரேயா!


Killer Of The Flower Moon : லியோனார்டோ டிகாப்ரியோவின் இந்தப் படத்தை தவறவிடாதீங்க.. ‘கில்லர்ஸ் ஆஃப் தி ப்ளவர் மூன்’ ரிலீஸூக்கு ரெடி!