விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் வகைவகையாக உணவுகளை பாக்கியா ஆர்டர் செய்ய வியப்புடன் பார்க்கிறார் ஈஸ்வரி. "உனக்கு எப்படி பாக்கியா இதெல்லாம் தெரியும்?" எனக் கேட்க, "நான் இப்போ செஃப் தெரியும்ல" என பெருமையாக சொல்கிறாள். அனைவரும் சந்தோஷமாக பரிமாறி உணவை ருசிக்கிறார்கள். 


கணேஷை வீட்டில் காணவில்லையே என பதட்டமாக  இருக்கிறார் கணேஷின் அப்பா. அவன் சொன்னாலும் கேட்காமல் வெளியே போய் வருகிறேன் என சொல்லிவிட்டு சென்றுள்ளான் என்கிறார் கணேஷின் அம்மா. அந்த சமயத்தில் அமிர்தா போன் பண்ணி பேசுகிறாள். தன்னுடைய கனவில் கணேஷ் வந்து துரத்துவது போல மிகவும் பயங்கரமான கனவு கண்டதை  சொல்லி வருத்தப்படுகிறாள்.


"இது வரையில் அப்படி ஒரு கனவு வந்ததே இல்லை. ஆனால் இது மிகவும் பயமாக இருந்தது. உங்களை பயமுறுத்த வேண்டும் என சொல்லவில்லை. எனக்கு உறுத்தலாக இருந்தது அதனால் தான் சொன்னேன்" என்கிறாள் அமிர்தா. அமிர்தாவிடம் இருந்து போனை வாங்கிப் பேசிய எழில் "நீங்க அதெல்லாம் ஒன்னும் பயப்படாதீங்க அம்மா. கணேஷ் அமிர்தாவை ஏன் துரத்தப் போகிறார். அமிர்தா நல்லா  இருக்கணும் என்றுதான் நினைப்பார்" என பேசிக்கொண்டே இருக்கும்போது, கணேஷ் அங்கே வர அம்மா பிறகு பேசுகிறேன் என சொல்லி போனை வைத்து விடுகிறார். 


 



யாரிடம் பேசிக் கொண்டு இருந்தீங்க என கணேஷ் கேட்க "தெரிஞ்ச பையன் ஒருத்தன் கிட்ட சொல்லி அமிர்தாவை பற்றி விசாரிக்க சொன்னேன்" என சொல்லி சமாளிக்கிறார் கணேஷின் அம்மா. "நீ எங்க போன?" என அப்பா கேட்க "அமிர்தா ஊருக்கு போய் விசாரிக்க போனேன். ஆனால் அவங்க வீடு பூட்டி இருந்ததால என்ன செய்வது என தெரியாமல் திரும்பி வந்துட்டேன்" என்கிறான் கணேஷ்.


"அது தான் நாங்க விசாரிக்கிறோம் என சொல்லி இருக்கிறோம் இல்லையா. நீ போய் ரெஸ்ட் எடு" என்கிறார்கள். அமிர்தாவையும் நிலா பாப்பாவையும் பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை என புலம்புகிறான் கணேஷ், 


பாக்கியா செழியனுக்கு போன் செய்து "எனக்கு என்னவோ நீ தப்பு பண்ணற மாதிரி இருக்கு. ஜெனி வீட்டுக்கு போய் ஜெனியை பார்த்துட்டு வா. வளைகாப்பு முடிஞ்சு அவளை வீட்டுக்கு அனுப்ப வேண்டாம் என எப்படி எல்லாம் அழுத. இப்போ என்னனா அவளை போய் பார்க்க கூட உன்னால முடியல" என திட்டி ஜெனி வீட்டுக்கு போக சொல்கிறாள் பாக்கியா. 


வேறு வழியில்லாமல் செழியனும் ஜெனியை பார்க்க அவளுடைய வீட்டுக்கு போகிறான். ஜெனி செழியனிடன் "இன்னைக்கு நைட் நீ என்னோட இருக்கியா? டெலிவரி தேதி நெருங்க நெருங்க எனக்கு ரொம்ப பதட்டமா இருக்கு" என்கிறாள் ."அதெல்லாம் பயப்படாத நாங்க எல்லாரும் உன்னோட தான் இருக்கோம்" என சொல்லி அவளை சமாதானம் செய்கிறான் செழியன்.  


 



பாக்கியா அனைவரிடமும் எல்லாத்தையும் பேக் பண்ணிடுங்க. காலையில நாம கிளம்பலாம் என சொல்கிறாள். அடுத்த நாள் காலை ஈஸ்வரி கோபிக்கு போன் செய்து "நாங்கள் இப்போ ஊருக்கு கிளம்ப போறோம் கோபி, அது தான் உன்கிட்ட சொல்லலாம்னு போன் பண்ணேன்" என்கிறார். 


பிறகு கோபி இனியாவுக்கு போன் செய்து உங்க அம்மாகிட்ட போனைக் குடு என்கிறார். "போகும்போது என்னென்ன பிரச்சினை பண்ண முடியுமோ அதை எல்லாம் நீ நல்லா பண்ணிட்ட. வரும் போதாவது என்னோட பொண்ணையும் அம்மாவையும் பத்திரமா கூட்டிட்டு வா. அவங்க இரண்டு பேருக்கும் ஏதாவது ஆச்சு" என கோபி சொல்ல "என்ன பண்ணுவீங்க? கொலை பண்ணிடுவீங்களா? இல்ல தலையை எடுத்துடுவீங்களா?" என அதிரடியாக பதிலடி கொடுக்க ஷாக்காகிறார் கோபி. அத்துடன் இன்றைய  பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது.