மறைந்த விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். நேற்று   நடிகர்கள் சிவக்குமார் மற்றும் கார்த்தி அஞ்சலி செலுத்திய நிலையில் இன்று சூர்யா விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி விட்டு, சிறிது நேரம் சமாதியில் மெளனமாக அமர்ந்திருந்தார். 


அஞ்சலி செலுத்திய சூர்யா 


ஆரம்ப காலக்கட்டத்தில் நேருக்கு நேர், காதலே நிம்மதி, சந்திப்போமா ஆகிய படங்களில் நடித்த சூர்யாவுக்கு, 1999ஆம் ஆண்டு விஜயகாந்த் உடன் இணைந்து நடித்த பெரியண்ணா திரைப்படம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. விஜயகாந்த் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்த காலக்கட்டம் அது. விஜயகாந்த் உடன் இணைந்து நடித்த பின் தான், சூர்யாவுக்கு பூவெல்லாம் கேட்டுப்பார், நாந்தா உள்ளிட்ட திரைப்படங்கள் கிடைத்தது. எனவே விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த சூர்யா நேரில் வருவார் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இன்று விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். 


சிவக்குமார், கார்த்தி அஞ்சலி


விஜயகாந்த் மறைவின் போது வெளிநாட்டில் இருந்ததால் நடிகர் சிவகுமார், கார்த்தி, சூர்யா ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியவில்லை என்று தகவல் வெளியானது. இதனால் வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பியதும், நேற்று காலை சிவக்குமார், கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் விஜயகாந்தின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.


பின்னர் பேசிய கார்த்தி, “கேப்டன் நம்மகூட இல்லங்கிறத ஏத்துக்க முடியல. அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு மரியாதை செய்யமுடியாதது எனக்கு வாழ்நாள் முழுக்க ஒரு பிழையாகவே இருக்கும். கேப்டன் உடன் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்ததில்லை. அவர் போலீசா நடிச்சா அந்த படத்தை தவறாமல் 10 தடவையாச்சும் பார்ப்பேன். நான் நடிகர் சங்கத்துல ஜெயிச்சதுக்கு அப்புறமா கேப்டனை சந்திக்கும்போது சந்தோஷமா பேசினார். நடிகர் சங்கத்தில் நாங்கள் பெரிய சவால்களை சந்திக்கும்போது அவரை நினைத்துக்கொள்வோம்”. இவ்வாறு அவர் பேசினார்.


மேலும் படிக்க 


ரெய்டு நடத்த வந்த அமாலாக்கத்துறை அதிகாரிகள்; சராமாரியாக தாக்கிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர்


Actor Suriya: சாப்பாடு ஊட்டி விட்டார்.. விஜயகாந்தைப் போல யாரும் இல்லை ; கண்ணீர் மல்க பேசிய நடிகர் சூர்யா


Safest City: வேற லெவல்! பெண்கள் பாதுகாப்பில் முன்னோடியாக விளங்கும் நம்ம சென்னை! வட மாநிலங்களின் கதி?