Jayam Ravi: கண்ணீர் சிந்திய ஜெயம் ரவி.. உடன்பிறந்தவர்களின் படிப்பு செலவை ஏற்பதாக உறுதி..

உயிரிழந்த ரசிகரின் வீட்டிற்கு நடிகர் ஜெயம் ரவி நேரடியாக சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Continues below advertisement

உயிரிழந்த ரசிகரின் வீட்டிற்கு  நடிகர் ஜெயம் ரவி நேரடியாக சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார். 

Continues below advertisement

நடிகர் ஜெயம் ரவியின் தீவிர ரசிகராக இருந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது வீட்டுக்கு நேரடியாக சென்ற ரவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ரவி, அவர்களது உடன்பிறந்தவர்களின் படிப்பிற்கான மொத்த செலவையும் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தார். 



ஜெயம் ரவியின் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் பூமி. டிஸ்னி + ஹாட் ஸ்டார் ஓடிடித்தளத்தில் வெளியான இந்தப்படம் படுதோல்வி அடைந்தது.  இழந்த மார்க்கெட்டை மீண்டும் மீட்டெடுக்கும் நோக்கில் தற்போது  ‘அகிலன்’ படத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார். முன்னதாக ஜெயம் ரவி நடிப்பில் பாக்ஸிங்கில் நடக்கும் அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட  ‘பூலோகம்’ படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் இந்தப்படத்தை இயக்குகிறார்.

பிரியா பவானிஷங்கர், தன்யா ரவிச்சந்திரன், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப்படம் வருகிற செப்டம்பர் 15 ஆம் வெளியாக இருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படத்திலும் ஜெயம் ரவி நடித்து வருகிறார்.

 

இந்தப்படத்தில் இவருடன்,  சீயான் விக்ரம், கார்த்தி, பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யாராய், த்ரிஷா, பார்த்திபன், ஜெயராம், விக்ரம்பிரபு, சரத்கு மார், பிரபு, நிழல்கள் ரவி, ரஹ்மான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola