‘கேவலமான நோக்கம்’.. திருமண வதந்தி பரப்பியவர்களை வெளுத்து வாங்கிய சாய் பல்லவி!


தனக்கு திருமணம் என வதந்தி பரப்பியவர்களைக் கண்டித்து நடிகை சாய் பல்லவி பதிவிட்டுள்ளார். “உண்மையில் நான் வதந்திகளைப் பற்றி கவலைப்படுவதில்லை, ஆனால் அது குடும்ப நண்பர்களை உள்ளடக்கியிருந்தால், நான் பேச வேண்டும். எனது படத்தின் பூஜை விழாவில் இருந்து ஒரு படம் வேண்டுமென்றே க்ராப் செய்யப்பட்டு, பணம் கொடுத்தும் கேவலமான நோக்கத்தோடும் பரப்பப்பட்டது. மேலும் படிக்க


விக்ரம், மாஸ்டர் படங்கள விட கம்மி நேரம் தான்.. லியோ படத்தின் ரன்னிங் டைம் இதுதான்!


விஜய்யின் 'லியோ’ படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகி விஜய் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. விஜய் - லோகேஷ் கனகராஜ் இருவரும் மாஸ்டர் படத்துக்குப் பிறகு இணைந்து, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘லியோ’. வரும் அக்டோபர் 19ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் நாளுக்குநாள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. மேலும் படிக்க


உண்மை கதையில் ஸ்கோர் செய்யப்போகும் த்ரிஷா.. ட்ரெண்டிங்கில் “தி ரோடு” பட ட்ரெய்லர்..!


ஒவ்வொரு உயிரையும் குடிக்கும் உண்மை கலந்த விபத்து சம்பவத்தை அடிப்படையாக கொண்ட த்ரிஷாவின் தி ரோடு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. பொன்னியின் செல்வன் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பிறகு விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் லியோ படத்தில் த்ரிஷா நடித்துள்ளார். அடுத்ததாக அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் விடா முயற்சி படத்திலும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படிக்க


பாலிவுட்டிலும் தடம் பதித்து சாதித்த அட்லீ... சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவல்..


இயக்குனர் அட்லீ பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக தனது கரியரைத்  தொடங்கினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எந்திரன் மற்றும் தளபதி விஜய்யின் நண்பன் போன்ற திரைப்படங்களில் இணை இயக்குநராக 5 ஆண்டுகள் பணியாற்றினார்.  இயக்குநர் அட்லியின் உண்மையான பெயர் அருண்குமார். அட்லீ என்பது அவருடைய செல்லப்பெயர் என சொல்லப்படுகின்றது. வீட்டில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை அட்லீ என்று தான் அழைப்பார்களாம். மேலும் படிக்க


’நீதிமன்றத்தை விட நீங்கள் ஒன்றும் பெரிய ஆள் இல்லை’ விஷாலை கண்டித்த உயர்நீதிமன்ற நீதிபதி


லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், உத்தரவிட்டும் ஆவணங்களை சமர்பிக்காத நடிகர் விஷாலை சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது.  நடிகர் விஷால் சொந்தமாக விஷால் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதில் அவர் பட தயாரிப்புக்காக, பிரபல பைனான்சியர் அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.21.29 கோடி கடன் பெற்றிருந்தார். மேலும் படிக்க