சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் கதிரும் ஞானமும் அண்ணனை தேடி போகிறோம் வரும் போது அண்ணனோடு தான் திரும்பி வருவோம் என சொல்லி கண்கலங்கும் அம்மாவை சமாதானம் செய்து தைரியமாக இருக்க சொல்லி கிளம்புகிறார்கள். 


 



ஈஸ்வரி, குணசேகரனை தேடி கண்டுபிடிக்க ஜீவானந்தத்தின் உதவியை கேட்பதற்காக அவரை சந்திக்க செல்கிறாள். நந்தினியும் ரேணுகாவும் இது சரியா வருமா என யோசிக்க ஈஸ்வரி எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதற்காக அப்படியேவிட முடியாது என சொல்லி கிளம்புகிறாள். 


கெளதம் தனக்கு தெரிந்த நண்பன் மூலம் ஜீவானந்தம் மனைவியை கொன்றது யார் என்ற தகவல் கிடைக்கிறது. ஆதி குணசேகரன், கதிர் மற்றும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கிள்ளிவளவன் தான் அதற்கு காரணம் என்பதை அவன் மூலம் தெரிந்து கொள்கிறான். தகவல் சொன்னவனின் நண்பன் ஒருவன் வளவனின் டீமில் இருந்ததால் அவன் போதையில் அனைத்தையும் உளறியுள்ளான். இதை கேட்டதும் கெளதம் குணசேகரனுக்கு ஒரு முடிவு கட்ட கெளதம் கிளம்புகிறான். 


 



ஜான்ஸி ராணி சமையல் அறையும் தனது ராஜாங்கத்தை ஆள தொடங்கிவிட்டாள். விசாலாட்சி அம்மாவிடம் நியாயம் கேட்க போனாலும் நந்தினிக்கு ரேணுகாவுக்கும் ஏமாற்றம் தான் மிஞ்சியது. விசாலாட்சி அம்மா ஜான்ஸி ராணியே சமைக்கட்டும் என சொல்லிவிட்டுகிறார். ஜான்ஸி ராணியும் கரிகாலனும் குணசேகரன் சொத்தை எப்படி அபகரிப்பது என்பது பற்றி பேசுகிறார்கள். 


ஜீவானந்துத்தை சந்தித்த ஈஸ்வரி குணசேகரன் லெட்டர் எழுதி வைத்து வீட்டை விட்டு  சென்றதை பற்றி சொல்லி அவரின் உதவியை கேட்கிறாள். ஜீவானந்தமும் தன்னால் முடித்த அளவு முயற்சி செய்வதாக தெரிவிக்கிறார். வெண்பாவை பற்றி அவர் கவலை படும் போது ஈஸ்வரி வெண்பாவை தான் பார்த்து கொள்வதாக சொல்கிறாள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.


அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.


ஜான்ஸி ராணி விசாலாட்சி அம்மாவிடம் ரேணுகாவையும், நந்தினியையும் போட்டு கொடுக்கிறாள். "அப்பத்தா சொல்ற மாதிரி அடுத்தடுத்த கட்டத்துக்கு முன்னேறி போய்கிட்டே இருக்கணுமாம்... அது என்ன கட்டம்னு கேட்டு சொல்லுங்க" என ஜான்ஸி ராணி விசாலாட்சி அம்மாவிடம் சொல்கிறாள். கொந்தளித்த நந்தினி "ஏய் அவ்வளவு தான் உனக்கு மரியாதை சொல்லிட்டேன்" என்கிறாள். உடனே விசாலாட்சி அம்மா "இத பாருங்கடி இத்தோட எல்லாத்தையும் நிப்பாட்டுங்க போதும்" என்கிறார். ஜான்ஸி ராணிக்கு ஒரே குதூகலமாக இருக்கிறது. 


 



அப்போது கார் ஒன்று வீட்டுக்குள் நுழைகிறது. அதை பார்த்து கரிகாலன் "ஐயோ அத்தை, அடுத்த இடி வந்துருச்சு..." என்கிறான். யார் வந்து இருப்பது என எட்டி பார்த்து அனைவரும் ஷாக்காகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட். 


 



யார் காரில் வந்து இறங்குவது என்பது ஒரே சஸ்பென்சாக இருக்கிறது.குணசேகரன் கதாபாத்திரத்தின் காட்சிகள் இல்லையென்றாலும் பரபரப்பு குறையாமல் நகர்ந்து வரும் எதிர்நீச்சல் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.